July 30, 2009

உங்களையும் பாதித்திருக்கக் கூடிய 10 இல்லை 11 விஷயங்கள்

பத்து பத்துன்னு எல்லாரும் பட்டைய கெளப்பிட்டு இருக்காங்க; சரி நம்ம ஏன் பத்த போடணும்! பத்து நம்ம கிரிக்கெட்டில செல்லாத ஆட்டம் ஆச்சே. நம்ம ஆட்டத்துக்கு பதினொரு ஆள் இல்ல வேணும்... அந்த வகையில் இத்தனை வருடங்கள் என்னைக் கவர்ந்த, கவிழ்த்த ; நான் ரசித்த, வியந்த; என்னால் மறக்க, மறுக்கவியலாத பதினொரு விஷயங்கள் இங்கே.

இவற்றில் பல உங்களையும் கவர்ந்திருக்கக்கூடும் என்றே எண்ணுகிறேன்.

1.ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

புன்னகை மன்னன் திரைப்படத்தின் "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்" பாடலை இப்போது கேட்டாலும் புதிதாகத் தான் தோன்றுகிறது. கவிப்பேரரசு வைரமுத்துவின் மிக எளிதான பாடல் வரிகள், மனதை லயிக்கும் இசைஞானி இளையராஜாவின் மெட்டு, சின்னக்குயில் சித்ராவின் சிறைவைக்கும் குரல் என அசத்தலான ஒரு பாடல் இது.


2.The Corrs-Breathless

அயர்லாந்தின் Andrea Corr, Carolilne Corr, Sharon Corr & Jim Corr என்ற ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று சகோதரிகளும் ஒரு சகோதரனும் இணைந்த பாப் இசைக்குழு தான் THE CORRS. இவர்களின் Leave Me Breathless என்ற பாடலைக் கேட்டு அசந்து போனேன்.

குறிப்பாக இந்த குழுவில் drum இசைக்கும் Caroline ன் திறமையைப் பார்த்து இன்றும் மலைத்து நிற்கிறேன். ஒரு பெண் அத்தனை வேகமாக drum இசைக்கவியலுமா என ஆச்சரியப்படுகிறேன். இவரின் அதிரடியை நீங்களும் கொஞ்சம் பாருங்கள்.


3.911

ஒரு மனிதனின்/சமூகத்தின் கோபம் இத்தனை பெரிய விளைவுகளை ஏற்படுத்துமா என்ற கேள்வியோடு எனக்குள்ளே மேலும் பல கேள்விகளை எழுப்பிய சம்பவம் 9.11.2001 ல் அல்-கொய்தாவால் நிகழ்த்தப்பட்ட அமெரிக்க தாக்குதல்.

4.உயிரே-1998

இசைப்புயலின் இசையென்றால் கொள்ளைப் பிரியம்.இசைப்புயல் இசையமைத்த திரைப்படங்களின் ஒலிநாடா (cassette) எப்போது வெளிவருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். 1998 ல் உயிரே வெளியாகியிருந்த சமயம் அது.

ஒலிநாடா வாங்க சென்ற வேகத்தில் இருசக்கர வாகனத்தை No Parking ல் நிறுத்தி விட்டோம் நானும் எனது மைத்துனரும்; மறுநாள் நீதிமன்றம் வரை சென்று அபராதம் கட்ட வேண்டிய நிலைமை வந்ததை நினைத்து இன்றும் சிரிக்கத் தோன்றுகிறது. 5.தர்மபுரி பேருந்து எரிப்பு-2.2.2000

தர்மபுரியில் கல்லூரி இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்த நேரம் அது. அரசியல் பிரச்சினை காரணமாக கோவை வேளாண் பல்கலைகழக பேருந்திற்கு சில கயவர்கள் தீ வைப்பும் ,மூன்று மாணவிகளின் மரணமும் அதன் பின்னர் தர்மபுரி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த மாணவர்களுக்கு பணிவிடைகள் செய்ததும் இன்றும் மறக்கவியலாது. அனைத்து அரசியல் கட்சிகளின் மீதும் வெறுப்பு தோன்றிய நாள் அது.

6.முதல் காதல்

பெரும்பாலானவர்களின் முதல் காதல் போன்றே எனது காதலும் ......... ஆமா அதே தான்... கவுந்து போச்சு.

7.இணையம்,பதிவுலகம்,கூகுள், ஆர்குட்

பத்து வருஷத்துக்கு முன்னால இது மாதிரி எதும் எழுதினா நான் மட்டும் தான் உக்காந்து ரசிக்கணும் sorry கொடுமயேன்னு உக்காந்து படிக்கணும், ஆனா இப்போ முகமே தெரியாத பல நண்பர்களை இணையம் தந்திருக்கிறது இந்த கொடுமய எல்லாம் சகிக்க.

பத்து நொடிகளுக்குள்ளாக பத்தாயிரம் இணையபக்கங்களை திரட்டித்தருகிறது Google.சில காலம் காணாமல் போன முகங்களை எல்லாம் orkut ம், facebook ம் தேடித்தருகிறது.இப்படியெல்லாம் உலகம் மாறிப்போகும் என பத்து வருடங்களுக்கு முன் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

8.Guitar

90' களில் Guitar இசைக்கருவியின் மீது அத்தனை ஆர்வம். அதன் பின்னர் நாகர்கோவிலில் 1994ஆம் ஆண்டு எனது நண்பர்களும் இரட்டைப்பிறவிகளுமான வால்டர் மற்றும் மோகனின் மூலம் இசைக்க கற்றுக்கொண்டது கனவை நனவாக்கிய ஒரு எதிர்பாராத நிகழ்வு என்று கூட கூறலாம்.

9.சச்சின்-1998

சச்சினின் ஆட்டத்தை ரசிக்க சொல்லித்தரவா வேண்டும். குறிப்பாக 1998 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் அடித்த இரண்டு அதிரடி சதங்கள் இன்றும் நினைவிலிருக்கிறது.


இறுதிப் போட்டியின் மறுநாள் நான் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்பதை கூட பொருட்படுத்தாமல் நண்பன் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டி முன் முடங்கிக் கிடந்தேன்

10.Manchester United-சர்.அலெக்ஸ் ஃபெர்குசன்,பெக்காம்,

இங்கிலாந்து எனக்கு பிடித்த நாடு என்பதால் அங்கு உள்ள கால்பந்து அணிகளையும், வீரர்களையும் அதிகம் கவனிப்பது உண்டு. Manchester United அணியையும் அதன் மேலாளரான சர்.அலெக்ஸ் ஃபெர்குசனையும் கண்டு வியப்பதுண்டு. இத்தனை வயதிலும் அயராமல் உழைக்கும் இந்த மேலாளரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை பல.

அதே போன்று Manchester United அணியின் முன்னாள் தலைவரான டேவிட் பெக்காமின் திறமையும் ஆச்சரியப்பட வைக்கும்.

11.இந்தியா-தமிழகம்-நம்ம ஊரு

நமக்கு நெருக்கமாக இருக்கும் ஒருவரையோ அல்லது ஒரு இடத்தையோ விட்டு நாம் அகலும் போது தான் பிரிவின் கொடுமையை உணர்வோம்.அந்த வகையில் படிப்பினிமித்தமும், பணியினிமித்தமும் சொந்த ஊரை,தமிழகத்தை,இந்தியாவை விட்டு அகன்று நின்ற போது தான் அந்த வலியை உணர்ந்தேன்.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா...

இப்படி கிறுக்குகிறவன் புத்தகங்களையும்,எழுத்தாளர்களையும் பட்டியலிடாமல் போனது ஏனென்றால் முறையான புத்தக வாசிப்புகள் இல்லாமையால் தான். எனினும் எம்.எஸ்.உதயமூர்த்தி, ஜெயகாந்தன் போன்றோரின் படைப்புகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்திருக்கிறேன். பாரதியார் கவிதைகளையும் படித்ததுண்டு. முறையாக இப்போது தான் படிக்கத்தொடங்கி உள்ளேன்.

இந்த நேர்மை உங்களுக்கு பிடிச்சிருக்கும்ணு நினைக்கிறேன் :))

2 comments:

சாஷீ said...

வாத்தியாரே அருமையான பதிப்பு ,,,,நீங்கள் ஒரு guitarist ,,என்பது தெரிந்து கொண்டேன்,"ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்",,,,,அடிக்கடி பதிவுகளில் குறிப்பிடுகிறீர்கள் ,யாரு,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,முதல் காதலுக்கு பிடித்த பாடலோ??,, என்னை ஈர்த்ததும் கூட,,

கிறிச்சான் said...

அந்த முதல் காதல் யாருன்னு சொல்லவே இல்ல..."உன்னோடு உலகை உலா வரத்தான்'ன்னு" கவிதை எழுதுனீங்களே ...அவங்களா?

Post a Comment

Related Posts with Thumbnails