எனது முயற்சியில் ஒரு கிறிஸ்துமஸ் வீடியோ.
"சமாதான பிரபு இயேசுகிறிஸ்து பிறந்த நன்னாளில்
உலகம் முழுதும் சமாதானம் நிலவ பிரார்த்திப்போம்"
எனது எண்ணங்களும் எழுத்துக்களும
எனது முயற்சியில் ஒரு கிறிஸ்துமஸ் வீடியோ.
"சமாதான பிரபு இயேசுகிறிஸ்து பிறந்த நன்னாளில்
உலகம் முழுதும் சமாதானம் நிலவ பிரார்த்திப்போம்"
இசைப்புயல் என்று வர்ணிக்கப்படும் உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கடந்த 15 வருடமாக இணைந்து பணியாற்றி வந்தவர் தான் திரு.ஸ்ரீதர் அவர்கள். ரஹ்மானுடன் கடந்த 15 ஆண்டுகளில் எந்த நிலையிலும் மனவருத்தம் கொள்ளாமல் இருந்திருக்கிறார்.
ரஹ்மானின் முதல் சினிமாவான ரோஜாவிலிருந்து தற்போதைய (அமீர்,அசின் நடித்துள்ள) ஹிந்தி சினிமாவான கஜினி வரை தனது கடின உழைப்பை கொட்டியிருக்கிறார்.கஜினியின் இறுதி இசை வடிவமைப்பிற்காக பல நாட்கள் அதிகாலை மூன்று மணி வரையிலும் ரஹ்மானுடன் பணியாற்றிருக்கிறார்.
ரஹ்மானின் மேடைக் கச்சேரிகளுக்கும், இசை நிகழ்ச்சிகளுக்கும் இவரது பங்கு மிகப்பெரியது. சொல்லப்போனால் ரஹ்மானின் வலது கை எனவும் கூறலாம் திரு ஸ்ரீதர் அவர்களை. கோடம்பாக்கத்திலுள்ள ரஹ்மானின் பஞ்சதன் ஒலிப்பதிவு மையத்தில் மற்றொரு ஒலி அமைப்பாளர் திரு.சிவகுமார் அவர்களுடன் இணைந்து பல திரைப்படங்களுக்கு இரவு பகல் பாராமல் பணியாற்றியிருக்கிறார்.
இந்திய இசை உலகில் டிஜிட்டல் (DTS) இசை உத்தியை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு.
உலகப்புகழ் வாய்ந்த இசைக்குழு Beatles உடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஜாக்கீர் உசேன், பண்டிட் ரவி சங்கர், ஜார்ஜ் ஹாரிசன் போன்ற உலக பிரபலங்களுடனும் சிறப்பான பணியாற்றிருக்கிறார்.
இந்தியாவின் மிகச்சிறந்த ஒலி பொறியாளர்களில் ஸ்ரீதரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.மஹாநதி, லகான், தில்சே, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற திரைப்படங்களுக்காக நான்கு முறை தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார் திரு.ஸ்ரீதர் அவர்கள்.
இதுவரை இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர் மஹாதேவன், ஜி.வி.பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களுடன் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
ரஹ்மானின் குழுவில் நான் அதிகம் மரியாதை வைத்திருக்கும் நபர்களில் திரு.ஸ்ரீதர் அவரும் ஒருவர்.
திரைப்பட பாடல்களில் பெரும்பாலும் இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கும் ரசிகர்கள் இவரைப்போன்ற கலைஞர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும், பாடகர்களுக்கும் முக்கியத்துவமளித்தால் இவர்களும் காலத்தால் அளிக்கப்படமுடியாத சாதனையாளர்கள் ஆவதில் சந்தேகமில்லை.
இழப்பால் வருந்தும் குடும்பத்தினருக்காக பிரார்த்திப்போம்.
நன்றி http://www.aamirkhan.com/blog மற்றும் http://en.wikipedia.org/wiki/H._Sridhar
காதல் சுகமானது என்றாய்
உன் பிரிவிலல்லவா புரிந்தேன் அது எத்தனை சோகமானது என்று.
காதல் சுகமானது தான்;
கல்யாண கால்கட்டிற்கு பின்னல்லவா தெரிகிறது
காதல் (குடும்ப) சுமையென்று!
இங்கிலீஸ் அணிய விட நம்ம ரன் கொஞ்சமில்ல அடிச்சு இருக்கோம் அப்புறம் எப்படி இப்படி நம்ம ஜெயிச்சுட்டோம்னு நண்பர்கள் பல பேருக்கு புரியவேயில்லை.(இது தான் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய விளையாட்டோ?)
டக்வர்த்-லூயிஸ் முறையில் இந்திய அணி இன்று கான்பூரில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மைதானத்தில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்ட போது டக்வர்த்-லூயிஸ் வரையறையின் படி நிறைவுபெற்ற 40 ஆவது ஓவரில் இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 16 ஓட்டங்கள் அதிகம் பெற்றிருந்த படியால் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மைதானத்தில் ஒளிவிளக்கு இருந்தும் அதனை உபயோகிக்க இயலவில்லை இந்த இரு அணிகளுக்கும்.ஒவ்வொரு ஆட்டம் துவங்கும் முன்னர் செயற்கை ஒளியை ஆட்டத்தினிடையே தேவைப்பட்டால் உபயோகிப்பது குறித்து முடிவு செய்யும் உரிமை இரு அணி தலைவர்களுக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த முடிவு ஆட்டம் துவங்கும் முன்னர் எடுக்கப்பட வேண்டும்.ஆட்டத்தின் இடையே முடிவெடுக்கவியலாது.
கான்பூரில் இது போன்ற தட்பவெப்ப காலங்களில் பனிமூட்டம் சற்று அதிகமாகவே காணப்படும் என போட்டி அமைப்பாளர்கள், ஆட்ட நடுவர் இந்திய வீரர்கள் அனைவரும் அறிந்திருந்த ஒன்று தான்.இங்கிலாந்து அணியிலும் சிலர் அறிந்திருக்கலாம் அறியாமலுமிருந்திருக்கலாம்.
தோனி ஆட்டம் துவங்கும் முன் டாஸ்(பூவா தலையா) இடும் போதே ரவி சாஸ்திரிக்கு அளித்த பேட்டியில் பனிமூட்டம் குறித்தும் டக்வர்த்-லூயிஸ் முறை உபயோகப்படுத்தப்படலாம் என்பது குறித்தும் தெரிவித்திருக்கிறார்.(இத்தனைக்கும் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 50ஓவர்களிலிருந்து ஒரு ஓவரும் குறைக்கப்பட்டது)கான்பூரின் தட்பவெப்பநிலையைக் குறித்து நன்கு அறிந்திருந்த தோனி ஏன் செயற்கை ஒளிவிளக்கு பயன்படுத்துவது குறித்து இங்கிலாந்து அணி தலைவர் பீட்டர்சனுடன் விவாதிக்கவில்லை?இது தான் ஒரு வீரனுக்கு அழகா?பீட்டர்சன் இது குறித்து கேட்டாரா என தெரியவில்லை.
ஆனால் உணவு இடைவெளியின் போது நடுவர்களிடம் உணவு இடைவேளை நேரத்தை குறைக்கும்படி கேட்டிருக்கிறார்.அதற்கு ஆட்ட நடுவர்கள் அப்படி செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதிக்காது என்று தெரிவித்திருக்கிறார்கள்.(ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அப்படி கூறவில்லை என Cricinfo தெரிவிக்கிறது)
தட்பவெப்பநிலை குறித்து நன்கு அறிந்திருந்த நடுவர்கள் பூவா தலையா போடவே 15 நிமிடம் தாமதம் காட்டியிருக்கிறார்கள்.பூவா தலையாவிற்கு பின்னரும் ஆட்டம் துவங்க 20 நிமிட கால தாமதம்.உணவு இடைவேளை 30 நிமிடம் வேறு. இப்படி நேரத்தை வீணாக்கிவிட்டு இறுதியில் போதிய வெளிச்சம் இல்லையென்று குண்டைத் தூக்கிப்போட்டது ஏற்றுக் கொள்ளும் படியில்லை.
இதில் சந்தோசம் இந்திய அணி வீரர்களுக்கும்,போட்டியை போட்டியாக பார்க்காத சில ரசிகர்களுக்கு மட்டுமே.நிச்சயமாக இங்கிலாந்து அணி சந்தோஷப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆட்ட விமர்சகர்களான ரவி சாஸ்திரி,டேவிட் லாயிட் உள்ளிட்ட பலரும் அதிருப்தியே தெரிவித்திருக்கிறார்கள்.
செயற்கை ஒளிவிளக்கு உபயோகிப்பது பற்றிய முடிவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அணித்தலைவர்களிடம் அளிக்காமல் அதனைக் கட்டாயப்படுத்த வேண்டுமென கருத்து சொல்லியிருக்கிறார் ரவிசாஸ்திரி அவர்கள்.அவர் சொல்வதிலும் உண்மை இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.
ரசிகர்கள் அவ்வளவு சிரமமெடுத்து ஆட்டத்தை ரசிக்க குழுமியிருந்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது என்றால் ஏமாந்து போயிருக்கமாட்டார்களா.இத்தனைக்கும் இன்று நடந்த போட்டியில் மைதானம் 30 ஆயிரத்திற்கும் மேல் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.
யாரை குற்றம் சொல்வது! செயற்கை ஒளிவிளக்கைக் குறித்து ஒரு தீர்க்கமான முடிவெடுக்காத சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலையா? இல்லை தெரிந்திருந்தும் பீட்டர்சனுடன் விவாதிக்காத தோனியையா? இல்லை கால தாமதம் செய்ய காரணமாயிருந்த ஆட்ட நடுவர் ரோஷன் மஹானமாவையா?(மைதான நடுவர் இல்லை)