January 13, 2010

இறுதிப் போட்டிகளில் ஏமா(ற்)றும் இந்தியா

இறுதிப் போட்டிகள் என்றாலே இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு இதய வலி வந்து விடுமோ என்னமோ தெரியவில்லை

அதுவும் குறிப்பாக முத்தரப்பு ஒருநாள் போட்டிகள் என்றால் சொல்லவே வேண்டாம். 1998 முதல் 2009 வரை 18 முத்தரப்பு இறுதிப் போட்டிகளை இழந்திருப்பதாக புள்ளிவிவரம் ஒன்றில் படித்த ஞாபகம்

இந்தியா சொதப்பும் என்று இன்றைய ஐடியா கோப்பை இறுதிப் போட்டி துவங்குவதற்கு முன்னரே தெரிந்த விஷயம் தான்.

என்ன தான் அனுபவம் இருந்தாலும் பல ஆயிரம் ஓட்டங்களை எடுத்திருந்தாலும் இறுதிப் போட்டி என்று வரும் போது இந்தியர்கள் சொதப்புவது அதீத நம்பிக்கையா இல்லை எதிர் அணியைக் குறித்த அலட்சியமா இல்லை மெத்தனமா என்பது தெரியவில்லை.

இன்றைய ஆட்டத்தை எடுத்துக் கொண்டால் தேவையின்றி ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை அடித்து ஆட முற்பட்டதே சேவாக், கோலி, யுவ்ராஜ், தோனி என அனைவரும் ஆட்டமிழக்கக் காரணம்; மெத்தனம் என்று கூட கொள்ளலாம்.

சுரேஷ் ரைனா பந்துகளை சரியாக கணித்து ஆடியது அவருக்கு சதத்தைப் பெற்றுத் தந்தது. இந்திய அணி குறைந்தது 35 முதல் 40 ஓட்டங்கள் வரை குறைவாக எடுத்ததாகவே சொல்வேன். 280 ஓட்டங்கள் பெற்றிருக்க வேண்டிய மைதானம் அது.

எப்படியும் இனி இந்தியாவிற்கு வெற்றிவாய்ப்பு பந்துவீச்சாளர்களின் கையில் தான் இருக்கிறது. கடந்த ஆட்டங்களை கணக்கில் கொண்டால் இலங்கை அணி சற்றே நம்பிக்கை இழந்ததாகவே இருக்கிறது. எனினும் கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம்.

1 comment:

கிறிச்சான் said...

இறுதிப் போட்டிகள் என்றாலே இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு இதய வலி வந்து விடுமோ என்னமோ தெரியவில்லை/////////////சரி தான்!!!

Post a Comment

Related Posts with Thumbnails