September 10, 2013

பெண்ணியம்? ஒரு கேள்விக்குறி

மின்னும் வளையலும்
ஜொலிக்கும் சங்கிலியும்
முகவுரை முடியுமுன்
முடிவுரை ஆகிப் போகின்றன
கடன் கொடுத்தவள் வரவே
முகூர்த்த வீட்டில்;

தாலியேறியதும் மூளியாகிறாள்
தான் பெற்ற இரவலுக்காக!
திருமணத்திற்கு வந்தவள்!!

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails