May 03, 2009

சீக்கியருக்கு சிங்கியடிக்கும் அரசே! நீ தமிழினத்திற்கு என்ன செய்தாய்


அண்டை நாடான பாகிஸ்தானில் சீக்கியர்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து வருவதாக ஊடகங்கள் மூலம் செய்தியை கேட்க நேரிடுகிறது.(வரி கட்ட சொல்லிட்டாங்களாம் ஸ்வாத் பகுதியில்!)இந்தியாவின் பஞ்சாப் மாநில சீக்கியர்கள் இன்று அதனைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்கு ஜால்ரா அடிக்கும் வகையில் இந்திய பிரதமர் 'சிங்'கும் பாகிஸ்தானை கண்டித்து அறிக்கை விட்டு சிங்குகளுடன் சேர்ந்து சிங்கி அடித்திருக்கிறார் இன்று.அதோடு எதிர்கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன.

இலங்கையில் நம்மின உயிர்கள் அடையும் சித்திரவதைக் குறித்து எள்ளளவும் கவலைப்படாத,கண்டனம் தெரிவிக்காத இந்த கேடுகெட்ட மத்திய அரசுக்கும் பிரதமருக்கும், இன்று மட்டும் எங்கிருந்து பொத்துக் கொண்டு வருகிறதோ இந்த பாசமும் தொப்புள் கொடி உறவும்.

பாகிஸ்தானில் சீக்கியர்கள் உபத்திரவப்படுத்தப் படுகிறார்கள் என்று செய்தி வெளியாகி சில மணிநேரங்களில் கண்டனம் தெரிவிக்கவும்,(இத்தனைக்கும் உயிர் இழப்பு இல்லை)பாகிஸ்தானுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் காலைப்பிடித்து கெஞ்சவும்,உணர்ச்சிகளை கொப்பளிக்கவும் தெரிந்த இவர்களுக்கு...

எம்மின உயிர்கள் இலங்கையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவிக்கும் வதைகளுக்கும், பச்சிளம் குழந்தைகளின் கதறல்களுக்கும்,பாவமறியா பெண்கள் அடைந்து வரும் கொடுமைகளுக்கும் குரல் கொடுக்கத் தெரியாதா? இந்த அரசாங்கமும்,பதவியிலிருப்பவர்களும் மனிதப் பிறவிகளா இல்லை ஈனப் பிறவிகளா?

உங்கள் இனத்தின் உயிரெல்லாம் உங்களுக்கு உயிர்... மற்ற இனத்தின் உயிரெல்லாம் பின்ன என்ன ___ கிள்ளுக்கீரையா?

நீங்கள் இலங்கைக்கு சமாதானம் செய்ய செல்ல வேண்டாம்,தினம் தினம் மடியும் உயிர்களுக்காக கண்டனம் தெரிவிக்க வேண்டாம்,அனுப்பும் போர் தளவாடங்களையாவது அனுப்பாமல் இருக்கலாமே!

உங்களின் இரட்டை வேடத்திற்காக இன்றல்லது என்றாவது ஒரு நாள் வருந்துவீர்கள்.அன்று உங்கள் மனசாட்சியும் உங்களைக் கொல்லும்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails