March 10, 2012

ஏதோ ஒரு வெற்றிடம்


என் வேதனையும் சஞ்சலமும்
என்னோடு மரிக்கட்டும்

என் பெலன் என்னை விட்டுப் போனது
என் ஜீவன் அங்கலாய்க்கிறது

என் எலும்புகள் 
என்னை உருக்குகிறது

என் சரீரம் மரிக்காமலே
சவமாய் போனது

என் நீதி நியாயங்கள் 
என்னையே பரிகசிக்கின்றன.

என் மனசாட்சி
என்னை ஏளனமாய் பார்க்கிறது

ஏதோ ஒரு வெற்றிடம்
என்னுள்ளில் 

என்று மாறுமோ இந்த
எளியவனின் பாடுகள் 

என்று கேட்கப்படுமோ
என் கதறல்கள் 

என் சரீரம் மரிக்காமலே
சவமாய் போனது

1 comment:

சித்தாரா மகேஷ். said...

மனதை தளரவிடாமல் காத்திருங்கள்.நிச்சயம் வெற்றிடம் நிரப்பப்படும்.

Post a Comment

Related Posts with Thumbnails