December 27, 2010

மாற்றம் 'ஏ 'மாற்றம்.


ஏன் இவைகள்?
என்னையும் அறியாமல்
என் நினைவையும் அறியாமல்
என் முடிவுகள் சரிதானா!!

என் வார்த்தைகள் சரிதானா!
என்னை நானே புரிந்து கொள்ள இயலவில்லை.

காயப்படுகிறேனா - இல்லை
காயப்படுத்துகிறேனா - தெரியவில்லை
காரணங்கள் புரியவில்லை

ஏன் இந்த மாற்றம் - சரிதானா

உள்ளதை நான் சொல்கிறேனென்றால்
உலகம் இல்லாததைச் சொல்கிறதா? 

என்னை உலகம் சீரழிக்கிறதா - இல்லை
என்னை நானே சீரழிக்கிறேனா

அழிகிறேனா - இல்லை
அழிக்கப்படுகிறேனா

ஏமாற்றங்கள்... 
மாற்றத்தான் செய்கின்றன
மனித வாழ்க்கையின் போக்கினை

எதிர்பார்ப்புகள் இருக்கும் வரை
ஏமாற்றங்களுக்கு குறைவில்லை

ஏதாயினும், 
இருக்கின்றதை வைத்து நிறைவடைவதே
எனக்கும் எவர்க்கும் அழகு! 

1 comment:

Kiruthigan said...

கவிதை அருமை...
ஏ.ஆர்.ஆருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் எட்வின்

கு.கிருத்திகன்
http://tamilpp.blogspot.com/

Post a Comment

Related Posts with Thumbnails