September 14, 2009

ராகுல்,ரஜினி,செரீனா,சச்சின்

ராகுல் முதல் ரஜினி வரை செரீனா முதல் சச்சின் வரை கடந்த வார நிகழ்வுகள் பெரும்பாலானவை அதிரடியாகத்தான் இருந்ததாக கருதுகிறேன்.

ராகுல்

ராகுல் காந்தி அவர்களின் தமிழக சுற்றுப்பயணம் காங்கிரஸில் பரபரப்பையோ மாற்றத்தையோ ஏற்படுத்தியதோ இல்லையோ ஆனால் ஊடகங்களிலும் "அரசியல்-சினிமா" வட்டாரத்திலும் பரபரப்பிற்கு குறைவொன்றுமில்லை.
ராகுலின் அரசியல் பிரவேச அழைப்பிற்கு... 'இப்போதைக்கு அரசியலில் குதிக்கும் எண்ணம் இல்லை' என இரு மூன்றெழுத்து நடிகர்களும் பேட்டி அளிக்க வேண்டிய நிலைமையையும் ஏற்படுத்தி விட்டன ஊடகங்கள்.பெரிய கட்-அவுட்களோ அளவுக்கு மிஞ்சிய விளம்பரங்களோ இல்லாமலிருந்தது சற்றே ஆறுதலான விஷயம்.

தேசிய நதிகளை இணைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என அதிரடியாக ஒரு குண்டை தூக்கிப் போட்டு விட்டு சென்று விட்டார் ராகுல். அதற்கு பதிலளித்த காங்கிரஸ் தரப்போ 'அது அவரது சொந்த கருத்து' என சப்பை கட்டு கட்டுகிறது. காங்கிரஸ் அரசு என்ன செய்யும் என பார்க்கலாம்.

தேசிய நதிகள் இணைப்பு திட்டம் குறித்து வல்லுனர்களுடன் நன்கு ஆலோசித்து அதற்கு ஒரு தீர்வு காண்பதே சரியாக இருக்கும் என தெரிகிறது.

ஏற்கெனவே தமிழகம் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்தி நிற்கிறது. மறுபக்கம் வயல்வெளிகள் (Bye-Pass Road) புற-வழிச் சாலைகளாகவும், வீட்டு நிலங்களாகவும் (Plot) மாற்றப்பட்டு வருகின்றன; வீட்டிற்கு மூன்று நான்கு என இரு சக்கர, நான்கு சக்கர மோட்டார் வாகனங்கள் பெருகி வருகின்றன... இவை மறைமுகமாக குறைவான மழை பொழிவிற்கு காரணமாகின்றன.

இவற்றால் வரண்டு வரும் தமிழகம் வருங்காலங்களில் என்ன பாடு பட போகிறதோ தெரியவில்லை.

---------------


கிரிக்கெட்-சச்சின்

50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை 25 ஓவர்கள் கொண்ட இரு இன்னிங்ஸ்களாக பிரித்து ஆடலாம் என்ற சச்சினின் கருத்து சற்றே வில்லங்கமாக தெரிகிறது. அதற்கு பதில் ஒரு நாள் போட்டிகளை ஒரு அணிக்கு 25 ஓவர்கள் மட்டுமே கொண்ட அரை நாள் போட்டிகளாக மாற்றி விடலாமோ என்னமோ :(

சச்சினின் கிரிக்கெட் மட்டையில் MRF விளம்பரம் Adidas ஆக மாறியிருப்பது அவரை இப்படி மாற்றி யோசிக்க செய்திருக்குமோ!!

நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியுடன் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் கிரிக்கெட் தர வரிசைப் பட்டியலில் பிடித்த முதல் இடம் ஒரு நாள் கூட தங்காமல் போனது ஏமாற்றமே. இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய ஆட்டமே தொடருமானால் வெகு விரைவிலேயே ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

செரீனா-கிம் கிளைஸ்டர்ஸ்

இரு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் டென்னிஸ் களம் இறங்கிய பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸ், அமெரிக்க ஓபனில் வில்லியம்ஸ் சகோதரிகளான வீனஸ்-செரீனா இருவரையும் தோற்கடித்து அதிரடியாக ஆடி வருவது அருமை.

தானே அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி கொண்ட செரீனா அமெரிக்க ஓபன் அரை இறுதிப் போட்டியில் கிம் கிளைஸ்டர்சை எதிர்த்து ஆடினார்.
ஆரம்பத்திலேயே நினைத்தேன் இன்று எப்படியும் கிம் தான் வெற்றி பெறப் போகிறார் அதற்கு செரீனாவின் பதில் என்னவாக இருக்கும் என... அதனை மெய்ப்பிக்கும் வகையில் முதல் செட்டை இழந்த செரீனா விரக்தியில் அவரது டென்னிஸ் மட்டையை மைதானத்தில் ஓங்கி அடித்தார்; முதல் முறை மட்டைக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படாமலிருக்கவே மீண்டும் அடித்து மட்டையை நொறுக்கினார்.(ஒரு பெண்ணுக்கு இத்தனை கோபம் கூடாது தான்)

இது தான் இப்படியென்றால் இரண்டாவது செட்டில் மேலும் விரக்தியடைந்தார் ... இரண்டாவது செட்டின் இறுதி நிலையில் கிம் வெற்றி பெறும் தருவாயிலிருக்கையில் எல்லைக் கோட்டு நடுவர் செரீனாவின் சர்வீசை foul என்ற முறையில் நிராகரித்தார். இதனால் ஏற்கெனவே கடுப்பாகிப் போயிருந்த செரீனா மேலும் கோபத்துடன் நடுவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார், அவரை கொலை செய்து விடுவேன் என அச்சுறுத்தியதாகவும் நடுவர் புகார் கூறவே செரீனா மேலும் தொடர்ந்து ஆட அனுமதி மறுக்கப்பட்டார்.

முன்பொரு முறை செரீனா, இந்தியா வந்திருந்த போது ஆங்கில ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கையில்... எனது சகோதரி வீனஸ் உடன் ஆடுகையில் அவர் வெற்றி பெற்று விட்டால் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாது;அவருடன் சில நாட்கள் சரியாக பேச கூட மாட்டேன் என கூறினார். இதிலிருந்தே அவரின் டென்னிஸ் மீதான வெறியை (மடத்தனத்தை) புரிந்து கொள்ளலாம்.

நடுவருடனான செரீனாவின் வாக்குவாதம் கீழை காணொளியாய்

1 comment:

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

Post a Comment

Related Posts with Thumbnails