December 29, 2009

போர் போதும் தோழா! மனிதம் வாழ வைப்போம்

நாகரீகம் வளர வளர அதன் கூடவே வெறுப்பும், விரோதங்களும் தேசங்களிடையேயும், மனித மனங்களிடையேயும் இன்று பெருகி வருவது மனிதத்தை எங்கு கொண்டு செல்லுமோ தெரியவில்லை.

"முன்னெல்லாம் கோபம் என்றால் கல்லெறிவார்கள். இப்போது குண்டுகளை வீசிப் போகிறார்கள்"உண்மையில் நாம் நாகரீகமடைந்து விட்டோமா?சந்தேகமாக இருக்கிறது!என சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் அவர்கள் கூறியது தான் மீண்டும் நினைவில் வருகிறது

காலங்காலமாக இருந்து வரும் பிரிவினைகளும், சூழ்ச்சிகளும் இன்னமும் தொடர்ந்து வருவதும் வருத்தம் தரும் விஷயம் தான்.

இலங்கையில் தமிழனுக்கு உரிமைகள் மறுக்கப்படுதலும் , இந்தியா-பாக், இஸ்ரேல்-பாலஸ்தீன், சவுதி-ஏமன் உள்ளிட்ட எல்லைப்பிரச்சினைகளும், மதவாதிகளின் தீவிரவாதங்களும் என்று ஓயுமோ.

இவற்றின் தாக்கத்தால், இக்கொடுமைகள் மாற வேண்டும் என்ற ஆதங்கத்துடன் ஹபீப் என்பவர் பாடல் ஒன்றை சென்ற ஆண்டு காணொளியாக வெளியிட்டுள்ளார்

இந்த பாடலில் இடம் பெறும் "இணையங்களால் இணையும் மானிடா! இதயங்களால் இணைவது எப்போது" என்ற அரூர் புதியவன் அவர்களின் வரிகளுக்கு நம்மிடம் நிச்சயம் பதிலில்லை தான். இந்த பாடல் வரிகள் அனைவரையும் நிச்சயம் அந்த ஒரு தருணத்திற்காக ஏங்கச்செய்யக்கூடும்.

இந்த பாடலை பின்னணி பாடகர் திப்பு இன்னும் சில பாடகர்களுடன் பாடியுள்ளார். புஹாரி என்பவர் இயக்கியிருக்கிறார்.

காணொளியை கீழே இணைத்துள்ளேன்.



பூ வாசல் திறந்தால்
வாசம் மயக்கும்
வாழ்க்கை இனிக்கும்

போர் வாசல் திறந்தால்
வாழ்க்கை எரிக்கும்
ஜீவன் மரிக்கும்

இதயமெல்லாம்
இணைந்திடும் நாளெல்லாம்
என் பகைமை வீழாதோ

அதிசயமாய் அகிலமும் மாறியே
அமைதியிலே வாழாதோ

ஓ - மனித மனமே
மடியும் இனமே
மயக்கம் தெளிவாய்

போர், உலகில் வெறியும்
எரியும் வரையில்
தினமும் அழிவாய்(முனைவாய்)

ஒரு ஜீவன்
உயிர் வாழ
நீ பாதை காட்டினாய்

முழு உலகம்
உயிர் வாழ
வகை செய்தோன் நீயே

இது உனக்கு
இது எனக்கு
என பிரிக்கும் உலகம்
ஒன்றானால் நன்றாகும்;
நம் துன்பம் நீங்கிடும்

ஒரு நாட்டை ஒரு நாடு
களவாடும் பிழை தான்
இதனாலே மண்மேலே
தினம் கண்ணீர் அலை தான்

எது புனிதம்
எதில் புனிதம்
என தேடும் மானிடா
இவ்வுலகில் மனிதனைப் போல்
ஒரு புனிதம் ஏதடா

இணையங்களால் இணைந்திடும் மானிடா
இதயங்களால் இணைவோம்-வா

எரிந்திடுதே அனுதினம் உலகமே
அன்பினில் நீ நனைவாயா

போர் போதும் தோழா
மனிதம் வாழ வைப்போம்
ஓர் தாயின் மக்கள்
ஒன்று சேர்ந்து நிற்போம்
ஒன்றாவோம்.

மனிதன் என்று தன் மிருகத்தனத்திலிருந்து மாறி மனிதத்தை மதிக்கிறானோ அன்று தான் இம்மண்ணில் மகிழ்ச்சி பிறக்கும்.

4 comments:

Anonymous said...

Great Song Mr. Arnie!
Thanks for sharing...

Anonymous said...

it was extremely fantastic.i really love that song....

Anonymous said...

i love ur talent..ur a blessed boon to ur parents & ur woman...may god bless u now & forever...

கிறிச்சான் said...

Nice Arnie...
good song

Post a Comment

Related Posts with Thumbnails