March 01, 2009

அதிகாலை உத்வேகம்...

பனி மூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தாலும் அதிகாலமே நெத்தியில் பட்டையும், தோளில் துண்டுமாக சாயக்கடை மணி சேட்டன் கடையை திறந்து வைத்துக் கொண்டு "கோயம்புத்தூரில ஷோப்பின(Shop)வச்சிருக்கணும், மேட்டுப்பாளயத்து வந்து ஒண்ணும் நடக்கல", சின்ன வயசில எதும் படிச்சிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா என முனங்கிக் கொண்டே கடைக்கு சாம்பிராணி காட்டிக் கொண்டிருந்தார்.

எப்போவும் போலில்லாமல் டிசம்பரில் ஆட்கள் கடைக்கு வருவது குறைவு தான்.அத்தனை பனிமூட்டத்தில் காலையிலே யார் தான் வருவார்!

"ஈஸ்வரா இன்னெங்கிலும் நல்ல விதம் நாலு காசு கிட்டனே" என சொல்லி முடிக்கும் முன்னரே வழக்கமாக வரும் பாலக்காட்டு சேல்ஸ் ரெப் விமல் ஆஜர். சேட்டா சுகம் தன்னே, என்ன ஒரு வல்லாத்த சோகம்,என்றார்.

ஒந்நுமில்லா என்ற சாரே... ஹோர்லிக்ஸானோ(Horlicks) அதோ கோஃபியானோ(Coffee) என தொழிலில் மும்முரமாயிருந்தார் சேட்டன்.

கோஃபி போதும்,ப்ரோப்ளம் (Problem)உண்டெங்கி சொல்லு அண்ணாச்சி,நம்ம கிட்ட சொல்றதுக்கு ஏன் தயங்குது என்றார் விமல்.

ஏ... பெருசா பிரஸ்னம் இல்லா,ஷோப்பில (Shop) மும்பு(முன்பு) போல ஆள் வரத்து இல்லே,அது தன்னே; வேற ஒண்ணுமில்ல என்றார் காஃபியை கொடுத்தவாறு.

அதனிடையில் கோயம்புத்தூர் கல்லூரி ஒன்றில் படிக்கும் சிநேகிதர் ராஜனும் வரவே சேல்ஸ் ரெப்புக்கு அரட்டை அடிக்க துணையாகி விட்டது.

என்ன ராஜன் பாஸ்,கால்ல என்ன கட்டு என்று கேட்டார் சேல்ஸ் ரெப்,அது ஒண்ணுமில்ல சார் நேத்து வாலி பால் விளையாடினப்போ கீழ விழுந்திட்டேன்,சின்ன அடி தான் என்ற ராஜன்,சேட்டா ஒரு வில்ஸ் ஃபில்டர் ஒரு காஃபி என்று ஆப்பத்திற்கு மாவு கலக்கிக் கொண்டிருந்த சேட்டனிடம் கூவினார்.

"வோளிபோள் (Volley ball) மும்பு நானும் விளையாடி இருக்கு கோலேஜ்ல(College) படிக்கும் போது"என சேல்ஸ் ரெப் கதை அளக்க தொடங்கினார்.கிரிக்கெட் தான் ஆனா எனிக்கு இஷ்டம்,ஞான் நல்ல ஸ்பின் பௌளர்(பௌலர்/bowler) ஆணு என்று பழைய நினைவுகளில் மூழ்கினார்.

காஃபி டம்ளரை சேட்டனிடம் நீட்டியவாறு ... ராஜனிடம், பின்னே ... ராஜன்ற ஓரஞ்சு (Orange) பிசினஸ் எங்கன உண்டு என்றார் சேல்ஸ் ரெப்,

அது பரவாயில்ல சார்,அப்பாக்கு உடம்பு சரியில்லாத தால சாயந்திரம் முழு நேரமும் நானே பாக்க வேண்டியதா இருக்கு;அங்க இருந்தே படிக்கவும் செய்யணும் சார்,வீட்டில போனா வீட்டு வேலக்கே நேரம் சரியா இருக்கும் என்றார் வருத்தத்துடன் ராஜன்.

அய்யோ பாவம்,இது போலே செறுக்கன்(பையன்) எல்லா அச்சன்மார்க்கும் (அப்பா) கிட்டியால் பாக்கியம், என்ற வீட்டில பிசாசு ஒண்ணு இருக்கே... பறஞ்சா (சொன்னா) கேக்காது என்று கோபத்தில் தோளில் கிடந்த துண்டை உதறிக் கொண்டு காஃபியை ராஜனிடம் கொடுத்தார்.

இப்போ தொழிலும் ரொம்ப மோஷம்,வீட்டிலே டிவி பின்னே கம்பியூட்டர் ஷோப்புகள்(shop) வந்த பின்னாடி முன்னப் போல பத்திரம்(செய்தித்தாள்), புஸ்தகம் வாங்கான் கூட ஆள் இல்லா.

டிஃபனும் சரியா போறது இல்ல,இதின்ற இடையில் கலியாண வயசாய மோளின்ற (மகளுடைய) செலவுக்கு எங்க இருந்து காசு பாக்கும் ஞான்;எந்தா செய்யா( என்ன செய்ய) என்ற ஈஸ்வரா என புலம்பினார் சேட்டன்.

வீடுகளில் சன்டே விடுமுறையில் அதிகம் விற்பனை செய்யலாம் என்பதால், சன்டே அல்லே இன்னு,ஓஃபீஸில(Office) நெறய பணி உண்டு. சரி ஞான் கொஞ்சம் சீக்கிரம் போகுவா என்றார் சேல்ஸ் மேன்.

சார் உங்க நாவல மறந்து வச்சிட்டு போறீங்க என்றார் ராஜன்,ஓ என்ற நோவல்( Noval) மறந்நு போயி என அதை வாங்கியவர் சாலையின் அந்த பக்கம் நின்று கொண்டிருந்த ஆட்டோவை பார்த்து ஓட்டோ (Auto) என்று கத்தினார்.

சவாரி இருக்கு சார் என்றார் ஆட்டோ டிரைவர் பதிலுக்கு.
ஓ என்ற தெய்வமே, இந்நு என்ற நோவல் மறந்நு,இப்போள் ஓட்டோ கிட்டுந்நில்லா, பஸ்ஸும் இப்போ இல்லா ... எப்போளும் எனிக்கு ராசியே இல்ல ராஜன் என்று சலித்துக் கொண்டு சேட்டன் கடையில் சோகமாக வந்து அமர்ந்தார்.

இதோ வந்திருச்சிங்க பஸ், என்ற ராஜன்... சலிச்சுக்காதீங்க சார்.வாழ்க்கைல எல்லாம் நல்லதுக்காகத் தான் நடக்கும்,ஒண்ணு போனா இன்னொண்ணு வரும்,இப்போ கூட பாருங்க ஆட்டோ இல்லனா என்ன! பஸ் இருக்கு.

நாம விரும்பினது கிடைக்கலனா,கிடைச்சத வச்சு சந்தோஷப்பட்டுக்கணும்,எதயுமே பாஸிட்டாவா பாருங்க சார் என ராஜன் கூறவும் டீ கடை சேட்டன் பிரமித்தார்.

விடுமுறை நாளில் கூட உழைக்கும் சேல்ஸ் மேனையும்,சின்ன வயதில் இத்தனை பக்குவம் கொண்டு படிப்பையும் அப்பாவின் தொழிலையும் கவனிக்கும் ராஜனையும் கண்டு கண்கலங்கினார் சேட்டன்.

இனிமேல் ஏன் படிக்கவில்லை என நினைப்பதும்,சலித்துக் கொள்வதும் தவறு;தொழிலை முன்னேற்ற வழியில்லாமலா போய்விடும் என அந்த தெளிவற்ற பனி மூட்டத்தினிடையிலும் தெளிவான மனம் கொண்டார் சாயக்கடை மணி சேட்டன்.

பின்குறிப்பு:இச்சிறுகதையில் வரும் சில ஆங்கில சொற்களின் உச்சரிப்பு கேரளத்தவர்களுக்கே உரித்தான உச்சரிப்புகள்.அவற்றை கேரளத்தாரின் பேச்சு வழக்கிலேயே எழுதியிருக்கிறேன்; அவை அவர்களின் பேச்சு வழக்கை இழித்து எழுதப்பட்டதல்ல.

2 comments:

எட்வின் said...

யூத்ஃபுல் விகடனில் இந்த சிறுகதை வெளியாகியுள்ளது, விகடனுக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் இணைய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
http://youthful.vikatan.com/youth/edwinstory020309.asp

ahaanandham said...

சிறுகதை அருமை,,உடல் சோர்ந்து போகையில்,,ஒரு,,ஸ்ட்ரோங்,,சாயா,கிட்டுந்த மாதிரி,,சோர்ந்த ,மனங்களுக்கு சற்றே,,தெம்பூட்டும் வகையில் ,,,,,,,,,அருமை,,,வளரட்டும்,,,உங்கள்,,எழுத்து,,பணி

Post a Comment

Related Posts with Thumbnails