September 30, 2008

இறைவனை ஏன் வெளி இடங்களில் தேடுகிறீர்கள்

செப்டம்பர் 30 2008

ஜோத்பூரில் இன்று நடந்த அசம்பாவிதம் வேதனைக்குரியது; இமாச்சல் மாநிலத்தில் அசம்பாவிதம் நிகழ்ந்த ஒரு மாதத்திற்குள் மற்றுமொரு வேதனையளிக்கும் சம்பவம் இது;நம்மவர்கள் சுதாரித்துக் கொள்வது எப்போதோ புரியவில்லை;
இறைவன் நமக்குள்ளேயே இருக்கையில் ஏன் வெளியிலே தேடுகிறார்கள் என்பதும் தெரியவில்லை;அதுவும் பண்டிகை காலங்களில் மட்டும் எம்மதத்தவராயினும் மிக பக்தி உணர்வோடு தேடுவது ஏனோ இறைவனுக்கே வெளிச்சம்;
நமது அன்பால் ஆதரவால் கருணையால் பிறருக்கு இறைவனை வெளிக் காட்டலாமே;இறைவன் இது போன்ற வடிவங்களில் நம்முள்ளேயே தானிருக்கிறான்;இன்னும் ஏன் இறைவனை வெளியிலே தேட வேண்டும்;

(பின் குறிப்பு: வழிபாட்டு தலங்களுக்கு செல்வதை நான் ஒட்டு மொத்தமாக குறை கூறவில்லை;பண்டிகை காலங்களில் மட்டும் ஏன் என்று தான் புரியவில்லை)

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails