January 22, 2010

கிரிக்கெட்-மீண்டும் ஒரு இந்தியா-பாக் மோதல்

ஒருபுறம் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய அரசாங்கம் தடை விதித்திருக்கிறது. பாகிஸ்தான் அணி இந்தியாவிற்குள் நுழைய அனுமதியும் மறுக்கிறது.

மறுபுறம் பாகிஸ்தான் ஆட்டக்காரர்களை ஐ.பி.எல் அணிகள் எதுவும் வாங்க மறுக்கின்றன. பத்திரிக்கையாளர்கள் காரணம் கேட்டால் ஏற்றுக் கொள்ளும்படியான பதிலை அளிக்காமல் நழுவுகிறார்கள்.

இவை அனைத்திற்கும் அரசியல் ஒன்றே காரணம் என அனைவருக்கும் தெளிவாக தெரியும். இவர்கள் பாக் செல்ல மறுத்தாலும், அரசாங்கம் ஆட அனுமதி மறுத்தாலும் காலத்தின் கட்டாயத்தினால் இந்தியா-பாக் கிரிக்கெட் அணிகளிடையே ஆட்டங்கள் நடந்தே ஆக வேண்டுமென்றால் யார் என்ன செய்ய முடியும்!!

19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றன.இதில் இந்தியாவும்-பாகிஸ்தானும் காலிறுதிப் போட்டி ஒன்றில் 23.01.10அன்று(இன்னும் சற்று நேரத்தில்) மோதவிருக்கின்றன.


இந்த போட்டி 23 ஆம் தேதி நியூசிலாந்து நேரப்படி காலை 10:30 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 3 மணிக்கு) தொடங்கவிருக்கிறது. ஆனால் அதையும் மழை பாதிக்கும் நிலையே உள்ளது

போட்டி நடைபெறவிருக்கும் Newzealand, Lincoln மைதானத்தில் நேற்றும், இன்றும் பெய்து கொண்டிருக்கும் மழை ஒருவேளை ஆட்டத்தைப் பாதிக்கக்கூடும். ஆட்டம் மழையால் பாதிக்கப்படுமானால் அதிக ஓட்ட விகிதத்தின் படி பாகிஸ்தான் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

2007-2008 உலகக்கோப்பையை விராட் கோலி தலைமையில் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.

நன்றி: cricinfo

1 comment:

எட்வின் said...

23 ஓவர்கள் கொண்ட இன்றைய ஆட்டத்தில். இறுதி ஓவரில் பாகிஸ்தான் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டது.

http://www.cricinfo.com/u19wc2010/engine/current/match/432019.html

Post a Comment

Related Posts with Thumbnails