May 15, 2009

நாளையேனும் விடியுமா இவர்களுக்கு?


இனத்தின் பெயரால்
இரக்கமற்று இதயமின்றி
இனப்படுகொலை செய்யும்
இதயமற்றவர்கள் இடையிலும்

பசியின் கொடுமை
பரிவு காட்ட யாருமில்லாத் தனிமை
பச்சோந்திகளின் கயமை-என
பார்க்கின்றவை பயமுறுத்துகையிலும்

நானூறு உயிர்கள் மடிவு
நான்று கொண்டு மரணம்
நாணத்தால் தற்கொலை-என்ற
நாளிதழ்களின் செய்திகள் நடுவிலும்

அதிகாரத்தின் போதையால்
அகங்காரிகளின் வதையால்
விதியின் சதியால்
வீதியில் சாமானியன் வீழ்கையிலும்

விடியும் என்ற நம்பிக்கையில்
வினாக்களோடு பயணிக்கிறவர்கள்
விடைகளைப் பெறுவது என்றோ?
------------------------------
அனுதினம் சீறும் பீரங்கிக் குண்டுகளுக்கு
அக்கரையில் உயிர்கள் மடிவது கண்டு
அகம் அங்கலாய்ப்பதுண்டு
அமைதி நிலவ வேண்டும்-என வேண்டுவது
அல்லாது வேறென்ன செய்வேன் நான்.


1 comment:

கிறிச்சான் said...

நல்ல எண்ணம்...நம்ம ஸ்ரீலங்கன் ஹிட்லருக்கு தோனனுமே ?

Post a Comment

Related Posts with Thumbnails