March 07, 2009

சர்வதேச மகளிர் தினம்

பெண்கள்,அவர்களின் தாய்மையால்,பெண்ணினத்திற்கே உரித்தான மனிதாபிமானத்தால் மகத்தானவர்கள்,மரியாதைக்குரியவர்கள் என்றே காலங்காலமாக கருதப்பட்டு வந்திருக்கின்றனர். இப்போதும் அந்த கருத்திற்கு நிச்சயமாக மாற்றுக் கருத்து இல்லை எனலாம்.

என்றாலும் அதே மகத்தான,மரியாதைக்குரிய மங்கையர்கள் பிறரிடம் தரந்தாழ்ந்து தர்க்கம் செய்யும் பொழுதும்;நடந்து கொள்ளும் பொழுதும்,ஆசைகளை குறிப்பாக பண ஆசைகளை அடக்கவியலாமல் போகும் பொழுதும், மற்றவர்(பெரும்பாலும் ஆடவர்?) மடிய காரணமாகும் பொழுதும்,மடையர்களாக்கி மறைந்து விடும் பொழுதும் அவர்கள் மேலுள்ள நல்லெண்ணத்தை அவர்களே பாழாக்கி விடுகின்றனர்.

மகளிர் அனைவருமே மனிதாபிமானம் மிக்க மகளிராக இருக்க வேண்டுமென எதிர்பார்த்தலும் நியாயமல்லவே. இது ஆடவர்க்கும் கூட பொருந்தும். எல்லா ஆடவரும் ஆணவமின்றி அன்பாக இருந்து விட்டால் உலகில் ஏது பிரச்சினை.

ஒவ்வொருவரையும் அவரவர் இருக்கும் சூழ்நிலைகளே அவர்களை நல்லவராகவும், தீயவராகவும் தீர்மானிக்கிறது.ஆதலால் அவர்களை மட்டுமே குற்றம் சாட்டுவதற்குமில்லை.

முந்தைய நூற்றாண்டுகளை விட இன்று மகளிர் சுதந்திரமாக ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். எனினும், நூற்றாண்டுகள் பல ஆயினும் இன்றும் உலகின் பலபகுதிகளில் பெண்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதும்,பெண்கள் தங்களுக்கு அடிமை என ஆண்களால் கருதப்படுவதும் தொடரத்தான் செய்கின்றது.

எதுவாயினும் ஆடவர் மகளிர் என்ற வேறுபாடு இன்றி மானிடப்பிறவியாக பாவித்து, பிழைநோக்காமல், பரிவு காட்டி, புரிந்து கொண்டு வாழ்ந்தால் மண்ணுலகில் பிரிவினைகளுக்கு இடமில்லை.

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

இந்த வருடத்தின் மகளிர் தினத்திற்கான ஐ.நா சபையின் குறிக்கோள்:ஆண்களும் பெண்களும் ஒருங்கிணைந்து பெண்களுக்கும்,பெண்குழந்தைகளுக்கும் எதிரான கொடுமைகளை ஒடுக்குதல்

மகளிர் தினத்தின் வரலாறு மற்றும் அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails