November 01, 2009

இந்தியாவிற்கு புகழ் சேர்த்த ஐஸ்வர்யா ராய்


1994 ல் வசீகர கண்களைக் கொண்ட ஐஸ் @ ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை பர்ஸ்களிலும், சட்டைப்பைகளிலும் நண்பர்கள் பலர் வைத்துக் கொண்டு திரிந்ததைப் பார்த்திருக்கிறேன். ஐஸ்வர்யா உலக அழகியாக முடிசூட்டப்பட்டதன் பிரதிபலிப்பு அது. தனது உலக அழகி பட்டத்தால் 1994 ல் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஐஸ்வர்யா ராய்.

மாடலிங்கிற்கு வருவதற்கு முன் கட்டடக்கலையில் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். தனது ஒன்பதாவது வயதிலேயே Camelin நிறுவனத்தாரின் பென்சில் விளம்பரத்தில் நடித்திருக்கிறார். மாடலிங்கில் ஓரளவு பெயர் கிடைத்தாலும் 1994 ல் அவர் பெற்ற உலக அழகிப் பட்டம் தான் அவரை இன்னும் புகழ் பெறச் செய்தது.

மங்களூரில் பிறந்த ஐஸ்வர்யாவின் திரையுலக முதல் அறிமுகம் தமிழில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் 1997 ல் வெளியான இருவர் தான் அவரின் முதல் திரைப்பார்வை. அதன் பிறகு Aur Pyar Ho Gaya என்ற இந்திப் படத்தில் நடித்தாலும் தமிழே மீண்டும் அவருக்கு பெயரைப் பெற்றுத் தந்தது. 1998 ல் வெளியான இயக்குனர் ஷங்கரின் 'ஜீன்ஸ்' திரைப்படம் அவருக்கு மேலும் பெயர் ஈட்டித் தந்தது.

அவர் நடித்து வெளியான முதல் இரு தமிழ் திரைப்படங்களுக்கும் இசை மீட்டியவர் இசைப்புயல் ரஹ்மான் தான். அதிலும் ஜீன்ஸ் திரைப்படத்திற்காக வைரமுத்து அவர்கள் எழுதிய பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடலும், பாடல் படமாக்கப்பட்ட விதமும் வெகுவாகப் மக்களிடம் பேசப்பட்டது,
 
அதன் பிறகு இந்தி,ஆங்கிலம்,பெங்காலி,தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் அவருக்கு சிறப்பாக அமைந்த படங்கள் என்றால் 'Sarkar Raj', 'Jodhaa Akbar', 'Guru', 'Dhoom 2', 'Devdas', 'Mohabbatein', 'Hamara Dil Aapke Paas Hai', 'Josh', 'Taal', 'Hum Dil De Chuke Sanam' ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழில் ஜீன்ஸ் திரைப்படத்தின் தொடர்ச்சியாக 1999 ஆம் வருடம் ராஜீவ் மேனனின் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழில் அதன் பிறகு இப்போது தான் எந்திரன் மற்றும் ராவணாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


உலகப் புகழ் பெற்றிருக்கும் ஐஸ்வர்யா, பிரசித்தி பெற்ற டைம்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்ட உலகில் செல்வாக்கு உள்ள 100 நபர்களில் ஒருவராக சமீபத்தில் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.

லண்டனில் அமைந்துள்ள Madame Tussaud ன் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் மெழுகுச்சிலை அமைக்கப்பட்ட முதல் பாலிவுட் நடிகையும் ஐஸ் தான்.

2003 ஆம் வருடம் பிரான்சின் புகழ்பெற்ற Cannes Film Festival ல் இந்திய தரப்பில் இருந்து முதல்முறையாக நடுவராக ஏற்படுத்தப்பட்டவர் ஐஸ் என்பதும் அவருக்கு பெருமை தான்.


2005 ல் உலகில் அதிக நேயர்களைக் கொண்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான Oprah Winfrey Show விலும் கலந்து கொண்டிருக்கிறார்.

இத்தனை புகழையும், இந்தியாவிற்கு பெருமையும் சேர்த்த ஐஸ்வர்யாவிற்கு நவம்பர் 1அன்று பிறந்த நாள். பிறந்த நாள் வாழ்த்துக்களோடு அவரின் கலைப்பணியும், நல்லெண்ண பணிகளும் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள். மேலதிக தகவல்கள் இங்கே.

ஐஸ்வர்யா ராய் பச்சனின் நடிப்பில் நான் அதிகம் ரசித்தது தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்; ஆங்கிலத்தில் Mistress of Spices , இந்தியில் Raincoat, Dhoom2, Taal, Umrao Jaan, Josh.

1 comment:

கிறிச்சான் said...

ஐஸுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

Post a Comment

Related Posts with Thumbnails