Showing posts with label ஏர்டெல். Show all posts
Showing posts with label ஏர்டெல். Show all posts

August 18, 2009

ஏர்டெல் - நீங்க நல்லவரா கெட்டவரா

ஏர்டெல் கைபேசியில் GPRS மூலம் வலையில் உலவலாம் என நேற்று GPRS ஐ இயக்கிய போது... ஏதோ ஒரு விளம்பர சுட்டியில் தவறுதலாக சொடுக்கியிருக்கிறேன். அப்படி சொடுக்கிய சில வினாடிகளுக்குள்ளாக நீங்கள் தரவிறக்கம் செய்த java games களுக்காக (தரவிறக்கம் செய்யாமலே)99 ரூபாய் கட்டணமாக எடுக்கப்பட்டுள்ளது என ஏர்டெல்லில் இருந்து sms வந்ததும் அதிர்ந்து போனேன்.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி அன்று தான் (இலவச sms வசதி இருந்தும்)முன்னறிவிப்பில்லாமல் sms களுக்கு 50 பைசா வசூலித்தார்கள், மீண்டும் என்ன இது கொடுமை என நினைத்துக் கொண்டு உடனடியாக கைபேசியிலிருந்தே வாடிக்கையாளர் சேவையில் (121) புகார் செய்தேன்; இரு நாட்களுக்குள் பதிலளிப்பதாக கூறினார்கள்.

இன்று மாலை வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து ஒரு பெண்மணியின் அழைப்பு வந்தது... 99 ரூபாய் பணம் மீண்டும் கிடைக்கப்பெறும் என நினைத்தால் நடந்தது வேறு. நீங்கள் தரவிறக்கம் செய்திருப்பதாகவே எங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதால் உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்காது என கூறிவிட்டு துண்டித்தார். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் என வேறு கூறி கடுப்படித்தார் அந்த பெண்மணி.

மீண்டும் அழைத்தேன் 121 ல்... என்னங்க இந்த மாதிரி ஒரு பெண்மணி கூறினார் என தெரிவித்து விட்டு சற்றே கோபமாக 'ஆகஸ்ட் 2 அன்று தான் குளறுபடி செய்தீர்கள் மீண்டும் என்ன சார் இது' என கூறினேன்.சில வினாடிகள் அமைதி காத்தவர் நாளை மதியத்திற்குள் அந்த தொகை திரும்பக் கிடைக்கப்பெறும் என தெரிவித்தார்.அப்போது தான் சற்று சமாதானமடைந்தேன்.

10 வினாடிகளுக்குள்ளாக இழந்த 99 ரூபாயும் கிடைக்கப்பெற்றேன். நமது பணத்தை நாம் பெறுவதற்கே இத்தனை தில்லு முல்லுகள்... என்னத்த சொல்ல.

இது இப்படியென்றால் ATM தரும் தொல்லை இதை விட பெரிது, கடந்த வாரம் நான் பணம் எடுக்க முயற்சிக்கையில் பணம் வராமலயே பணம் எடுத்திருப்பதாக ரசீது மட்டும் வந்தது. புகார் செய்து விட்டு காத்திருக்கிறேன் அந்த சில ஆயிரங்கள் கிடைக்கப்பெறுமென.

August 02, 2009

ஏர்டெல்லின் குளறுபடி

கைபேசியிலேயே முழித்து பின்னர் குட் மார்னிங்க் முதல் குட் நைட் வரை அடங்காமல் குறுந்தகவல் அனுப்புவது நான் உள்ளிட்ட இன்றைய தலைமுறையின் வழக்கமாகி விட்டது. இணையத்தை விட்டால் அடுத்தபடியாக கைபேசியில் sms எனப்படும் குறுந்தகவலில் தான் அரட்டை, மொக்கை எல்லாம்.

அதுவும் குறிப்பாக பண்டிகை, பிறந்தநாள் அல்லது ஏதும் விஷேச தினங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். காலையில் தொடங்கும் குறுந்தகவல் அனுப்புதல் இரவு ஓயும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். வழக்கம் போல இன்று காலை எழுந்ததும் கைபேசியில் நேரத்தைப் பார்த்து விட்டு நண்பர்கள் தினம் என்பதால் (அப்பிடின்னு சொல்லிக்கிட்டாங்க) நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப தொடங்கினேன்.

(எஸ்.எம்.எஸ் அனுப்பலன்னா அதுக்கு வேற ஏண்டா _ய _ய ன்னு எங்கள எல்லாம் மறந்தாச்சான்னு வேற பாசமா எஸ்.எம்.எஸ் வரும்... சரி ஏன் வம்புன்னு தான் இப்பிடியெல்லாம்)

வழக்கமாக ஒரு குறுந்தகவலுக்கு எடுக்கப்படும் கட்டணத்தை விட அதிக கட்டணம் எடுக்கப்பட்டிருந்ததை இரண்டு குறுந்தகவல் அனுப்பிய பின்னர் தான் புரிந்து கொண்டேன். நண்பர்களிடம் உடனே தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்களுக்கும் அப்படியே ஆனதாக தெரிவித்தார்கள்.

உடனே சுதாரித்துக் கொண்டு இரண்டு குறுந்தகவலோடு நிறுத்திக் கொண்டேன். பாவம் நண்பர் ஒருவர் விஷயம் தெரியாமல் இருபது நண்பர்களுக்கு ஒரேயடியாக (group sms) நண்பர்கள் தின வாழ்த்து அனுப்பியிருக்கிறார். நான் விசாரித்த ஏர்டெல் சந்தாதாரர்கள் அனைவருக்கும் இது நிகழ்ந்திருக்கிறது.

இத்தனைக்கும் ஏர்டெல்லின் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து எந்தவித முன்னறிவிப்பும் குறுந்தகவலாக வரவில்லை. அதனை அவர்கள் செய்திருக்கலாம்.

சரி வாடிக்கையாளர் சேவையில் என்ன தான் காரணம் சொல்ல வருகிறார்கள் என்பதை அறிய அவர்களுக்கு அழைத்தால் ... இன்றைய தினம்(2.8.2009) அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தங்குதடையின்றி குறுந்தகவல் சென்று சேர வேண்டும் என்பது தான் காரணம் என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள்.

இந்த கொடுமய எல்லாம் எங்கே போய் சொல்றதோ?
Related Posts with Thumbnails