April 14, 2009

சுயேட்சை வேட்பாளர்கள் மீது ஏன் இந்த சாடல்?


"சுயேட்சை வேட்பாளர்கள் என்பவர்கள் சீரழிப்பவர்கள்"

இப்படி ஒரு வாக்கை இந்திய நாட்டின் உயர் பதவியிலிருப்பவர் ஒருவரிடமிருந்து அதுவும் பிரதமரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

சில நாட்களாகவே பிரதமர் சிங் அவர்கள் முன் வைக்கும் கருத்துகள் முன்னுக்கு பின் முரணானவையாகவும். ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருக்கிறது.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பிற கட்சியினரை சாடுவதும், குறை சொல்வதும்,தனி மனித தாக்குதல் செய்வதுமாக இறங்கியிருக்கிறார் பெரியவர்.

முந்தைய பதிவிலேயே இவரை போன்றவர்களின் பிரச்சார பிதற்றல்களை குறிப்பிட்டிருந்தேன்.

இன்று அவற்றிக்கு எல்லாம் ஒரு படி மேலே போய்...'சுயேட்சை வேட்பாளர்கள் சீரழிப்பவர்கள்; அவர்களால் வெற்றி பெற முடியாது;அவர்களை ஊக்குவிக்க கூடாது' என்ற தரம் தாழ்ந்த கருத்தை கூறியிருக்கிறார் பிரதமர்.

சுயேட்சை வேட்பாளர்களின் மேல் ஏன் இந்த திடீர் சாடல் என்று தான் புரியவில்லை. மக்கள் அல்லவா அவர்கள் முடிவை சொல்ல வேண்டும்... சுயேட்சைகள் சீரழிப்பவர்களா இல்லை சீர்ப்படுததுபவர்களா என்று.

அதோடு "மாநில கட்சிகள் எவ்வளவு காலம் தேசிய அரசியலில் தாக்கு பிடிப்பார்கள் என சொல்ல முடியாது" ஆதலால் தேசிய கட்சியான எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருக்கிறார். நீங்கள் தேசிய கட்சி என்றால்... நாணமில்லாமல் என்னத்திற்கு மாநில கட்சிகளுடன் கூட்டணி கூடுகிறீர்கள்?

சுயேட்சைகள் போட்டியிடுவதில் இவர்களுக்கு என்ன சிக்கல வந்து விட்டது. அவர்கள் தொகுதி மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தால் நிச்சயம் சுயேட்சை வேட்பாளர்களுக்கு வாக்களிக்க தான் போகிறார்கள்.

அப்படி சீரழிப்பவர்கள் என்றால் உங்கள் ஆட்சியில் சட்டம் கொண்டு வந்திருக்க வேண்டியது தானே... சுயேட்சை வேட்பாளர்களுக்கு போட்டியிட தடை என்று.

மைக் கிடைத்து விட்டால் என்ன வேண்டுமானாலும் பேசி விடுவதா? இது உங்களுக்கே நியாயமாக படுகிறதா?

3 comments:

Anonymous said...

என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள மன்மோகனின் பேச்சு இது.

கிறிச்சான் said...

அவருக்கு ஏன் இந்த கொலை வெறி?

Ananda said...

ரொம்ப சரி

Post a Comment

Related Posts with Thumbnails