September 21, 2013

காகித கிடக்கைகள்

உணரப்படாத விசும்பல்கள்
கண்கள் காணாத கிறுக்கல்கள்
காற்றில் அலைக்கழிக்கப்படுகின்றன
கடற்கரையில் சுண்டலுக்குப் பின்னர்
எவரோ எவருக்கோ எழுதிய கடிதம்

September 10, 2013

பெண்ணியம்? ஒரு கேள்விக்குறி

மின்னும் வளையலும்
ஜொலிக்கும் சங்கிலியும்
முகவுரை முடியுமுன்
முடிவுரை ஆகிப் போகின்றன
கடன் கொடுத்தவள் வரவே
முகூர்த்த வீட்டில்;

தாலியேறியதும் மூளியாகிறாள்
தான் பெற்ற இரவலுக்காக!
திருமணத்திற்கு வந்தவள்!!
Related Posts with Thumbnails