June 30, 2009

மொக்கை: இவிங்க இப்பிடித்தான்!

செய்தி-கலைஞர் புதிய படமொன்றிற்கு திரைக்கதை எழுதப்போகிறார்

இலங்கைத் தமிழன்: அப்பாடா இனி இரங்கற்பா க்களில் இருந்து சில காலம் தப்பிக்கலாம்
பிரதமர் சிங்: அப்போ இனி தந்தி தொல்லை இல்லைன்னு சொல்லுங்க
---------------------------------------
தொடர்ந்து ipl,T20 உலகக் கோப்பைன்னு ஆடி வரும் தோனி சில மாதம் ஓய்வெடுக்கணும்னு பேசிக்கிறாங்களே.

IPL க்கு அப்புறம் உலகக்கோப்பை ஆட்டங்களில் மட்டும் என்ன செஞ்சாராம் அவரு, ரெண்டு மணி நேரம் நின்னிருப்பாரா மைதானத்தில. இப்போ என்ன ஓய்வு வேண்டி கெடக்கு.
---------------------------------------

அந்த ரீபக் விளம்பரத்தில 'பிபாஷா' கூட ஓடுறது 'தோனி' மாதிரி இல்ல.

ஆமா தோனியே தான் அது. அதுல மட்டும் இல்லாம மத்த விளம்பரங்கள்ளயும் காட்டின வேகத்த வேர்ல்ட் கப்புல காமிச்சிருந்தா ஜெயிச்சிருக்கலாம்!
(பி.கு: இன்றைய தேதியில் இந்தியாவில் மிக அதிக விளம்பரங்களில் நடித்து வரும் நட்சத்திரம் தோனி தானாம். சினிமா நடிக நடிகைகளுக்குக் கூட இந்த அளவுக்கு கிராக்கி இல்லை)
-----------------------------------
செய்தி: தோனி சம்மதம் தெரிவித்தால் திருமணம் செய்ய தயார்-லட்சிமி ராய்

அவரு ஏற்கெனவே கவுந்தது போதாதுங்களா? கிரிக்கெட்டுக்கே 'பாய்' சொல்ல வச்சிராதீங்க 'ராய்' மேடம்.
-------------------------------------
நிருபர்: 2011 ல் காமராஜர் ஆட்சி அமைப்பது எந்த நிலையில இருக்கு?

காங். தலைவர்: 2011 ல் 'காமராஜர் ஆட்சி அமைய நிச்சயம் முயற்சிப்போம்'

நிருபர்: நல்ல முன்னேற்றம் தான்! என்ன முன்னாடி 'ஆட்சி அமைப்பது நிச்சயம்' அப்படீன்னீங்க, இப்போ முயற்சிப்போம் அப்படின்னு ஒரு வார்த்தையை கூட சேர்த்திருக்கீங்க.
----------------------------------------
நிருபர்: அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்திற்கும் அதிகமா மாணவர்களிடம் வசூல் பண்ணா புகார் செய்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க பண்ணியிருக்காங்களே.

கல்லூரி முதல்வர்: (ஆஃப் ரெக்கார்டில்) என்ன இது சின்னப்பிள்ளத் தனமா இருக்கு.இப்பிடி வசூல் பண்ணச் சொல்றதே அரசாங்கத்தில இருக்கும் எம்மெல்லே வான எங்க காலேஜ் சேர்மன் தான.

நிருபர்: !!!!!!!!!!!!!!?????
-------------------------------------
இது போன்ற கல்வித் திருட்டுக்களை தடுக்கவும், ராகிங்கை ஒழிக்கவும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் அவர்கள் அறிமுகப்படுத்தி வரும் புதிய திட்டங்களை மாணவர்களும், பெற்றோர்களும் சரியான முறையில் பயன்படுத்தினால் வியாபாரமாகி வரும் கல்வியை கயவர்கள் கையிலிருந்து காக்க முடியும்.

தங்கள் வருங்காலம் பாதிப்படையும் என கருதி வாயைக் கட்டிக் கொண்டு இருக்கும் மாணவர்களும், பெற்றோர்களும் உள்ள வரை இந்த திருட்டையும், அராஜகத்தையும் தடுக்க முடியாது.

4 comments:

கலையரசன் said...

கலக்கல் காக்டெய்ல்!
தெடர்ந்து படிக்கிறேன்...
நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!!

ப்ரியமுடன் வசந்த் said...

நையாண்டிகள் நறுக்குன்னு இருக்கு

அஹோரி said...

செய்தி-கலைஞர் புதிய படமொன்றிற்கு திரைக்கதை எழுதப்போகிறார்

தமிழ் நாட்டு தமிழன் :- ரிலீஸ் டேட் ட முன்னாலே சொன்னா ஊர விட்டு ஓடி உசுரையாவது காப்பத்திக்குவோம்.

எட்வின் said...

பின்னூட்டமிட்ட முகம் தெரியாத நண்பர்களுக்கு நன்றி. ஊக்குவிப்பிற்கு மீண்டும் நன்றிகள்.

Post a Comment

Related Posts with Thumbnails