April 04, 2009

அமெரிக்கால அருவா!இந்தியால தோட்டா!

இல்ல... இல்ல.. அமெரிக்கால தோட்டா இந்தியால அருவா,ரைமிங்கா இருக்கட்டுமேனு தான் தலையங்கத்த மாத்திப் போட்டேன்.
அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கி தோட்டாக்களுக்கு மடிந்து வரும் உயிர்கள் கவலை தருவதாக இருக்கின்றன.நேற்றும் (3.4.2009) நியூயார்க் பிங்காம்டன் பகுதியின் சமூக மையம் ஒன்றில் புதிய அமெரிக்க குடியேறிகள்(அந்த குடி அல்ல! இது Immigrants) 13 பேரை சுட்டுக் கொன்று தன்னைத் தானே சுட்டு கொண்டு தற்கொலையும் செய்து கொண்டிருக்கிறான் ஒருவன்;அதுவும் பகலில்.

கடந்த ஒரு மாதத்தில் அமெரிக்காவில் மக்கள் கூட்டத்தை குறி வைத்து நிகழ்ந்திருக்கும் ஐந்தாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இது என msnbc செய்தி தெரிவிக்கிறது.


சம்பவம் நிகழ்ந்த மையத்தில் அமெரிக்கர்கள் அல்லாத பிற நாட்டை சார்ந்தவர்கள் அமெரிக்க குடியேற்ற உரிமையை பெறுவதற்கான வகுப்புகள் நடந்து வந்திருக்கின்றன.

மார்ச் 29 அன்றும் கலிஃபோர்னியாவில் இந்தியர் ஒருவர் குடும்பப் பிரச்சினைகளால் தனது குடும்பத்தின் ஆறு பேரையும் தோட்டாவினால் கொன்று இறுதியாக தன்னையும் சுட்டிருக்கிறார்.

அமெரிக்காவில் இவ்வாறு தோட்டாவினால் அநியாயமாக உயிர்கள் மடிகின்றது என்றால் நம் ஊர்களும் இது போன்ற கொலைகளுக்கு விலக்கல்ல.

அங்கு தோட்டா என்றால் இங்கு அரிவாள் பேசுகிறது.அவ்வளவு தான் வித்தியாசம். அமெரிக்க திரைப்படங்களில் துப்பாக்கித் தோட்டாக்கள் பாயாத திரைக்கதைகளே இல்லை எனலாம்.அது போன்று இந்திய திரைப்படங்களில் அரிவாள் ஆக்கிரமிப்பு(தற்போது சில படங்களில் தோட்டாக்களும் வந்து விட்டன)

இவையும் ஒருவரை சினிமாவில் வருவது போன்ற அக்கிரமங்கள் செய்யத் தூண்டுகிறது என்றால் மிகையல்ல.

இது போன்ற கொலைகளை செய்யத் துணிபவர்கள்,சமுதாயத்தில் அல்லது குடும்பத்தில் ஏதேனும் ஒரு வழியில் புறக்கணிக்கப்பட்டவராக இருக்கவே சாத்தியம்.

இல்லையென்றால் தான் எதிர்பார்த்தது ஏதும் நிகழாமல் ஏமாற்றமடைந்தவராக இருக்க வேண்டும்.குடும்பங்களில்,நண்பர் வட்டாரங்களில் சரியான முக்கியத்துவம் கொடுக்கப்படாததும் காரணமாக இருக்கலாம்.

இவைகளினால் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் அதன் விளைவாக அவர்களின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.விரக்தி நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்;அது அவர்களை கொலை செய்யவும் தூண்டுகிறது;அதோடு இவர்கள் தங்கள் வாழ்க்கையையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

இவர்களைப் போன்றோர் எந்த நேரத்தில் என்ன மனநிலையில் இருப்பார்கள் என ஊகிப்பதே கடினம் என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்(Schizophrenia என்பது இதில் ஒருவகை மனநோய்)
(சென்னை,கீழ்பாக்கம் மனநிலை மருத்துவமனையில் இது போன்ற தவறிழைத்து அனுமதிக்கப்பட்டிருக்கிறவர்களை குறித்து படிக்கும் வாய்ப்பு 2001 ல் கிடைத்தது)

பெரும்பாலும் குடும்பங்களில் காணப்படும் சிறிய மன சங்கடங்களால் ஆரம்பிக்கின்ற பிரச்சினைகளே பிற்காலத்தில் இது போன்ற பெரும் பாதிப்புகளுக்கும் காரணமாகலாம்.

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்ற சொல்லின் படி ஒரு நபர் கொண்டிருக்கும் நட்பு வட்டாரமும் அவர்கள் செயல்பாடுகளைத் தீர்மானிக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை.

எனவே நமது குடும்பங்களிலும்,நட்பு வட்டாரங்களிலும் காணப்படும் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு செவி மடுத்து அவற்றை முளையிலேயே கிள்ளி எறிவோமென்றால் நமது சமூகத்தையும் நமது குழந்தைகளையும் ஆரோக்கியமானதாக நாம் கொள்ள முடியும்.

இல்லையென்றால் இது போன்று கொல்லப்படுதலையும் கொல்லுபவர்களையும் நாமும் காண நேரிடும்.

2 comments:

Anonymous said...

sappa mukkanunga (asians)are the worst short-tempered stupids. you never know what they'll do next.

கிறிச்சான் said...

///அமெரிக்கால அருவா! ///பின்னிட்டீங்க போங்க...ஒரு flow இருக்கு...

Post a Comment

Related Posts with Thumbnails