October 01, 2008

தீவிரவாதத்திற்கு சமய முகமில்லை


அக்டோபர் 1 2008
தீவிரவாதத்திற்கு சமய முகமில்லை
இதோ இன்று மற்றொரு ஆலயமும் அதனைச் சார்ந்தவர்களும் தாக்கப்பட்டுள்ளார்கள் ஒரிசாவில்;ஓரிரு ஆண்டுகளாகவே பழங்குடியினரிடையே மறைவில் இருந்து வருகின்ற கருத்து வேறுபாடுகள் இன்று வெளிப்படையாக தாக்குதலாக மாற ஆரம்பித்திருக்கின்றன;குண்டு வெடிப்புகளும்; தாக்குதலும் இன்று இந்தியாவில் அன்றாட வழக்கமாகி விட்டன;எந்த ஒரு மாநிலமும் விதிவிலக்கல்ல;பிரதமர் பிரான்சில் சுற்றுப்பயணத்திலிருந்த போது கடந்த சில மாதங்களாக இந்தியா சந்தித்து வரும் கசப்பான அனுபவங்களுக்கு உலக அரங்கில் இந்தியா பதிலளிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது;பிரபல கன்னட எழுத்தாளர் ஆனந்தமூர்த்தி கூறியபடி கிறிஸ்தவர்களின் மீதான தாக்குதல் இந்திய நாகரிகத்தின் மீதான தாக்குதல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை;ஆனால் சில கட்சியைச் சார்ந்தவர்களோ சமீப கால தாக்குதல்களை அரசியலாக்க முயன்று நடுநிலைவாதிகளை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள்;சிமி போன்ற அமைப்புகளின் தாக்குதல் தீவிரவாதமென்றால் கர்நாடகாவில் பஜ்ரங்க் தள் போன்ற அமைப்புகளின் தாக்குதலை என்னவென்பது; இந்திய சமூகம் அனைத்தும் ஒன்று சேர்ந்து தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டிய இத்தருணத்திலும் கூட இங்கு சீர்கெட்ட அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பது கவலைக்குரிய விஷயம்;மற்றொரு நாளோ அத்வானி அவர்கள் விசாரணைகள் ஆரம்பிக்கும் முன்னதாகவே;சமீபத்திய டெல்லி குண்டு வெடிப்பிற்கு காரணம் என்று அண்டை நாடான பங்களாதேசினை குறைகூறிக்கொண்டிருக்கிறார்;வேறு சிலரோ பாதுகாப்புத்துறை அமைச்சகத்தை மாற்றினால் பிரச்சினைக்கு முடிவாகி விடுமென்று கருதுகிறார்கள்;மறுபுறம் ஆளுங்கட்சி அனைத்துக் கட்சி கூட்டத்தினைக் கூட்டி கருத்துக் கேட்க தயங்குகின்றது;இப்படியே நிலைமை நீளுமானால் பகட்டு வேஷமிட்டு குண்டு துளைக்கா கார்களில் திரியும் அரசியல்வாதிகளின் கண் துடைப்பு கண்டன வாக்குகள் தொடரும் அதே நேரத்தில் மடிவதோ சாமானியன் தான்; அதோடு இவ்விதம் சமய முகமின்றி தொடரும் தீவிரவாதத்திற்கு முற்றிப்புள்ளியும் அண்மை காலத்தில் ஏற்படப் போவதில்லை;

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails