April 16, 2009

மனைவியை கொன்ற தீவிரவாதிகளை மன்னித்த மகான்

நேற்று(15.04.09) ndtv தொலைக்காட்சியில் நவம்பர் 2008 மும்பை தாக்குதலின் விசாரணை குறித்த விவாதம் நடைபெற்றது. Times Of India's Consulting Editor ம் தனது மனைவியுமான திருமதி.சபீனா சாந்தனுவை, மும்பைத் தாக்குதலில் இழந்த திரு.சாந்தனு அவர்களும் பங்குபெற்று தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் குறிப்பிடுகையில் அஜ்மல் கசாப் வழக்கின் விசாரணையை நாங்கள் பின் தொடரவில்லை;அதனைக் குறித்து அறியவும் விரும்பவில்லை; நானும் எனது இரு பிள்ளைகளும் விரும்புவது எல்லாம் அஜ்மல் கசாப் மரண தண்டனைக்கு விலக்கப்பட வேண்டும்.அவர் உயிருடன் வைக்கப்பட வேண்டும்.

எனது மனைவி மும்பை தாக்குதலில் குறிவைக்கப்படவில்லை; தீவிரவாதிகளின் தாக்குதலில் மடிந்த மற்றுமொரு பலிகடா, அவ்வளவு தான்.

எங்களுக்கு வருத்தம் இல்லாமலில்லை,ஆனாலும் கசாப் மீது எந்த கோபமோ வெறுப்போ எங்களுக்கு இல்லை.அவர் மீது கோபம் கொள்வதினாலோ மேலும் கவலை அடைவதாலோ நாங்கள் எதனையும் ஈட்டப் போவதில்லை.மறைந்த எனது மனைவி மீண்டு வந்து விடப் போவதுமில்லை என கூறினார்.

அதோடு அவரின் 12 வயது மகன் அஜ்மல் கசாப்பை சிறைச்சாலையில் சென்று சந்திக்க விரும்புவதாக தெரிவித்து இருக்கிறான் எனவும் கூறினார்.

ஏற்கெனவே நளினியை சிறைச்சாலையில் பிரியங்கா காந்தி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களைப் போன்ற மனித நேயம் மிக்கவர்களை எவ்வளவு புகழ்ந்தாலும் பாராட்டினாலும் தகும்.திரு.சாந்தனு அவர்களை மகான் என தலையங்கத்தில் குறிப்பிட்டதும் தகும் என்றே கருதுகிறேன்.

இந்த நிகழ்ச்சியின் போது பங்கு பெற்று பேசிய மூத்த வழக்கறிஞரும்,இந்திராகாந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்காக வாதிட்டவருமான திரு.ராம்ஜெத்மலானி, சாந்தனுவை வெகுவாக பாராட்டியதோடு இந்த கருத்துக்களை கேட்கும் ஒவ்வொரு தீவிரவாதியும் வெட்கப் பட வேண்டும் என்றார்.அதோடு இந்த கருத்துக்களை அனைத்து செய்தி ஊடகங்களும் வெளியிட வேண்டும் என்றும் கூறினார்.

12 comments:

ஜவஹருல்லா said...

கஸாப்பை மன்னித்துவிட்ட மகானை பாராட்டுகிறேன். அவரே மன்னித்துவிட்டபோது ஏன் கசாப்பை சிறையில் அடைத்துள்ளது பார்ப்பனிய பயங்கரவாத அரசாங்கம்?

அவரை உடனே விடுதலை செய்யவேண்டும்.

எட்வின் said...

அய்யா அவரை அதனை எளிதில் விட்டு விட மாட்டார்கள்... அவர் மீது 166 கொலைகள் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கே படிக்கலாம் அதனை குறித்து. http://www.ndtv.com/news/india/2611_trial_qasab_to_be_tried_for_166_murders.php

ஜவஹருல்லா said...

அனைத்தும் இந்து பார்ப்பனிய பயங்கரவாத இந்திய அரசால் போடப்பட்டுள்ள பொய் வழக்குகள். அவரால் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுபவரே அவரை மன்னித்துவிட்டபோது அவரை இன்னும் பொய் வழக்குகளில் சிறையில் வைத்துள்ள இந்து பார்ப்பனிய பயங்கரவாத அரசை நாம் கண்டுகொள்ள வேண்டும்.

அப்சல் குரு போன்ற தலைவர்களை சிறையில் வைத்துள்ள இந்து பார்ப்பன பயங்கரவாத அரசை கண்டித்து மனுஷ்ய புத்திரன், அ மார்க்ஸ் போன்ற சிறந்த சிந்தனையாளர்கள் குரலெழுப்பி வருகிறார்கள்.

அதே போல கஸாப்புக்கும் நாம் குரலெழுப்பி அவரது உயிரை காப்பாற்ற வேண்டும்.

நன்றி

sanewar said...

ellaraiyum mannithu vittuvittal kadaisiyil mannipatharku aalinri aanaivarum theeviravathathirku palikada aaki viduvoam. kasab birku kodukapadavirukum thandanai avar seitha kutrathirka ka alla, avar pola mattravarkal aaki vida koodathu enbatharkaka

Anonymous said...

அடங்கப்பா, இன்னமும் 167 குடும்பங்கள் இருக்கே, அவர்கள் மன்னிக்க வேண்டாமா?

அதோடு கசாப் மன்னிக்கும் படியான செயலையா செயதிருக்கிறான்?

இந்த 168 பேரில் 40 பேர் முஸ்லிம்கள், ஆனால் ஜவஹருல்லா மாதிரி இல்லாமல் அப்பாவி முஸ்லிம்கள்

எட்வின் said...

பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி.
------------------------------------
சாந்தனுவின் இந்த கருத்துக்கள் கசாப் மனது இளகும் படி செய்து அவரே முன்வந்து பிற தீவிரவாதிகளுக்கு தீவிரவாதத்தை நிறுத்தும்படி கருத்து ஏதும் சொல்வாரானால் அது தான் சாந்தனுவின் நல்ல மனதிற்கு அளிக்கப்படும் மிகப்பெரிய பரிசாக இருக்கும். மரண தண்டனையை விட ஒருவேளை ஆயுள் தண்டனை அளித்தால் அதற்கு வாய்ப்பு ஏற்படலாம்.

ஆனாலும் அனைத்து தீவிரவாதிகளையும் மன்னிப்பு என்ற போர்வைக்குள் கொண்டு வந்து விடவும் முடியாது.

Anonymous said...

ஆஹா வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா,,,
இதனால் தெரிவிகப்படுவது யாதெனில்
இந்திய நாடு உலகத்திலேயே தலைச்
சிறந்த (நட்டு கழுண்ட) மனிதாபிமானம் மிக்க நாடு,பகைவரையும் முத்தமிட்டு
வரவேர்க்கும் நாடு
அதனால் கஸாப்பை மண்ணிப்பது மட்டுமன்றி அவரை உடனே விடுதலைச் செய்து மாலைப்போட்டு
வேண்டுமானால் ஒரு மந்திரி பதவி
கொடுத்து அவர் செய்த அளப்பரிய
செயலுக்காக பாராட்டு விழா நடத்தி
அவரை கெளரவிக்க வேண்டுகிறொம்
அவர் இன்னும் 100 அப்பவிகளைக்
கொன்றால் கூட நாங்கள் அவரை
மன்னிப்போம் காரணம் நாங்கள்
இந்தியர்கள் (கேனைகள்)எங்களைப்
போன்ற மனிதாபிமானம் மிக்க மனிதர்களை (மடையர்களை) நீங்கள்
எந்த லோகத்திலும் பார்க்க முடியாது
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து
கொள்கிறோம்

போங்கய்யா நீங்களும்!! உங்க மனிதபிமானமும்!!!!!!!

சாஷீ said...

மன்னித்து விட்டது சாந்தனுவின் மனிதநேயம் ,,,ஆனாலும் உப்பு தின்னா தண்ணி குடிக்க தானே செய்யணும் ,,,சட்டம் தன் கடமையை செய்யட்டும் ,,

எட்வின் said...

மோடி செய்ததை நிரூபிக்க இயலாததால் தண்டனைக்கு உட்படுத்தவில்லையாம். இனி கசாப் செய்ததையாவது நிரூபிப்பார்களா என பார்ப்போம். இன்று தானே விசாரணை துவங்கியிருக்கிறது

எட்வின் said...

தம்பி சார்லஸ் நீ சொன்னது கரெக்ட் தான். இந்தியாவிலயே உப்பு தின்னவங்க பல பேர் (குறிப்பாக 1984 கலவர வழக்கிலும்,2002 கலவர வழக்கிலும்) பல வருஷமா தண்ணி குடிக்காமலே இருக்கதாகக் கேள்வி. அவங்களுக்கு எல்லாம் தண்ணி காட்டிறது யாரோ?

கிறிச்சான் said...

/////////திரு.ராம்ஜெத்மலானி, சாந்தனுவை வெகுவாக பாராட்டியதோடு இந்த கருத்துக்களை கேட்கும் ஒவ்வொரு தீவிரவாதியும் வெட்கப் பட வேண்டும் என்றார்/////////கண்டிப்பா வெட்கப்படணும்'ங்க ... மன்னிபெல்லாம சரி வரவே வராது !

Anonymous said...

Kasab should be hanged. He's a terrorist and there's a lot of evidence against him. His death sentence should be a lesson for muslim terrorists.

Hello Jawarulla, Are you an IDIOT? Think about the country you are in. Eventhough you are from minority group, you are getting more benefits than any other religion. Mind that, you cannot live in peace if you are a citizen of Pakistan, eventhough you are a muslim.

Post a Comment

Related Posts with Thumbnails