Showing posts with label என்னவள். Show all posts
Showing posts with label என்னவள். Show all posts

February 29, 2012

உன் நினைவில் வாழ்கின்றேன்

என் உள்ளத்தின் ஏக்கங்கள்
உன்னைச் சேருமா
என் உள்ளத்தின் உணர்வுகள்
உன்னை மாற்றுமா

உன் நினைவில் வாழ்கின்றேனே
உன் நினைவில் வீழ்கின்றேனே

ஏனோ என் உள்ளம் உனைத் தேடுதே
ஏனோ என் உள்ளம் நீயின்றி வாடுதே

உன் நினைவில் வாழ்கின்றேனே
உன் நினைவில் வீழ்கின்றேனே

உயிர் இருக்கும் வரையில்
உன் நினைவுகள் என்னுள்
உடல் இருக்கும் வரையில்
உன் முகம் என்னுள்

உன் நினைவில் வாழ்கின்றேனே
உன் நினைவில் வீழ்கின்றேனே 

September 05, 2010

உன்னருகே நான்


உன்னருகே நான்
என்னை பார்த்தேனே-என்
உள்ளமெல்லாம் மகிழ்ந்தேனே
என்னை நான் மறந்தேனே
மறவாமலே உன்னை நினைத்தேனே

உன்னைத் தேடினேன்
உயிர் வாடினேன்
என்னை நீ பிரிந்ததேன்
என் உள்ளம் விட்டகன்றதேன்.

உயிரெல்லாம் நீ
உணர்வெல்லாம் நீ
உன்னிடமெனை தொலைத்தேனே
இனி என்னை எங்கே தேடுவேன்

.......

கனவில் வந்த யாரோ அவளுக்காக கிறுக்கியது.
....

என்னால் முடிந்த குரலில் Guitar பின்னணியில் பாடவும் செய்திருக்கிறேன் Guitar இசைத்ததும் எட்வினே. இந்த கொடுமைய எல்லாம் கேக்கணும் அப்படின்றது உங்க தலையெழுத்து. ம்ம்ம்
Related Posts with Thumbnails