August 17, 2011

உறங்கும் உணர்வுகள்




உணர்வுகளை எவர் தான் அறிவார் - ஒருவர்
உணர்வுகளை மற்றவர் புரிந்து கொண்டால்
உவகை கொள்ளுமே உலகம்

உணர்வுகள் ஏற்றுக்கொள்ளப் படுமோ - இல்லை
உதைத்துத் தள்ளப்படுமோ என்ற
உள்ளார்ந்த பீதி ஒருபுறம்!

உணர்வுகள் ஏற்றுக்கொள்ளப்படுதலால்
உயரவிருக்கும் - மன
உளைச்சல்கள் மறுபுறம் - என்பவற்றால்
உள்ளுக்குள் உறங்கும் உணர்வுகள் ஏராளம்!!

உணர்வுகளை உள்ளுக்குள் புதைத்து - உயிரிருந்தும்
உயிரற்ற சடலமாய் நீங்குகிறது மனித வாழ்க்கை.  
உள்ளக்கிடக்கைகளை  எவர் அறிவாரோ! 


3 comments:

aotspr said...

நல்ல கவிதை.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Riyas said...

கவிதை நல்லாயிருக்கு

Anonymous said...

''...ஒருவர்உணர்வுகளை மற்றவர் புரிந்து கொண்டால்உவகை கொள்ளுமே உலகம்..''
உவகை கொள்ளும். No woorries.

Post a Comment

Related Posts with Thumbnails