April 07, 2010

ஜெயவர்தனே எனும் Class act


Form is temporary but the Class is permanent அப்படின்னு ஒரு வாக்கு சொல்வாங்க கிரிக்கெட்ல, அது தான் கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் ஜெயவர்தனே சதமெடுத்த போது நினைவிற்கு வந்தது.

என்னைக் கேட்டால் ஐ.பி.எல் 3 ல் இதற்கு முன்னர் முன்னர் எடுக்கப்பட்ட மூன்று சதங்களை விட ஜெயவர்தனேவின் சதம் தான் சிறந்தது என்பேன்.

மும்பைக்கு எதிராக யூசுப் பத்தான் அதிரடியாக எடுத்த 100 ம் (8 சிக்ஸர்கள்), ராஜஸ்தானிற்கு எதிராக முரளி விஜய் குவித்த 127 ம் (11 சிக்ஸர்கள்) blast என்றால் ஜெயவர்தனே எடுத்த சதம் class எனலாம். வார்னர் கொல்கத்தாவிற்கு எதிராக எடுத்த சதமும் சிறந்தது என்றாலும் ஜெயவர்தனேவின் சதம் அதிலும் சிறந்ததே.

ஜெயவர்தனே கொல்கத்தாவிற்கு எதிராக சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார்.  அதன் பின்னர் அவர் அடித்த 13 பவுண்டரிகளும் மிக நேர்த்தியாக, அருமையாக, கணித்து ஆடப்பட்ட shot கள். மொத்தம் 14 பவுண்டரிகளை அடித்த அவர் மூன்றே சிக்ஸர்களைத் தான் அடித்திருந்தார்.

ஐ.பி.எல் போட்டிகளில் சதமெடுத்தவர்களில் குறைவான சிக்ஸர்கள்(3) அடித்தவர் ஜெயவர்தனே தான். அதே நேரம் அதிக பவுண்டரிகளை(14) எடுத்தவரும் ஜெயவர்தனே தான். இதிலிருந்தே ஜெயா ஒரு class stroke player என்பது புரியும்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் 8000 ற்கும் மேல் ஓட்டங்கள் குவித்திருக்கும் ஜெயவர்தனே டெஸ்ட் போட்டிகளில் தான் அதிக சராசரி வைத்திருக்கிறார். 

2006 ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டெஸ்ட் ஆட்டம் ஒன்றில் அவர் குவித்த 374 ஓட்டங்கள் ஜெயசூர்யாவின் சாதனையான 340 ஓட்டங்களை முறியடித்தது இன்னமும் இலங்கைக்கான சாதனையாக தொடர்கிறது.

வாழ்த்துக்கள் ஜெயவர்தனேவிற்கு.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails