May 04, 2012

விடை தெரியா விசித்திர உலகம்

வரம் வேண்டும் என்றவனுக்கு
வனம் கிடைக்க
வனம் வேண்டும் என்றவனுக்கு
வரம் கிடைக்க

செவியற்றவன்
செவியுடைவனை நோக்கி ஏங்க
செவியுடையவனோ - (சிரமங்களால்) ஏனடா
செவி என அங்கலாய்க்க

பொருள் தேடி அலைபவனுக்கு
இருள் கிடைக்க
பொருள் பெற்றவன்
இன்னல்களால் தவிக்க

எப்போது விடியும்
என சிலர் தவிக்க
எப்போது அடையும்
என பலர் இருக்க

பிள்ளைகள் பிறக்க
ஏங்குபவர்கள் இருக்க
பிள்ளைகள் தொல்லைகள்
என்பவர்களும் இருக்க

படைத்தவனை ஒருபுறம்
பகைப்பவர்கள் இருக்க
படைத்தவனை மறுபுறம்
புகழ்பவர்களும் இருக்க

இப்படியாக
இன்னும் தொடர்கிறது
இவ்வுலகமும்
இந்நிமிடமும்

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails