January 24, 2010

திருட்டு வி.சி.டியும் செந்திலும் கவண்டரும்


செந்தில்: அண்ணே... அண்ணே என்ன ரொம்ப நாளா உங்கள ஊர் பக்கமே பாக்க முடியல


கவுண்டமணி: அடே கம்மனாட்டி தலையா என்ன அண்ணே நொண்ணேன்னுகிட்டு

இருக்கிறப்ப அண்ணேங்கிறது, தூரமா போய் நாயே பேயேங்கிறது, உன்னையெல்லாம் உதச்சா மட்டும் போதாது.

செந்தில்: அது இல்லண்ணே புது சினிமா ஒண்ணு வந்திருக்கில்ல வி.சி.டி ல அது என்ன சினிமாண்னே

கவுண்டர்: அதான் வாரத்துக்கு பத்து பன்னெண்டு வருதே, உனக்கு ஏன் நாயே இப்போ அந்த கத எல்லாம்.

செந்தில்: அத விடுங்கண்ணே, ரிலீஸ் ஆகாமலே வி.சி.டி ல யும் கம்ப்யூட்டர் பெட்டிலயும் வந்திட்டதா ஊர்ல பேசிக்கிறாங்களே அது என்ன சினிமாண்ணே.

கவுண்டர்: அடேய் பனங்காத் தலையா! ஊரு ஒலகத்தில சொல்றத கேட்டுபுட்டு இப்போ என் உயிர வாங்க வந்திருக்கியா? ஓடிப்போயிரு ஆமா

செந்தில்: அட சொல்லுங்கண்ணே!!

கவுண்டர்: அது என்னமோ டக்குபாய்னு சினிமாவாம்.

செந்தில்: கம்ப்யூட்டர் பொட்டில படமெல்லாம் வருமாண்ணே, காட்டுங்கண்ணே

கவுண்டர்: நீ நம்மூரு கொட்டாய்ல வந்தா பாத்துக்க போ! கரிக்கட்ட தலைக்கு கம்ப்யூட்டர் கேக்குதா

செந்தில்: சரிண்ணே, ஆனா எப்பிடிண்ணே சினிமா ரிலீஸ் ஆகுறதுக்குள்ள வி.சி.டி ல வந்திச்சு

கவுண்டர்: ஏன் நாயே நீயெல்லாம் ரிலீஸ் ஆக்குறதுக்கு முன்னாடியே ஜெயில்ல இருந்து குதிச்சு வெளிய வரல... அப்பிடித் தான்னு வச்சிக்கோ

செந்தில்: அது என் திறமண்ணே... உங்களுக்கு பொறாமண்ணே. ஆனா எப்பிடிண்ணே கவர்னுமெண்ட் திருட்டு வி.சி.டி வரத பாத்திட்டு சும்மா இருக்கு

கவுண்டர்: ஏண்டா நீ வெளிய வந்த பொறவு கூட தான் சும்மா இருந்தாங்க. அப்போ எல்லாம் இந்த கேள்வி கேக்காம இப்போ மட்டும் என்ன நாயே

செந்தில்: இல்லண்ணே சினிமாவ நம்பி பொழக்கிறவங்க பாவமில்ல

கவுண்டர்: பாவமோ புண்ணியமோ ஆனா இதெல்லாம் அரசாங்கத்த தான் சொல்லணும். ஒண்ண மாதிரி ஜெயில்ல இருந்து தப்பிக்கிற கம்னாட்டிங்களயும், திருட்டு வி.சி.டி எடுக்கிறவனயும் பாத்துப்புட்டு சும்மா இருக்காங்கள்ல.

செந்தில்: திருட்டு வி.சி.டி எடுக்கிறவங்கள புடிக்கவே முடியாதோண்ணே!

கவுண்டர்: ஏண்டா ஒரு 'கீ'ரப்பனையோ தீவிரவாதியையோ... ஏன் உன்ன கூட உசிரோட புடிக்க முடியல, இவுங்க திருட்டு வி.சி.டி எடுக்கிறவன புடிக்கப் போறாங்களா! போடா போ உன் வேலய பாரு

செந்தில்: அண்ணே ஒரு... ஒரு ரூபா இருந்தா குடுங்கண்ணே

கவுண்டர்: எதுக்கு நாயே இப்போ ஒரு ரூபா

செந்தில்: இல்லண்ணே உங்க கிட்ட பேசி டயர்ட் ஆகிப்ப்போச்சு... பழம் வாங்கத்தான்!

கவுண்டர்: அடேய் எந்திச்சு வந்தேன் கொன்னேப்புடுவேன் மவனே! இந்த ஒரு ரூபா கேள்விக்கு நானே இன்னும் பதில் தெரியாம முழிச்சிட்டு இருக்கேன் இதுல வி.சி.டி யாம். கம்ப்யூட்டர் பெட்டியாம். ஓடிப்போயிரு ஆமா

5 comments:

கிறிச்சான் said...

ஏண்டா ஒரு 'கீ'ரப்பனையோ தீவிரவாதியையோ... ஏன் உன்ன கூட உசிரோட புடிக்க முடியல, இவுங்க திருட்டு வி.சி.டி எடுக்கிறவன புடிக்கப் போறாங்களா! போடா போ உன் வேலய பாரு/////////அசத்திட்டீங்க அர்னீ...நல்ல நகைச் சுவை !

ahaanandham said...

அட்ரா சக்க அட்ரா சக்க .கொக்கமக்கா ,கொன்னுட்டீங்க அப்பு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நீயெல்லாம் ரிலீஸ் ஆக்குறதுக்கு முன்னாடியே ஜெயில்ல இருந்து குதிச்சு வெளிய வரல... அப்பிடித் தான்னு வச்சிக்கோ

//


?????

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அது என் திறமண்ணே... உங்களுக்கு பொறாமண்ணே.//


அப்படிப் போடுங்க..,

பதிவர் கவுண்டமணி said...

என் பதிவைக் கூடத்தான் நான் வெளியிடும் முன் பிரபல பதிவர்கள் வெளியிட்டு விடுகிறார்கள். நான் ஏதாவது கவலைப் படுறேனா?

Post a Comment

Related Posts with Thumbnails