November 28, 2009

மழை-கிறுக்கல்கள்



கார் முகிலால்

நீல வான் மறைகையில்

எழும் கவலையினால்

விழும் வானின்

கண்ணீர் திவலையா-நீ















அடை மழை

மெதுவாய் துவங்கும்

உன் விசும்பல்களை

பீரிட செய்தவர்-யாரோ

வான்வெளியிலும் பாகுபாடோ
















வெண் முகிலாய் இருக்கையில்

கவலை கொள்ளா வானம்-நீ

கரிய நிறம் கொள்கையில்

வெறுத்து கீழே தள்ளுதல்

வர்ண பேதமோ


















எவருமில்லா தனிமையில்

என்னுடன் ஆடும்

என்னுயிர் தோழியா நீ













தோழி என்றதால்-நின்

அடை மழையால்

அடம் பிடித்து-என்

அலுவல்களை பாதிக்கிறாயோ




















சங்கீதச் சாரலில்

சங்கேதங்களால்-தன்

அகம் மகிழும்

சிறு குழந்தையை

சினம் கொண்டு அழைக்கும்

அன்னைக்கு தெரியுமா

சாரலின் சங்கேதங்கள்




















கருப்புக் குடை

காண்பித்தால்-நீ

மீண்டும் வரமாட்டாய்

என்பதாலா-இவள்

வர்ணக் குடை

விரிக்கிறாள்

-------

நவம்பர் மழையில்
குவைத் நகரத்தில்
முடங்கிய போது
கிறுக்கியவை

5 comments:

சாஷீ said...

அனைத்தும் அருமை /////////////வெண் முகிலாய் இருக்கையில்

கவலை கொள்ளா வானம்-நீ

கரிய நிறம் கொள்கையில்

வெறுத்து கீழே தள்ளுதல்

வர்ண பேதமோ////////////...ரசிக்க வைத்தது

தமிழ் said...

/வெண் முகிலாய் இருக்கையில்

கவலை கொள்ளா வானம்-நீ

கரிய நிறம் கொள்கையில்

வெறுத்து கீழே தள்ளுதல்

வர்ண பேதமோ/

அருமை

கமலேஷ் said...

நல்ல கவிதைகள்...
நீங்கள் மழையில் முடங்கியதால் கவிதை எல்லாம் மழை போல....
பொருத்தமான நல்ல புகைப்படங்கள்...

அன்புடன் அருணா said...

ஆஹா மழை!

கிறிச்சான் said...

//வான்வெளியிலும் பாகுபாடோ//
வர்ண பேதமோ//
கருப்புக் குடை
காண்பித்தால்-நீமீண்டும் வரமாட்டாய்
என்பதாலா-இவள்
வர்ணக் குடை
விரிக்கிறாள்//

நல்லா இருக்கு!

Post a Comment

Related Posts with Thumbnails