October 03, 2008

பாதுகாப்பற்ற, கயவர்களின் சுதந்திர தேசம்

அக்டோபர் 2

காந்தி பிறந்த தினமாம் இன்று,
அவரைப்போன்றோர் பெற்றுத்தந்த சுதந்திரம் இன்று

சுதந்திரமாக கயவர்கள் செயல்படவும்,

சுதந்திரமாக தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்யவும்,
சுதந்திரமாக ஊழல் செய்யவும்,

சுதந்திரமாக நாட்டைக் காப்பவர்கள் (நாற்காலி காப்பவர்கள்) அதினிமத்தம் ஊதிகை ஈட்டவும்,
சுதந்திரமாக நாட்டை குப்பை மேடாக்கவும்,

சுதந்திரமாக வலுவில்லாதவனை தாக்கவும்,
சுதந்திரமாக எளிவர்களை எள்ளி நகையாடவும்,

சுதந்திரமாக கொள்ளையிடவும்,

சுதந்திரமாக மதத்தின் பெயரால் மதம் கொள்ளவும்,
சுதந்திரமாக மொழியின் பெயரால் மக்களை ஒடுக்கவும்,

சுதந்திரமாக சௌம்யா விஸ்வநாதன் போன்றோரை கொலை செய்யவும்

தான் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது...

தானும் அதற்கு (கொலை) பலியானோம்
என்பதை காந்தி உணர்ந்து,
ஏனடா சுதந்திரம் பெற்றுத் தந்தோம்
என்று எண்ணுவாரோ என்னமோ !

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails