January 07, 2011

எழுதுகிறேன் ஏனோ எழுதுகிறேன்


எழுதுகிறேன்
ஏனோ எழுதுகிறேன்
எவர்க்கோ எழுதுகிறேன்

எல்லைகள் கடந்து
எவர் கண்ணிலேனும் படும்
என்ற கனவில்
எழுதுகிறேன்

எதேச்சையாக
எவர் பார்த்தாலும் - கருத்து
எதுவும் உரைக்காமல்
எகிறிச் செல்கின்றனர்

எடுப்பான புகைப்படங்களுக்கும்
எவரோ எழுதியதை
எடுத்து வெட்டி ஒட்டுதலுக்கும் - முகநூலில்
எழுதப்படாத கருத்துக்கள் இல்லை

எதுவுமில்லா வேடிக்கைகளுக்கு - ஆர்குட்டில்
எழும் ஆரவாரங்களுக்கு குறைவில்லை

எதார்த்தத்திற்கு விலையில்லை - நல்
எண்ணங்களுக்கு மதிப்பில்லை

எனினும் எழுதுகிறேன்
ஏனோ எழுதுகிறேன்

எவர்க்கேனும் உதவியாய் இருக்கும்
என்ற நம்பிக்கையில் - நாளும்
எட்வின் எழுதுகிறேன்
ஏனோ எழுதுகிறேன். 

3 comments:

Chitra said...

எழுதுங்கள், தொடர்ந்து எழுதுங்கள். நேற்றைய இடுகை போல, எங்களின் உள்ள உணர்வுகளையும் படம் பிடித்து காட்டி, எழுதுங்கள்.

சாஷீ said...

எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க

கார்த்தி said...

// எவரோ எழுதியதை
எடுத்து வெட்டி ஒட்டுதலுக்கும் - முகநூலில்
எழுதப்படாத கருத்துக்கள் இல்லை

நானும் இதைப்பற்றி குறைப்படுகின்றேன். யாரோ எழுதுவதை அப்பிடியே கொப்பி பண்ணுவது மட்டுமல்லாது. அதை தாங்களே எழுதியதுபோலவே பலர் போட்டு நல்ல பெயர் எடுக்க முயல்கின்றனர். இது பொறுத்துக்கொள்ள முடியாதது!

Post a Comment

Related Posts with Thumbnails