July 01, 2010

சமய @ மத குறியீடுகளும் பள்ளிக்கூடங்களும்

இத்தாலிய பள்ளிக்கூடங்களில் சமய குறியீடுகள் வைப்பதற்கு குறிப்பாக சிலுவையை வைப்பதற்கு தடை விதித்து ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் ஒன்று 2009ல் அளித்த தீர்ப்பு பலவிதமான வாதங்களை எழுப்பியிருக்கிறது.

அதனை எதிர்த்து இத்தாலி அரசு தற்போது வழக்கு தொடர்ந்திருக்கிறது. பல ஐரோப்பிய நாடுகளும் அதற்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கின்றன.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த தடை உத்தரவு வர காரணமாக இருந்தது கத்தோலிக்க பெண்மணி ஒருவர் என்பது தான்.

நீதிமன்ற தீர்ப்பு நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய விஷயம். சிறார்களிடம் எந்த விதமான கருத்துக்களையும், எண்ணங்களையும் வலுக்கட்டாயமாக ஏற்படுத்துதல் தவறான அணுகுமுறையே.

அவர்கள் வளரும் குடும்ப சூழ்நிலையில் எந்தவிதமான இறைநம்பிக்கையை கொண்டிருந்தாலும், எந்த விதமான குறியீடுகளை பின்பற்றினாலும் பள்ளிக்கூடம் போன்ற பொது இடங்களில் குறிப்பாக பலவிதமான இறை நம்பிக்கையுடைவர்கள் மத்தியில் சக மனிதனாக மனிதம் பாராட்டுதல் தான் அழகேயல்லாமல் சமயங்களை காரணம் காட்டி பிரித்தல் அழகாயிராது.

மனிதம் போற்றும் எண்ணம் தோன்றுவதற்கு இது போன்ற சமய, மத, இறை நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட பள்ளிக்கூட முறைகள் நிச்சயமாகவே வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மதங்கள் வாழ்ந்தது போதும் மனிதம் வாழட்டும்.

1 comment:

violetisravel said...

Anna can u write abt Dhoni's mge???

Post a Comment

Related Posts with Thumbnails