May 27, 2009

கோடையும்,நெல்லையும்,சில உரையாடல்களும்

பதிவு பக்கம் வந்தே ஒரு வாரம் ஆகி விட்டது. விடுமுறையில் இருப்பதால் கணினி பக்கம் அடிக்கடி வர இயலுவதில்லை. நெல்லைக்கு வந்ததுமே வளைகுடா நாடு மறந்து, நெல்லை வட்டார பேச்சும்,நெல்லை மண்ணின் மணமும் மனதிற்கு நிறைவை தந்தன என்று கூறலாம். வந்து இறங்கியதுமே மழைத் தூறல் உள்ளத்தையும் உடலையும் தணித்தது.

ஊருக்கு வந்து சில நாட்கள் ஆகிய நிலையில் என்ன எழுதலாம் என எண்ணிக்கொண்டிருந்த போது நாம் கேட்ட சில உரையாடல்களை பகிர்ந்து கொள்ளலாமே என தோன்றியது.

கடைகளுக்கும், பேருந்து நிலையத்திற்கும், மைதானத்திற்கும் சென்ற போது அருகிலிருந்தவர்கள் உரையாடியதை (ஒட்டு)கேட்க :) நேரிட்டது.அவற்றில் சில சுவாரஸ்யமானவை இங்கே.

விளையாடி விட்டு வீட்டிற்கு திரும்பும் பள்ளி பயிலும் இரு சிறுவர்கள்:

சிறுவன் 1: ஏல என்ன நீ காலைல பர்ஸ்டு ஷோவுக்கு வரியா இல்லியா ? முத்து காலைலயே சைக்கிள கொண்டு வந்திருவான். நான் அவன் கூட வந்திருவேன். வீட்ல என்ன சொல்லுவியோ தெரியாது. சைக்கிள தூக்கிட்டு வந்திரு ஆமா.

சிறுவன் 2: சரி சரி... கிரவுண்டுக்கு போறேன்ன்னு சொல்லிட்டே வரேன்.

----------------------------------

பேருந்து முன்பதிவு மையத்தில் வரிசையில் நிற்கும் ஒருவர் தொலை பேசியில்

சவம் என்னா வெயிலடிக்குடே... டிக்கெட் இன்னும் லேட் ஆகும்நு நெனக்கேன். நீ எதுக்கும் ஒரு கேஸ் பீரு வாங்கி வைக்க சொல்லீரு. சாய்ங்காலம் வாரேன் நான்.பயலுவ கிட்டயும் சொல்லீரு.குடிக்காத நானே சூடு தாங்க முடியாம முந்தா நாளு ரெண்டு பீர குடிசிட்டேனே டே.

-----------------------------------

மைதானத்தில் ...

ஏல் ரமேஷ்... அந்த ரயில் நகர் டீம் வரலன்னா மேட்ச மறு நாளெல்லாம் வெக்க முடியாதுன்னு சொல்லீரு ஆமா, அவனுவ நெனச்ச நேரத்துக்கு எல்லாம் வெளயாட இது என்ன அவனுவ அப்பன் வீட்டு கிரவுண்டா?

---------------------------------

பேருந்தில் இருவர்...

நபர் 1: கருணாநிதிக்கு ஓட்டு போட்டது தப்பா போச்சே சார். மகனுக்கும், மகளுக்கும் மந்திரி பதவி கிடைக்காத தால பிரதமரோட பதவி ஏற்பு விழாவுக்கே இருக்காம வந்திட்டாரே .

நபர் 2: தான் விரும்பினத சாதிக்க அவருக்கா சொல்லிக் குடுக்கணும்.. நீங்க வேற :)
---------------------------------

மழையினால் சில தினங்கள் முன்பு வரை இருந்த வெயில் குறைந்து வானிலை சற்றே சாதகமாக உள்ளது. குற்றாலத்திலும் ஓரளவு நீர் வீழ்ச்சி உள்ளதால் நண்பர்கள் பலர் குற்றாலத்திற்கு படை எடுத்த வண்ணம் உள்ளனர்.

ஊட்டிக்கு செல்வதானால், தங்குவதற்கே இடமில்லை என அங்கிருந்து திரும்புகிறவர்கள் தகவல் தருகிறார்கள். தங்குமிடம் முன்பதிவும் நிரம்பி வழியத்தான் செய்கிறது.

மேலும் தகவல்களுடன் அடுத்த பதிவில்.

2 comments:

Sukumar said...

ஓஹோ.... அதான ரொம்ப நாளா பதிவ காணுமேன்னு பார்த்தேன்..... சுவரஸ்யமான உரையாடல்கள்.... கலக்குங்க நண்பா...

கிறிச்சான் said...

குடிக்காத நானே ரெண்டு பீர் குடிசிட்டேண்டே./// அது நீரு தானே?

Post a Comment

Related Posts with Thumbnails