December 31, 2009

'எல்லா புகழும் இறைவனுக்கே' 2009-2010

2009 ஆவது ஆண்டின் இறுதி தினத்தில் இந்த வருடம் வலையுலகிலும், இணையத்திலும் என்னோடு துணை நின்ற அனைத்து நல்ல உள்ளங்களையும் (குறிப்பாக இலங்கை சகோதரர் லோஷன்) நினைவு கூறுவதோடு அனைவருக்கும் என் நன்றிகளையும், புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

2009-ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களினாலும், நோபல் நாயகன் ராமகிருஷ்ணன் வெங்கட்ராமன் அவர்களினாலும் தமிழர்களையும், தமிழையும் தலைநிமிரச் செய்த ஆண்டு என்ற மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும் இலங்கை விஷயத்தில் சுமூகமான ஒரு தீர்வு இன்னமும் எட்டப்படாத நிலை வருத்தத்தைத் தான் தருகிறது.

உலகமே உற்று நோக்கிக் கொண்டிருந்த அந்த ஆஸ்கர் மேடையில் ரஹ்மான் @ திலீப்குமார் தமிழில் உதிர்த்த " எல்லா புகழும் இறைவனுக்கே " என்ற வாக்கை நேரலையில் கேட்ட தமிழர்கள் அனைவரும் நிச்சயம் புல்லரித்துப் போயிருக்கக்கூடும்.

2010 அனைவருக்கும் அமைதியான, மகிழ்ச்சியான ஆண்டாக அமைய மீண்டும் வாழ்த்துக்கள்.

" எல்லா புகழும் இறைவனுக்கே "

2 comments:

கிறிச்சான் said...

எல்லா புகழும் இறைவனுக்கே!!!

புல்லரித்துப் போன வார்த்தை!

எட்வின் said...

GERSHOM said...

//புல்லரித்துப் போன வார்த்தை!//

வார்த்தை நிச்சயம் புல்லரித்திருக்க வாய்ப்பில்லை. உங்களை வேண்டுமானால் புல்லரிக்கச் செய்திருக்கக்கூடும். நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails