April 19, 2010

சென்னையின் சூப்பர் கிங் தோனி

ஒரு வழியாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அரையிறுதிக்கு ஏறக்குறைய தகுதி பெற்றுவிட்டது.கடந்த இரு சீசனிலும் சற்று எளிதாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற சென்னை இந்த வருடம் அரையிறுதிக்கு தகுதி பெற ரொம்பவே சிரமப்பட வேண்டியதாகிப் போனது.

ஹெய்டன், தோனி, பத்ரிநாத், ஹஸி என மட்டைவீச்சாளர்கள் பலரும் சரியாக ஆடாததே இதற்கு காரணம்.

சில ஆட்டங்களில் மட்டைவீச்சாளர்களின் சொதப்பலினால் தோல்வியடைந்த சென்னை மற்ற சில ஆட்டங்களில் பந்துவீச்சாளர்களால் தோல்வியடைந்தது.

கடைசி ஆட்டத்தில் சென்னை, பஞ்சாப்பிற்கு எதிராக போராடி வெற்றி பெற்றிருந்தாலும் இதற்கு முன்னர் அவர்களுடனான போட்டியொன்றில் அடைந்த தோல்வியை தவிர்த்திருந்தால் இத்தனை போராட வேண்டி வந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் பஞ்சாப்பிடம் முன்னர் அடைந்த தோல்விக்கும் பதிலடி கொடுத்ததாகி விட்டது. தமிழக அணித்தலைவர் பத்ரிநாத்தும், இந்திய அணித்தலைவர் தோனியும் ஐ.பி.எல் ஆட்டங்களில் அதிக ஓட்டங்கள் குவித்த ரெய்னாவின் அதிரடியுடன் சிறப்பான வெற்றியை சென்னைக்கு அளித்திருக்கிறார்கள்.

இதுவரை சென்னை ஆடிய 14 ஆட்டங்களில் காயம் காரணமாக தோனி மூன்று ஆட்டங்களில் ஆடாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் ஆடாமல் இருந்த மூன்று ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே சென்னை வென்றிருந்தது. மற்ற 11 ஆட்டங்களில் அவர் எடுத்த மொத்த ஓட்டங்கள் 235 மட்டுமே.

இதனையும், துவக்க ஆட்டக்காரராக ஹெய்டன் சரியாக ஆடாமல் இருந்ததையும் ஆட்டம் துவங்கும் முன் தெரிவித்து வருத்தப்பட்டவர் இறுதி ஓவரில் இரு சிக்சர்கள், ஒரு பவுண்டரி உட்பட 18 ஓட்டங்கள் எடுத்து வெற்றியடைந்த பின்னர் தனக்குள்ளேயே பேசிக்கொண்டதும், ஒரு குத்துச்சண்டை வீரரைப்போன்று விறைப்பாக நடந்து வந்ததும், அவரது தாடையில் அவராகவே ஓங்கி குத்தியதையும் என்னவென்று சொல்வதோ!!

அந்த தோனியை பாக்கணும்னா youtube ன் இந்த சுட்டிக்கு போங்க. ipl ன் காப்புரிமையால் காணொளியை இங்கு இணைக்கவியலவில்லை.

தோனி,சென்னை அணியின் மேல் அத்தனை காதல் கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.(வாங்குகிற பணத்திற்கு நாங்கள் அரையிறுதிக்குக் கூட தகுதி பெறவில்லையென்றால் அது சரியல்ல என தோனியே ஆட்டமுடிவில் சொல்லிருந்தாலும்)

மூன்று ஐ.பி.எல் சீசன்களிலுமாக மொத்தம் 1316 ஓட்டங்கள் குவித்து அதிக ஓட்டங்கள் குவித்தவர் என்ற புகழுக்கு சொந்தக்காரரான ரெய்னாவின் பங்களிப்பும், சென்னைக்கு சொந்தக்காரர் முரளி விஜயின் அதிரடி சதமும், அஷ்வின் மற்றும் பொலிஞ்சரின் பந்துவீச்சும் சென்னை அரையிறுதிக்கு தகுதி பெற மற்ற சில காரணங்கள் என்பதையும் மறுக்கவியலாது.

சென்னைக்கு விசில் போடு...தோனி பாணியில் இப்படித்தான் சொல்லத்தோன்றியது தோனியின் இறுதி சிக்சரைப் பார்த்த பின்.

நன்றி: cricinfo, ndtv

4 comments:

priyamudanprabu said...

எப்படியோ தப்பி தவறி ஜெயிச்சாச்சு

ம்ம்ம்

முதலில் சொதப்பிய தோனி கடைசியா சந்தித்த 8 பந்துகளில் அடித்து ஆடி தப்பித்து கொண்டார்
பஞ்சாம் பீல்டிங் படுமோசம் 3 காட்ச் தவறவிட்டதே சென்னை வெற்றிக்கு காரணம்

sriram said...

ishhhhhhhhhhhhhh...appa kanna kattuthey. eppadiyo vanthutomilla.

sriram said...

But Dhoni unga nermai enakku pidichirukku

prasanth said...

semi final vantha pothum endra ennathai motrinal nitchayam 2010 ipl cup chennai kay.

Post a Comment

Related Posts with Thumbnails