February 27, 2009

சில குண்டக்க மண்டக்க தத்துவங்கள்

(மின்னஞ்சலில் வந்தவை...
நீங்களும் கொஞ்சம் சிரிச்சு வைச்சிட்டு போங்க)

நாய்க்கு 4 கால் இருக்கலாம்..
ஆனா அதால லோக்கல் கால்,எஸ்.டி.டி கால்,ஐ.எஸ்.டி கால்
இல்ல ஒரு மிஸ்ட் கால் கூட பண்ண முடியாது! :(

உக்காய்ந்து யோசிப்பாய்ங்களோ.

கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்,
காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம்-ஆனா
"அய்யர் ஆத்து"ல மீன் பிடிக்க முடியுமா? :)

ஆஹா...

மீன் பிடிக்கிறவன "மீனவன்"னு சொல்லலாம்-ஆனா
நாய் பிடிக்கிறவன நாயவன்னு சொல்ல முடியுமா!! :)

என்ன தான் ஒருத்தன் "குண்டா" இருந்தாலும்
அவன துப்பாக்கி உள்ள போட முடியாது!

ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்,
காலேஜ் டெஸ்ட்ல கூட பிட் அடிக்கலாம்-ஆனா
பிளட்(Blood) டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?

என்ன கொடும சரவணன்!!

பொங்கலுக்கு கவர்ன்மென்ட்ல லீவு குடுப்பாங்க-ஆனா
இட்லி,தோசைக்கு குடுப்பாங்களா?

ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போல. அய்யோ அய்யோ... தலைல அடிச்சுக்க வேண்டியது தான்.

கோல மாவுல கோலம் போடலாம்-ஆனா
கடல மாவுல கடல போட முடியுமா?

எஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சா எஞ்சினியர் ஆக முடியும்-ஆனா
பிரசிடென்ஸி காலேஜ்ல படிச்சா பிரசிடென்ட் ஆக முடியுமா?

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்-ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது :))

ஹேண்ட் வாஷ் னா கை கழுவுறது,
பேஸ் வாஷ் னா முகம் கழுவுறது-அப்போ
பிரெயின் வாஷ் னா மூளைய கழுவுறதா!!!

பால்கோவா பால்ல இருந்து பண்ணலாம்-ஆனா
ரசகுல்லாவ ரசத்தில இருந்து பண்ணமுடியுமா?

கடைசியாக சன் மியூசிக் சிங்கங்கள் சொன்ன ஒரு கொடும...

சன்டே அன்னைக்கு சண்ட போட முடியும் ஆனா மண்டே அன்னைக்கு
மண்டய போட முடியுமா...

நல்லா கேக்கிறாய்ங்க கேள்விய..


வார இறுதியும்,புதிய மாதமும் இணைய நண்பர்களுக்கு இனிதாக அமைய வாழ்த்துக்கள்.




8 comments:

நாமக்கல் சிபி said...

:))

சூப்பர்!

//மீன் பிடிக்கிறவன "மீனவன்"னு சொல்லலாம்-ஆனா
நாய் பிடிக்கிறவன நாயவன்னு சொல்ல முடியுமா!! :)//

அதானே! கடிச்சிட மாட்டான்!

எட்வின் said...

வாங்க சிபி... :)

Anbu said...

நன்றாக இருந்தது அண்ணா

எட்வின் said...

வாங்க அன்பு... நன்றி

Rajeswari said...

superb!!!!!!!!

எட்வின் said...

வருகைக்கு நன்றி ராஜேஸ்வரி...

நாமக்கல் சிபி said...

//வாங்க சிபி... :)//


இதென்ன வந்த பிறகு வாங்க சிபி!

காபி சாப்பிடுங்க சிபி ன்னு சொல்லணும்!

எட்வின் said...

நாமக்கல் சிபி said...

//இதென்ன வந்த பிறகு வாங்க சிபி!காபி சாப்பிடுங்க சிபி ன்னு சொல்லணும்!//

வீட்டுக்கு வரும் போது வாங்க வாங்கனு சொல்றது இல்லயா!
அது போல சொல்லிப்புட்டேன். எதோ தயவு பண்ணி மன்னிச்சி விட்டுருங்க. காபி என்ன காபி... பார்ட்டியே வெச்சுருவோம்.

Post a Comment

Related Posts with Thumbnails