March 07, 2009

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடக்கம்

பெண்கள் உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியுள்ளன.முதல் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.இன்று நடந்த முதல் போட்டியில் 10விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வென்றிருக்கிறது.ஆண்கள் அணியைப் போன்றே இதற்கு முன்னர் நடந்த உலகக் கோப்பை போட்டிகள் அனைத்திலும் பாகிஸ்தானை இந்தியா வென்றுள்ளது.

இந்திய அணித்தலைவி கோஸ்வாமி


கடைசியாக இந்தியா ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்த போது 5-0என்ற கணக்கில் தோல்வியடைந்திருந்தது.

அந்த மனநிலையிலிருந்து மாற இன்று பெற்ற வெற்றி ஊன்றுகோலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.இந்திய அணியில் சொல்லும்படியாக முன்னாள் அணித்தலைவி அஞ்சும் சோப்ரா,இன்னாள் அணித்தலைவி கோஸ்வாமி,ஆல்ரவுண்டர்கள் ருமேலி தர்,மித்தாலி ராஜ் ஆகியோர் உள்ளனர். மற்றவர்கள் புதியவர்களாகவே தெரிகிறது.

பாக்கிற்கு எதிராக எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா,இங்கிலாந்து அணிகள் கடும் சவாலை கொடுக்கக்கூடும்

இங்கிலாந்து அணித்தலைவி Charlotte Edwards

இன்றைய ஆட்டத்தின் ஓட்ட விவரம்

பாகிஸ்தான்-57 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு(29 ஓவர்களில்)

இந்தியா-58 ஓட்டங்கள்,விக்கெட் இழப்பின்றி(10 ஓவர்களில்)

இனிவரும் ஆட்ட விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

நன்றி: cricinfo

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails