May 22, 2010

வில்லங்கமாகும் விமானப் பயணங்கள்


இன்று காலையில் எழுந்ததுமே மங்களூரில் விமான விபத்து என்ற துயர செய்தியைக் கேட்டதும் மிகுந்த வருத்தம் ஆகிப் போனது. மரணம் எவர்க்கும் எதிர்பாராமல் தான் நிகழ்கிறது. எனினும் இது போன்ற துயர சம்பவங்களில் மரணம் நேரும் போது நம்மையும் அது அதிரச் செய்கிறது.

அதோடு வாழ்க்கையின் மேல் ஒரு வித நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தி விட்டு செல்வது தான் கொடுமை. குறிப்பாக குழந்தைகளும், சிறுவர்களும் மரணமடைந்ததைக் கேட்டு 'என்னடா வாழ்க்கை'!! என புலம்ப வைத்துவிட்டது இன்று.

இந்த வருடத்தில் இன்றோடு ஏறக்குறைய 20 விமான விபத்துக்கள் ஆகி இருப்பதாக இந்த இணையதளம் தெரிவிக்கிறது. சமீபத்திய விமான விபத்துக்கள் அனைத்தையும் இங்கு தொகுத்து வைத்திருக்கிறார்கள். http://www.planecrashinfo.com/

கடந்த வருடம் விமான விபத்துக்கள் சகஜமாகி விடுமா என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன். அதனையும் இந்த பதிவில் இணைத்துள்ளேன்.

இவ்வுலக வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என மீண்டும் உணர்த்தியிருக்கிறது இன்றைய சம்பவம். என்னமோ போங்க :(
-----------

பிப்ரவரி 25, 2009

கடந்த இரண்டு மாதங்களினுள் இன்றோடு மூன்றாவது முறையாக விமான விபத்தை செய்திகளின் வழியே கேட்க நேரிடுகிறது.விமானப் பயணம் என்றாலே பலருக்கு கிலியை ஏற்படுத்தும். (குறிப்பாக முதல் பயணம்) இன்றைய விபத்துச் செய்தி இந்த பயத்தை மேலும் அதிகரிக்கும் என்றே கருதுகிறேன்.

ஜனவரி 15 அன்று அமெரிக்க விமானம் US Airways Airbus A320 விண்ணேறிய சில நிமிடங்களில் பறவைகள் மோதியதால் எஞ்சின் பழுதடைந்து தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.விமானியின் சாதுர்யத்தால் ஹட்சன் ஆற்றில் இறக்கப்பட்டு பயணம் செய்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


பிப்ரவரி 12,2009 ல் அமெரிக்க விமானம் Continetnal Express-3407 ஒன்று தரையிறங்க சில நிமிடங்களுக்கு முன்னர் நியூயார்க்,பஃபல்லோ என்ற நகரின் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது.அதில் விமானி உட்பட பயணம் செய்த 48பேரும் பரிதாபமாக மரணமடைந்தனர்.

விமானத்தின் பைலட் விமானத்தை குறிப்பிட்ட வரையறைக்கும் தாழ்வாக விமானத்தை இறக்கியதால் தான் விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.பனிமூட்டம் காரணமாக அது ஏற்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும் முன்னர் Good night என்பது வரை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கேட்ட விமானி, விமானம் விபத்துக்குள்ளாகும் என கொஞ்சமும் நினைத்திருக்க மாட்டார்(விமானியின் இறுதி உரையாடல் இங்கே)

இன்று Turkish விமானம் Flight TK 1951 நெதர்லாந்,ஆம்ஸ்டர்டமில் தரையிறங்க சில வினாடிகளுக்கு முன்னர் மூன்றாக உடைந்து நொறுங்கியது.இந்த விபத்தில் 9பேர் மரணமடைந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


இப்படியாக விபத்துகள் தொடர்ந்து நிகழுமேயானால்,பேருந்து விபத்துகளை போன்று விமான விபத்துகளும் சர்வ சாதாரணமாகி விடும் என்றே தெரிகிறது.
ஹட்சன் விபத்தை பார்த்ததுமே எனக்கு விமானத்தில் பயணம் செய்ய கிலி ஏற்பட்டது.அதன் பின்னரும் இருமுறை பிரயாணம் செய்தாகிவிட்டது உயிரை கையில் பிடித்துக் கொண்டு.

என்ன செய்வது எதிர்பாராததை எதிர்பார்த்து தானே ஆக வேண்டும்!

புகைப்படங்கள் நன்றி: bbc

4 comments:

அகல்விளக்கு said...

ரொம்ப கொடுமைங்க...

Chitra said...

கலக்கமாத்தான் இருக்குது.

goma said...

துபாயிலிருந்து தாய்நாடு திரும்பியவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் மனநிலையை யோசிக்கவே நெஞ்சு படபடக்கிறது

Mohideenjp said...

தாய்நாடு திரும்பியவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள்
What will do

Post a Comment

Related Posts with Thumbnails