August 25, 2010

எங்கே செல்லும் இந்த (கிரிக்கெட்) பாதை

ஆறு மாதத்திற்கும் குறைவான காலமே இருக்கிறது கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளுக்கு. 2007 ல் முதல் சுற்றில் பங்களாதேஷிடம் அடைந்த தோல்வியோடு வெளியேறிய இந்திய அணி 2011 உலகக்கோப்பைப் போட்டிகளுக்கு தன்னை இன்னமும் தயார் செய்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

கிரிக்கெட் ஆட்டத்திற்கு முன்னர் சூதாட்டமும் பணமும் பிரதானமாகி நிற்கிறது இன்று இந்திய கிரிக்கெட் உலகில்.

2007 ல் துவங்கப்பட்ட ஐ.சி.எல் அதற்கு போட்டியாக துவங்கப்பட்ட ஐ.பி.எல் இவை எதுவும் இந்திய கிரிக்கெட்டிற்கு நன்மையாக அமையவில்லை என்பது தான் வருத்தம் தரும் விஷயம்.

ஐ.பி.எல்லும் ஐ.சி.எல்லும் வீரர்களுக்கு பணம் அளித்த அளவிற்கு அவர்களுக்கு திறன் ஏதும் அளித்ததாகத் தெரியவில்லை.

சரியான வேகப்பந்து வீச்சாளர் எவரும் இன்னமும் அணியில் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு. இருக்கின்ற வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் சரியான உடல்திறனோடு இல்லாததும் குறையே.

ஷகீர் கான், பாலாஜி, ஆர்.பி.சிங், இர்ஃபான் பத்தான், இஷாந்த் ஷர்மா, பிரவீன் குமார் என பலர் இருந்தாலும் சீராக விக்கெட் எடுத்து Match Winners என சொல்லிக்கொள்ளும் படியாக எவரும் இல்லாதது ஏனோ!

ஆல் ரவுண்டர் என பார்த்தால் அதற்கும் சொல்லிக்கொள்ளும்படி எவருமில்லை. சேவாக், யுவ்ராஜ், ரைனா இவர்களைத் தவிர வேறு எவரையும் சரியாக இந்தியா இது வரை பயன்படுத்தியதில்லை. ரவீந்திர ஜடேஜாவிற்கு வாய்ப்புக்கள் கொடுத்தும் அவர் ஏதும் சாதித்ததாக தெரியவில்லை.

2007 உலகக்கோப்பைக்குப் பின்னர் பெரிதாக சாதித்தது என்றால் 2007 T-20 உலகக்கோப்பையை வென்றதும், 2008-ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு காமன்வெல்த் ஒருதின கோப்பையை வென்றதும், டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றதுமே.

மற்ற அணிகள் குறிப்பாக இந்திலாந்தும், இலங்கையும் வெகுவான முன்னேற்றங்களைக் கண்டுள்ளன. புதியதாக அணிக்குள் வருகின்றவர்களும் அவர்கள் பங்களிப்பை சிறப்பாக அளிப்பதும் இதற்கு ஒரு காரணம்.

பாகிஸ்தானில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறந்து விளங்கினாலும் அணியாக ஆடும் போது சொதப்புகிறார்கள். வீரர்கள் வருவதும் போவதுமாக இருப்பதும் அவர்களின் காமெடி கிரிக்கெட் வாரியமும் சரியானால் நல்லது நடக்கும். எனினும் இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திற்கு எதிராக பெற்ற டெஸ்ட் வெற்றிகள் பாகிஸ்தானிற்கு உற்சாகம் அளிக்கக்கூடும்.

மற்ற அணிகள் பலவும் வலுவாக இருக்கையில் இந்தியா இன்னமும் பலவீனமாக இருப்பது அவர்களது உலகக்கோப்பைக் கனவை நனவாக்க முடியாமல் போனாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

இந்தியா தனது முதல் ஆட்டத்தைத் தவிர மற்ற அனைத்து ஆட்டங்களையும் இந்தியாவிலேயே ஆடுகிறது.

பிப்ரவரி 19 அன்று பங்களாதேஷிற்கு எதிராக மிர்பூரில் தனது முதல் ஆட்டத்தை துவக்குகிறது. அது தான் உலகக்கோப்பை போட்டிகளின் ஆரம்ப ஆட்டமும் கூட.

இந்தியா மீண்டும் இந்த புகைப்படங்களில் இருக்கின்ற நிலைமைக்கு ஆகாமல் இருந்தால் சரிதான்.

2 comments:

Chitra said...

Ok, Sir.... Present Sir!!! See you later, Sir. :-)

Arnold Annan vazhi vandhavanga said...

sariyaatthaan solli irukkeenga Anne. Ennaa panradhu pazhamperumai pesi veenaa poradhe nammavanga vazhakkamaa pochu. Ini nadakkappora pottigalla vetripera thayaar aaganumnu yaarum yosikkarathe illai. Ellam over confidensthen..........

Post a Comment

Related Posts with Thumbnails