May 11, 2009

இந்தியால தான் இப்படின்னா இங்கிலாந்திலுமா!

நவம்பர் 2008 மும்பை தாக்குதலில் ஊடகங்களும் சரி அரசும் சரி ஹோட்டல் தாஜில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தியதாக இன்றளவும் குற்றச்சாட்டு உண்டு.விக்டோரியா ரயில் நிலையத்தில் பயணிகளும் பொதுமக்களுமாக பலர் மரித்துக் கிடந்ததை ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. பெரும்பாலானோரின் கவனமும் உயர் மட்ட மக்கள் இருந்த ஹோட்டல் தாஜின் மேலேயே இருந்தது.

இன்று வரை தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் சென்று சேர வேண்டிய நிவாரணம் முழுமையாக சென்றடைந்ததா என்பதும் கேள்விக்குறியே.

இந்தியாவில் தான் இந்த நிலை என்றால் இங்கிலாந்திலும் இதே நிலை தான் போல.

இங்கிலாந்தைச் சார்ந்த வில் பைக்(will pike) என்பவர் மும்பைத் தாக்குதலின் போது ஹோட்டல் தாஜினுள் மாட்டிக் கொண்டவர்களில் ஒருவர்.தப்பிப்பதற்காக ஹோட்டல் தாஜின் போர்வைகளை கயிறாக பாவித்து மூன்றாவது தள ஜன்னல் வழி கீழே குதித்திருக்கிறார்; பாதியிலேயே போர்வைகள் கிழிந்து விட, அவரின் கைஎலும்புகள்,காலெலும்புகள், முதுகெலும்பு, இடுப்பெலும்பு ஆகியவை முறிந்திருக்கின்றன.

இருபதிற்கும் மேல் அறுவை சிகிச்சை பெற்று தற்பொழுது குணமடைந்திருக்கிறார்.இப்போது நிம்மதியாக இருப்பார் என நாம் நினைத்தால்... அது தான் இல்லை! முதுகெலும்பில் ஏற்பட்ட காயம் நரம்புகளையும் பாதிக்கவே இனி மேல் அவரால் நடக்க இயலாது என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.தற்பொழுது சக்கர நாற்காலியில் காலத்தை ஓட்டுகிறார்.



இத்தகைய நிலையில் இங்கிலாந்து அரசு எந்த விதமான உதவியும் இதுவரை செய்ததில்லை என கவலை தோய்ந்த முகத்துடன் வில்லியமும் அவரது துணைவியாரும் கண்ணீர் மல்குகின்றனர்.உதவி கிடைக்கும் வரை போராடுவது என முடிவெடுத்து இணையதளம் ஒன்றின் மூலம் வேண்டுகோளும் விடுத்திருக்கிறார் வில் பைக்.அந்த இணையதளம் இங்கே

ஏற்கெனவே 2005ல் எகிப்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் போது இறந்த இங்கிலாந்து பிரஜைகளுக்கும் இங்கிலாந்து அரசு சரியான நிவாரணம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

இது ஒருபுறமிருக்க...

இங்கிலாந்தில் அமைச்சர்கள் அரசு பணத்தில் ராஜபோகமாக வாழ்கிறார்கள் எனவும்,அளவுக்கு மீறி செலவு செய்து வருகிறார்கள் எனவும் தற்பொழுது பிரச்சினை கிளம்பியிருக்கிறது.

நம் அரசாங்கங்கள் தான் சரிவர நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்குவதில்லை, வெளிநாடுகளில் என்றால் நிவாரணங்கள் சரியான முறையில் மக்களை சென்றடைகிறது என நினைத்தோமென்றால் அது தவறு.

ஊழலும்,அரசாங்கங்களின் ஊதாரித்தனமும் உலகமெங்கும் ஒன்று தான் போல.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails