இசை வெளியீட்டின் போதே அதிகம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் என்னையும் தீண்டி இருப்பதில் ஆச்சரியமில்லை, அதற்கு காரணங்கள் இல்லாமலுமில்லை. வெளிநாடு ஒன்றில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் திரைப்பட பாடல்கள் 'விண்ணைத்தாண்டி வருவாயா' விற்காகத் தானிருக்கும்.
ஆஸ்கருக்கு பின்னர் வெளியாகிய ரஹ்மானின் முதல் பாடல்கள் என்பதால் பாடல்களும் அதிகம் வரவேற்பை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக ஹோசன்னா பலரை முணுமுணுக்கச் செய்திருந்தது. ஏனைய பாடல்களும் ரசிக்கும் படியாகவே இருந்தது.பாடல்களைக் குறித்த எனது எண்ணங்களை முந்தைய பதிவான இங்கே படிக்கலாம்.
விண்ணைத்தாண்டி வருவாயா என்பதன் ஆங்கில எழுத்து வடிவம், நான் எதிர்பாராத போல/ஆனால் எப்போதும் எதிர்பார்க்கும் விதம் சரியான ஆங்கில எழுத்துக்களுடன் "VINNAITHAANDI VARUVAAYAA" என இருந்தது ஆச்சரியத்தை எற்படுத்தியிருந்தது.
இதனை VINNAITHANDI VARUVAYA-"விண்ணை தண்டி வருவய" என கூட எழுதியிருக்கக் கூடும்(அப்படித்தான் அனைத்து திரைப்படத் தலைப்புகளும், பாடல்களும், பலரின் பெயர்களும் கூட எழுதப்பட்டு வருகின்றன. உதாரணம் சூப்பர் ஸ்டாரின் SIVAJI-சிவாஜி, இதனை 'சிவஜி' என்று வாசிப்பதா? இல்லை 'சிவாஜி' என்று வாசிப்பதா?)
திரைப்படத்தில் நான் கவனித்த மற்றுமொரு விஷயம்... TITLE ஓடும் போது திரைப்பட கலைஞர்களின் பெயர்கள் தமிழில் வந்தால் அவற்றின் பிம்பம் ஆங்கிலத்திலும், ஆங்கில பெயர்களின் பிம்பம் தமிழிலும் வரும்படி வடிவமைக்கப்பட்டது. இது இயக்குனரின் சிந்தனையா இல்லை வேறு எவரின் சிந்தனையா என்பது தெரியவில்லை. எனினும்... ரசிக்க வைத்தது.
த்ரிஷாவும், சிம்புவும், இயல்பாக நடித்திருப்பதாகத் தான் உணர்ந்தேன். குறிப்பாக த்ரிஷா Jessie கதாபாத்திரத்தில் சிறப்பாகச் செய்திருக்கிறார். காதலினால் வரும் வலிகளையும்; காதலை அடைய ஒரு பெண் எத்தனை விதமான தடைகளை தாண்ட வேண்டியிருக்கிறது என்பதை இயக்குனர் சொல்லியிருக்கும் விதம் அருமை. உண்மையும் அதுவே.
Jessie கதாபாத்திரம் என்னை அதிகம் பாதித்திருப்பதற்கு முக்கியமான வேறொரு காரணம் உண்டு. Jessie என்ற அதே பெயரில் இருக்கும் எனது நண்பி தான் அது.
அவரும் கேரளத்தைச் சார்ந்தவர் தான்; அவருக்கும் திரைப்படம் பிடிக்காது. அவள் பாராட்டின, (பாராட்டிவரும்) நட்புக்கு இணை இன்றுவரை ஏதுமில்லை. அவளது வீட்டிற்கு இருமுறை சென்றிருக்கிறேன். இன்று கூட அவளது பெற்றோர்கள் கனிவாக இருக்கிறார்கள்
ஏனோ...காதலிக்க வேண்டும் என அப்போது(கல்லூரி நாட்களில்) தோன்றவில்லை. Just Friends ஆ இருப்போம் என்ற விண்ணைத்தாண்டி வருவாயாவின் வசனத்திற்கு ஏற்ப இன்றும் நண்பர்களாக இருந்து வருகிறோம்.
விண்ணைத்தாண்டி வருவாயா சிலருக்கு பிடிக்காமல் போயிருக்கிறது. காரணம்... கதாநாயகனும், நாயகியும் ஒன்று சேரவில்லையென்பதே!
எனினும் காதலின் வலியும், அதனை இயக்குனர் சொல்லியிருந்த விதமும், நான் அதிகம் ரசிக்கும் ஆலப்புழையின் அழகும், பின்னணி இசையும், த்ரிஷாவிற்காக ஒலித்த 'சின்மயி'யின் குரலும் எனக்கு பிடித்திருந்தது. ஜீன்ஸ் திரைப்படத்தில் மெல்லிய பின்னணியில் வரும் 'நி ச ரி ச' Humming ற்கு பிறகு ரஹ்மானின் இசையில் நான் அதிகம் மயங்கியது ஹோசன்னா-ஏன் இதயம் உடைத்தாய் Humming ற்குத் தான்.
ஜீன்ஸ்-'நி ச ரி ச'
ஆலப்புழையின் அழகு
இது JESSY எனக்களித்த அவளது கைவண்ணங்கள்