December 05, 2011

திரைப்படம் அரசியல் ஆக்கப்படுவது அழகல்லவே

குத்தாட்டங்களும், அரைகுறை ஆடைகளும் பெரும்பாலான திரைப்படங்களில் முன்னிறுத்தப்பட்டாலும் சில திரைப்படங்கள் கடந்த காலங்களிலும் சரி இன்றைய காலகட்டத்திலும் சரி சமூக நலன் கருதிய கருத்துக்களை பறைசாற்றி வந்திருக்கின்றன என்று சொல்லலாம்.

எனினும் திரைப்படங்கள் சமூக நலனை பாதிக்கும் வண்ணம் எடுக்கப்படுவதாக ஒரு சாரார் குறை கூறாமலும் இல்லை. அந்த வகையில் சமீபத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் திரைப்படம் DAM 999.

திரைப்பட இயக்குனர் சோகன் ராய், தமிழகத்தை சார்ந்தவர் அல்ல என்பதும், தமிழகத்தில் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு வலுக்க மற்றொரு காரணமாக அமைந்து விட்டது.

DAM 999 திரைப்படம் வெளியானால், தமிழக கேரள மக்களிடையே நிலவும் இணக்கமான நிலைமை மாறி கோபமும், மனக்கசப்பும், கைகலப்பும் ஏற்பட்டு விடும் என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள் அரசியல்வாதிகள்.


ஆனால் இன்றைக்கு, தமிழக - கேரள எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது என்றால் அதற்கு முழு காரணம் இரு மாநில அரசியல்வாதிகளும்,அவர்களின் தவறான பிரச்சாரமும் தானேயன்றி வேறொன்றுமில்லை.


சிகரெட் பிடிப்பது அல்லது மது அருந்துவது போன்ற காட்சிகள் அமைக்கடுவதால் ஏற்படாத பாதிப்பு ஒரு அணை உடைவது போன்ற காட்சி அமைப்பதால் ஏற்பட்டு விடப் போகிறதா என்ன!?

மற்றொரு கேள்வியும் இங்கு முன் வைக்க வேண்டியது கட்டாயமாகிறது. DAM 999 திரைப்படம் வெளியாவதற்கு இத்தனை எதிர்ப்பு காட்டுபவர்கள். முல்லைபெரியார் அணையைக் குறித்த Dams - The Lethal Water Bombs என்ற குறும்படம் வெளியான போது எங்கிருந்தார்களோ?

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கு விஷயத்தில் இத்தனை அறிக்கைகள் விடுவதும், போராட்டம் நடத்துவதும் கேரள அரசியல்வாதிகளுக்கு அழகோ என்னவோ?

திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்த்தல் சிறந்தது, அரசியலையும் திரைப்படத்தையும் ஒப்பிடுவது அழகல்லவே.

1 comment:

K.s.s.Rajh said...

////திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்த்தல் சிறந்தது, அரசியலையும் திரைப்படத்தையும் ஒப்பிடுவது அழகல்லவே.////

நல்ல கருத்து

Post a Comment

Related Posts with Thumbnails