January 28, 2010

எங்கே செல்லும் இந்த பாதை!!!

முன்னெப்போதுமில்லாத அளவிற்கு இந்த வருடம் பருவநிலையில் மாற்றம் நிகழ்ந்து வருவதை உணர முடிகிறது.

வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடங்கி விடுகின்ற பனிப்பொழிவும், குளிரும் இந்த வருடமும் அப்படியே தொடங்கியது என்றாலும் நவம்பரும் டிசம்பரும் போன பின்னர் இப்போது தான் அதன் தீவிரத்தைக் காண்பிக்க தொடங்கியுள்ளது.

பல மத்திய ஐரோப்பா நாடுகளில் வெப்பநிலை -10 டிகிரிக்கும் கீழே தான் உள்ளது.

குளிரால் பாதிப்பு ஒருபுறமென்றால் மறுபுறம் இயற்கை தனது கோபத்தை வெளிப்படுத்தி !? உயிர் மற்றும் பொருள் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

ஹெய்ட்டியில் நில அதிர்வு என்றால் பிரேசிலிலும், பெருவிலும் மழை தனது கோரதாண்டவத்தைக் காண்பித்து வருகிறது.


மரங்களை வெட்டி காகிதங்களையும் உருவாக்கி அதே காகிதத்தில் மரங்களை பாதுகாப்போம் என எழுதும் ஒரே ஜென்மம் மனித ஜென்மமாக மட்டுமே இருக்க முடியும் என்ற குறுந்தகவல் ஒன்று வெகுவாக யோசிக்க வைத்தது.



இது போன்ற இன்னும் எத்தனை எத்தனை இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளில் நாம் ஈடுபட்டு கொண்டிருக்கிறோம் என தெரியவில்லை.

பிளாஸ்டிக் கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகள், வானங்களில் இருந்து வெளியேறும் புகை, குளிர்சாதனப் பெட்டியின் CFC என பட்டியல் நீளத்தான் செய்கிறது.

நீங்களும் நானும் உபயோகிக்கும் கணினி இயற்கைக்கு என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்துமென தெரியவில்லை...!!

இவையெல்லாம் நம்மை எங்கே கொண்டு சேர்க்கும் என்ற கேள்விக்கு விடை தெரிந்தவர் யாரோ?

எங்கே செல்லும் இந்த பாதை!

யாரோ யாரோ அறிவாரோ!!!

---------

குறுந்தகவலை பகிர்ந்து கொண்ட மெரினுக்கு நன்றி

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails