April 27, 2010

ஐ.பி.எல்-3 ஒரு பார்வை

மூன்றாவது ஐ.பி.எல் சாம்பியன் நம்ம சென்னை சூப்பர் கிங்சுக்கு முதலில் வாழ்த்துக்கள். அதனை சிறப்பாக வழிநடத்திய மிஸ்டர் கூல் தோனிக்கும் பாராட்டுக்கள்.

இந்த சீசனில் சென்னை சிங்கங்களுக்கு பல சிறப்புகள் உண்டென்றால் அது மிகையல்ல.

1. மூன்று சீசனிலும் அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஒரே அணி

2. இறுதிப் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த அணி

3. மூன்று சீசனிலும் 400 ற்கும் அதிகம் ஓட்டங்கள் குவித்த ரெய்னாவை சொந்தமாகக் கொண்ட அணி

4. நீல நிற உடையணிந்த அணியே வெற்றி பெறும் என்ற குருட்டு நம்பிக்கையை உடைத்த அணி.

5. மூன்று சீசனிற்கும் ஒரே அணித்தலைவரை உடைய அணி.

இப்படி பலப்பல

பிற அணிகள் குறித்து சொல்ல வேண்டுமானால் பஞ்சாப், ராஜஸ்தான் தவிர மற்ற அனைத்து அணிகளும் சிறப்பாக ஆடின என்றே கூறலாம். நான் அதிகம் எதிர்பார்த்தது டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளிடமிருந்து தான்.

டெல்லியின் தலைமை மாறியதாலோ என்னமோ!! சேவாக் முக்கியமான ஆட்டங்களில் சரியாக ஆடவில்லை. யுவராஜின் சொதப்பலான ஆட்டத்திற்கும் இதே காரணம் கூட ஒத்துப் போகக்கூடும். சங்கக்காராவிற்கும் எனக்கும் எந்த கருத்து மோதலும் இல்லை என யுவராஜ் கூறியிருந்தாலும் அது எந்த அளவிற்கு உண்மை என அவருக்கே வெளிச்சம். சென்னைக்கு எதிராக மட்டும் அதிரடி ஆடி சூப்பர் ஓவரில் வெற்றி ஈட்டினார்.  

டெல்லியின் டேவிட் வார்னரின் கேட்சுகள் அனைத்தும் அற்புதம், அவரது சதமும் மறக்கவியலாது. அது போன்று ராஜஸ்தானின் யூசுப் பத்தானின் அதிரடி சதமும், முரளி விஜயின் சதமும், ஜெயவர்தனேவின் சதமும் சிறப்பானவையே. இந்த நான்கு சதங்களில் யூசுப்பின் சதம் மட்டுமே அணியின் தோல்வியில் முடிந்தது.


கொல்கத்தா தல தாதா கங்குலி ஆரம்பத்தில் சரியாக ஆடாவிட்டாலும் பின்னர் அசத்தி விட்டார். அவர் எடுத்த சில கேட்சுகள் மிக அற்புதம். அதிக ஓட்டங்கள் குவித்தவர்களில் தாதாவிற்கு நான்காவது இடம். எனினும் கொல்கத்தா ஒரு அணியாக சிறப்பாக ஆடவில்லை.


ராஜஸ்தானின் தல வார்னுக்கு சரியாக அணி அமைந்தும் அதிக வெற்றிகளை பெறமுடியவில்லை. அவர்களின் பலமற்ற பந்துவீச்சு மற்ற அணிகளுக்கு சாதகமாகிப் போனது.

டெக்கான் தல கில்லி சரியாக ஆடாதது அவர்களுக்கு ஏமாற்றமாகிப் போனது. கிப்ஸும் சரிவர ஆடவில்லை. சுமன் மற்றும் சைமண்ட்ஸ் அதிரடியால் அரையிறுதி வரை நுழைந்தனர். ரோஹித் ஷர்மா ஆரம்பத்தில் சரியாக ஆடாவிட்டாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டார். பந்துவீச்சில் வாஸ் அசத்தினார்.

பெங்களூர் மிக உறுதியான அணியாக இருந்தும் அரையிறுதியில் கோட்டை விட்டு விட்டார்கள். உத்தப்பாவின் அதிரடியும், திராவிட், காலிஸின் கனக்கச்சிதமான ஆட்டமும், கும்ப்ளே, ஸ்டெயினின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது.

மும்பை இந்த சீசன் முழுவதும் அருமையாக ஆடினாலும் கேட்சை தவற விட்டது, நாயரின் தேவையற்ற ரன் அவுட், ஹர்பஜன் நான்காவதும் பொல்லார்ட் ஏழாவதுமாக ஆடவந்தது என இறுதிப் போட்டியில் அவர்களே அவர்களுக்கு சங்கு ஊதிக்கொண்டார்கள். எனினும் தொடரில் சச்சின் 618 ஓட்டங்கள் குவித்தது அடுத்த வருடம் உலகக் கோப்பையை எதிர்நோக்கியிருக்கும் இந்திய அணிக்கு நிச்சயம் நல்லதே.


இந்திய இளம் வீரர்களில் எஸ்.எஸ்.திவாரி, சுமன், ஜுஞ்சுன்வாலா, அஷ்வின், ரெய்னா, உத்தப்பா, ராயுடு, முரளி விஜய், ஜெகதி, பிரக்யான் ஓஜா, வினய்குமார், அசத்தினார்கள்.

எனினும் அனைத்து அணிகளிலும் மூத்த வீரர்களின் பங்களிப்பையும் மறுப்பதற்கில்லை. சச்சின், சவுரவ், திராவிட், கும்ப்ளே ஆகிய இந்தியரும், காலிஸ், ஸ்டெயின், பொலிஞ்சர், ஜெயவர்தனே, சைமண்ட்ஸ், வாஸ், மலிங்கா என இந்தியரல்லாதவர்களும் சிறப்பாகவே ஆடினார்கள்.

புதிய இளம் வீரர்களுக்கு ஐ.பி.எல் நல்ல அடித்தளம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எனினும் அரசியலும், ஆபாசமும் இல்லயென்றால் ஐ.பி.எல் இன்னும் சிறப்பாக இருக்குமென்பது என் கருத்து.

4 comments:

Chitra said...

புதிய இளம் வீரர்களுக்கு ஐ.பி.எல் நல்ல அடித்தளம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எனினும் அரசியலும், ஆபாசமும் இல்லயென்றால் ஐ.பி.எல் இன்னும் சிறப்பாக இருக்குமென்பது என் கருத்து.


.....சரியாக சொல்லி இருக்கீங்க. :-)

கிறிச்சான் said...

50 ஓவர் கிரிக்கெட் நிறைய நேரத்த வீணடிக்கும்...20-20கொஞ்ச நேரத்த தான் வீணடிக்கும்.

அதிர்ஷ்ட்டவசமா எனக்கு பாக்க கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

yeskha said...

ஊத்தப்பா இல்லீங்க உத்தப்பா

-எஸ்கா

எட்வின் said...

@ Chitra
@ கிறிச்சான்

நன்றி

yeskha said...

//ஊத்தப்பா இல்லீங்க உத்தப்பா//

அப்படிங்களா!!
மாத்தியாச்சி மாத்தியாச்சி

Post a Comment

Related Posts with Thumbnails