December 24, 2008

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

எனது முயற்சியில் ஒரு கிறிஸ்துமஸ் வீடியோ.

"சமாதான பிரபு இயேசுகிறிஸ்து பிறந்த நன்னாளில்

உலகம் முழுதும் சமாதானம் நிலவ பிரார்த்திப்போம்"

December 16, 2008

வெளிநாட்டிலும் நம்மவர்கள் கை!!!வண்ணம்

நான்கு தினங்களுக்கு முன்னதாக ஓமன் நாட்டில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ஒரு இடத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது;நான் தூக்கம் கலைந்து ஏன் பேருந்து நிறுத்தப்பட்டது என்ற கேள்வியோடு கண் விழித்துப்பார்க்கையில் உடன் பயணித்த 90 % (ஆண்) பயணிகள் வெளியிலே தங்கள் பின்புறத்தைக் காட்டிக்கொண்டு ஏதோ செய்து கொண்டிருப்பதைக் காண நேர்ந்தது. சில மணித்துளிகளுக்குப் பின்னர் கண்ணை கசக்கிக் கொண்டு தூக்கத்திலிருந்து முழுமையாக மீண்ட பின்னர் தான் புரிந்தது அவர்கள் அனைவரும் நம்பர் 1 போய்க்கொண்டிருந்தார்கள் என்று.

பேருந்தில் பெண்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணமும் கூச்சமும் கொஞ்சம் கூட இல்லாமல் பட்டப்பகலிலேயே அதுவும் வெளிநாட்டில் இத்தகைய காரியத்தை செய்வதற்கு நம்ம நாட்டு மக்களுக்கு எப்படி தான் தோன்றுகிறதோ தெரியவில்லை. இத்தனைக்கும் படிக்காதவர்கள் என்றால் கூட பரவாயில்லை. மெத்த படித்த பொறியாளர்களும், அலுவலக அதிகாரிகளுமே இத்தகைய காரியத்தைச் செய்வது தான் கவலைக்குரிய விஷயம். என்னுடன் பயணம் செய்த இரு அமெரிக்கர்கள் நம்மவர்களைக் கிண்டலடிக்க எனக்கு மிகுந்த மன சங்கடமாகிவிட்டது.பேருந்து ஓட்டுனரையும்(பாகிஸ்தானைச் சார்ந்தவர்) குறை சொல்ல வேண்டியதுள்ளது. பயணிகள் தவறு செய்வதற்கு இவரும் காரணமாகி விட்டார்.சாதாரணமாக ஓமன் நாட்டு ஓட்டுனரென்றால் இப்படி வழிகளில் நிறுத்த மாட்டார்; கழிப்பிடம் இணைக்கப்பட்டுள்ள சாலையோர உணவகங்கள் அருகில் நிறுத்தவது தான் வழக்கம்.

தமிழகத்திலும் பேருந்து பயணங்களின் போது பல முறை இதனைக் கவனித்திருக்கிறேன்.
இந்த பழக்கம் நம்மவர்கள் நம் ஊரிலிருந்து கற்றுக்கொண்டு சென்றது தான். பிறநாடுகளுக்கும் சென்று நாங்கள் இப்படிப்பட்டவர்கள் தான் என்று தங்கள் பெருமையைப் பறைசாற்றுகிறார்கள்.

நமது இந்தியாவை, தமிழகத்தை, சுற்றுப்புறத்தை அறிந்தும் அறியாமலும் நாமே குப்பை மேடாக்கி வருவதும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. பிளாஸ்டிக் குவளைகளில் தேனீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்தும் நம்மில் சிலர் அதனை அலேக்காக ஓடும் ரயிலில் இருந்து அப்படியே வீசியெறிவதும், பேருந்து பயணச் சீட்டுகளை பயணம் முடிந்ததும் காற்றில் பறக்க விடுவதும், போதை வஸ்துக்களை மென்றுவிட்டு ப்ளிச் ப்ளிச் என நடை மேடைகள் மற்றும் திரையரங்குகளில் உமிழ்வதும்.வேர்க்கடலைகளை வயிற்றினுள்ளே தள்ளிவிட்டு அதன் தோடுகளை ஹாயாக பேருந்திலும், ரயிலிலும், திரையரங்குகளிலும் இருக்கைகளின் அடியிலே தள்ளுவதும் தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது.

இது போன்ற சிறிய விஷயங்களில் நாம் தவறு செய்வதை நிறுத்தினாலே நமது இந்தியாவை நாம் சுத்தமும் சுகாதாரமுமாக வைக்க இயலும். மேலும் பெற்றோர்கள் இது போல தருணங்களில் தத்தம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருத்தலும் மிக அவசியம். இல்லையென்றால் வெளிநாடுகளில் நமது மானம் தொடர்ந்து காற்றில் பறப்பது தொடரத்தான் செய்யும்.

December 09, 2008

ஈத் பெருநாளில் பகுதியளவே மகிழ்ச்சி-அமீர்கான்

ரங்க்தே பசந்தி உள்ளிட்ட நாட்டுப்பிரச்சினைகளை உள்ளடக்கிய திரைப்படங்களில் நடித்த ஹிந்தி திரைப்பட நடிகர் அமீர்கான் இன்று பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அளித்த பேட்டியில் பல உண்ர்ச்சிப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.அவரளித்த பேட்டியின் ஒருசிலபகுதியின் தமிழாக்கம் இங்கே.(முன்னரே சில இஸ்லாம் அமைப்புகள் வேண்டிக்கொண்டபடி மும்பையின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையில் கருப்புத்துணி அணிந்திருந்தார்)

ஈத் பெருநாளாகிய இன்று எனக்கு முழுமையான மகிழ்ச்சியில்லை; பகுதியளவே மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

மும்பையின் தாக்குதலுக்கு பின்னான இந்திய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை.எத்தகைய நேரத்திலும் குறிப்பாக இது போன்ற நேரங்களில் ஏறெடுத்துப்பார்க்கும் படியான;மக்கள் நம்பிக்கை வைக்கும் படியான அரசியல் வாதிகள் தற்போது இந்தியாவில் யாருமில்லை.

இந்திய அரசியல்கட்சிகள் வரும் தேர்தல்களில் தங்களை புதுப்பிக்க வேண்டும்;திறமை வாய்ந்த வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்; இளைஞர்கள் அரசியலிற்கு வருவதையும் ஆதரிக்கிறேன்.இன்று ஊழலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் பின்னாட்களில் திருந்துவார்கள் என்று பரிபூரணமாக நம்புகிறேன்.

மேலும் அரசியல்வாதிகளை மாத்திரம் குறை கூறவும் முடியாது. அவர்களும் நம்மில் ஒருவரே;அவர்கள் ஜூபிடர் கோளில் இருந்தோ வேற்று கிரகங்களிலிருந்தோ வந்துவிடவில்லை. நாம் தான் அவர்களை தேர்தெடுத்தோம்;இப்போது நாமே குறையும் கூறுகிறோம். எனவே தேர்ந்தெடுத்த நாமும் குறைகூறப்படவேண்டியவர்கள் தான்.

இந்தியர் ஒவ்வொருவரும் முதலில் அவரவர் வாழ்க்கையை சீர்திருத்த வேண்டும்;அவரவர் வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும்; அவ்வாறு செய்யும் பட்சத்தில் மட்டுமே நம் நாட்டை நாம் சீர்திருத்த முடியும். அதன் பின்னர் பிறரை குறை கூறுவோமானால் அது தகும்.

மதத்தின் பெயரால் தீவிரவாத தாக்குதல் நடத்துவது துரதிருஷ்டமானது. அவ்வாறு செய்பவர்கள் இஸ்லாமிய மதத்தின் பெயரை சொல்லவே தகுதியற்றவர்கள். தீவிரவாதத்திற்கு மதமில்லை என்றே கருதுகிறேன்.அண்டை நாடான பாகிஸ்தானை மொத்தமாக குறை கூறுவதும் சரியல்லவே;ஏனென்றால் அவர்களும் தீவிரவாததிற்கு பல உயிர்களை பலி கொடுத்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானிலிருக்கும் சில அமைப்புகள் தான் தீவிரவாதத்திற்கு காரணம் என்று நினைக்கிறேன். எனவே உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியம்.அமைதியை விரும்பும் அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து போராடுவது வேண்டியதாக இருக்கிறது. ஏற்கெனவே உலகின் பல நாடுகளும் ஆதரவு அளித்திருப்பது மகிழ்ச்சியே;பாகிஸ்தானும் ஆதரவு கை நீட்டியிருப்பது வரவேற்கப்படவேண்டியது.

மும்பையில் மட்டுமல்லாது இந்தியாவின் பல பாகங்களிலும் தாக்குதல் நடத்தியிருக்கும் தீவிரவாதிகளை ஒடுக்க நீண்டகால குறிக்கோள்களுடன் உடனடியாக செயல்படுவது அவசியம்.தீவிரவாதிகளின் தாக்குதலிற்கு பின்னர் மிகுந்த துக்கமடைந்தேன். அதன் தாக்கத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை. எனவே தான் கஜினியின் வெளியீட்டை தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளேன்.

மும்பை தாக்குதலிற்கு பின்னர் எனது பாதுகாப்பை நான் கூட்டிக்கொள்ளவில்லை.

இவ்வாறு கூறினார். அவரது கருத்துக்கள் அனைத்தும் சரியெனவே படுகின்றது

உலகின் மிகச்சிறந்த பேட்மிண்டன் நம்பிக்கை நட்சத்திரம்-2008

ஹரியானாவைச் சார்ந்த பதினெட்டே வயதான பேட்மிண்டன் மங்கை சைனா நேவால் (Saina Nehwal), இந்த ஆண்டின் சிறந்த நம்பிக்கை நட்சத்திர வீராங்கனை (Most promising player of the year 2008) என்று சியோலில், அகில உலக பேட்மிண்டன் அமைப்பால் பெருமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் காலிறுதி வரை முன்னேறி சாதனை படைத்தார். ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளில் ஒரு இந்தியர் காலிறுதிக்கு தகுதி பெற்றது அதுவே முதல் முறை. உலக ஜூனியர் சாம்பியன்(2008) பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ள இவர் இந்தியாவின் தற்போதைய ஜூனியர் சாம்பியனுமாவார்.

2008 ல் இளைஞர்களுக்கான காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டிகளில் உலக சாம்பியன் பட்டம் பெற்று சாதனையும் படைத்துள்ளார்.

டிசம்பர் 5, நிலவரத்தின்படி உலக பேட்மிண்டன் தரவரிசையில் 10 ஆவது இடத்திலுள்ளார். இதன் மூலம் உலக தரவசிசையில் முதல் பத்து இடத்திற்குள் நுழைந்த முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

எனது முந்தைய பதிவில் கூறியபடி, குழு போட்டியான கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்தியாவில், நேவால், மில்கா சிங், செஸ் ஆனந்த், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பிந்த்ரா போன்ற தனி மனித விளையாட்டு வீரர்களையும் ஊக்குவித்தல் மிக அவசியமாகும்; அது இவர்கள் மேலும் உலக அரங்கில் சாதனை படைக்க உதவும் என்பதில் ஐயமில்லை.

December 08, 2008

கன்னியாகுமரியின் வனப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்பைச் சொல்லும் சில புகைப்படங்கள் இங்கே...
இது எனது ஐம்பதாவது பதிவு...இதனை நான் பிறந்த மாவட்டமான கன்னியாகுமரிக்கு சமர்ப்பிக்கிறேன்
கன்னியாகுமரியின் செயற்கைக்கோள் புகைப்படம்
முட்டம் கடற்கரை
குளச்சல் துறைமுகம்
பசுமை நிறைந்த நாஞ்சில்
விவேகானந்தர் பாறை, கன்னியாகுமரி

சூர்யோதயம்,கன்னியாகுமரி

சூர்ய அஸ்தமனம், கன்னியாகுமரி

கன்னியாகுமரியின் மற்றுமொரு கோணம்

திருவிதாங்கூர் ராஜாவின் அரண்மனை,பத்மநாபபுரம்,தக்கலை
திட்டுவிளை மலையடிவாரம்
ரப்பர் தோட்டம், கீரிப்பாறை
திற்பரப்பு
சுசீந்திரம் கோவில்
திற்பரப்பு நீர்வீழ்ச்சி

தென்னைகளினிடையே எட்டிப்பார்க்கும் கதிரவன், கொட்டாரம்

காற்றாடி, ஆரல்வாய்மொழி

நாணல், காளிகேசம்

தென்னந்தோப்பு, கொட்டாரம்

மிகப்பழமையும் புகழும் வாய்ந்த காதரின் பூத் @ புத்தேரி மருத்துவமனை, நாகர்கோவில், 1895
மார்த்தாண்டம் CSI Nesamony Memorial Church, Bulit in 1883 by a British Architect John Sinclair

133 அடி உயர திருவள்ளுவர் சிலை,கன்னியாகுமரி

காந்தி மண்டபம்,கன்னியாகுமரி

ஆசியாவின் மிக உயரமானதும்,நீளமானதுமான தொங்கு பாலம் (தொட்டில்பாலம்), மாத்தூர்

December 04, 2008

ஏ.ஆர்.ரஹ்மானின் நெருங்கிய உதவியாளர் ஸ்ரீதர் காலமானார்

நான்கு முறை தேசிய விருது பெற்ற ஒலிப் பொறியாளர் (Sound Engineer) ஸ்ரீதர் டிசம்பர் 1 ஆம் தியதி (இசை ஒலியுடன் விளையாடியவர் ஒலியே இன்றி) தனது நித்திரையிலேயே மாரடைப்பால் காலமானார்.

இசைப்புயல் என்று வர்ணிக்கப்படும் உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கடந்த 15 வருடமாக இணைந்து பணியாற்றி வந்தவர் தான் திரு.ஸ்ரீதர் அவர்கள். ரஹ்மானுடன் கடந்த 15 ஆண்டுகளில் எந்த நிலையிலும் மனவருத்தம் கொள்ளாமல் இருந்திருக்கிறார்.

ரஹ்மானின் முதல் சினிமாவான ரோஜாவிலிருந்து தற்போதைய (அமீர்,அசின் நடித்துள்ள) ஹிந்தி சினிமாவான கஜினி வரை தனது கடின உழைப்பை கொட்டியிருக்கிறார்.கஜினியின் இறுதி இசை வடிவமைப்பிற்காக பல நாட்கள் அதிகாலை மூன்று மணி வரையிலும் ரஹ்மானுடன் பணியாற்றிருக்கிறார்.

ரஹ்மானின் மேடைக் கச்சேரிகளுக்கும், இசை நிகழ்ச்சிகளுக்கும் இவரது பங்கு மிகப்பெரியது. சொல்லப்போனால் ரஹ்மானின் வலது கை எனவும் கூறலாம் திரு ஸ்ரீதர் அவர்களை. கோடம்பாக்கத்திலுள்ள ரஹ்மானின் பஞ்சதன் ஒலிப்பதிவு மையத்தில் மற்றொரு ஒலி அமைப்பாளர் திரு.சிவகுமார் அவர்களுடன் இணைந்து பல திரைப்படங்களுக்கு இரவு பகல் பாராமல் பணியாற்றியிருக்கிறார்.

இந்திய இசை உலகில் டிஜிட்டல் (DTS) இசை உத்தியை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு.

உலகப்புகழ் வாய்ந்த இசைக்குழு Beatles உடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஜாக்கீர் உசேன், பண்டிட் ரவி சங்கர், ஜார்ஜ் ஹாரிசன் போன்ற உலக பிரபலங்களுடனும் சிறப்பான பணியாற்றிருக்கிறார்.

இந்தியாவின் மிகச்சிறந்த ஒலி பொறியாளர்களில் ஸ்ரீதரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.மஹாநதி, லகான், தில்சே, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற திரைப்படங்களுக்காக நான்கு முறை தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார் திரு.ஸ்ரீதர் அவர்கள்.

இதுவரை இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர் மஹாதேவன், ஜி.வி.பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களுடன் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

ரஹ்மானின் குழுவில் நான் அதிகம் மரியாதை வைத்திருக்கும் நபர்களில் திரு.ஸ்ரீதர் அவரும் ஒருவர்.

திரைப்பட பாடல்களில் பெரும்பாலும் இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கும் ரசிகர்கள் இவரைப்போன்ற கலைஞர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும், பாடகர்களுக்கும் முக்கியத்துவமளித்தால் இவர்களும் காலத்தால் அளிக்கப்படமுடியாத சாதனையாளர்கள் ஆவதில் சந்தேகமில்லை.

இழப்பால் வருந்தும் குடும்பத்தினருக்காக பிரார்த்திப்போம்.

நன்றி http://www.aamirkhan.com/blog மற்றும் http://en.wikipedia.org/wiki/H._Sridhar

December 03, 2008

நீயாக மட்டுமிருந்தால்...


இருந்தால் உன்னோடு

பேகிக்கொண்டேயிருப்பேன்

என்னுடன் பேசுவது

நீயாக மட்டுமிருந்தால்.


சிரித்துக் கொண்டே இருப்பேன்

ரசித்து மகிழ்வது

நீயாக மட்டுமிருந்தால்


அழுது கொண்டேயிருப்பேன்

ஆறுதல் சொல்வது

நீயாக மட்டுமிருந்தால்


உறங்கி கொண்டேயிருப்பேன்

கனவில் வருவது

நீயாக மட்டுமிருந்தால்


மறுநொடியில் இறந்து விடுவேன்

என்னை மறக்க நினைப்பது

நீயாக மட்டுமிருந்தால்

November 30, 2008

அரசியல்வாதிகளால் இந்தியாவிற்கு இனி மீள்வே இல்லை!

மும்பையில் நிகழ்ந்த கோர சம்பவத்தின் பின் அரங்கேறும் ஒவ்வொரு அரசியல் காட்சிகளும் ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் தான் ஏற்படுத்துகின்றது.இந்த இக்கட்டான சமயத்திலாவது இந்திய அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து விடமாட்டார்களா என ஏங்கிய ஒவ்வொரு இந்திய பிரஜைக்கும் இந்திய அரசியல்வாதிகள் நாங்கள் என்றுமே ஓரணியில் நிற்கப்போவதில்லை என ஓங்கி குரல் கொடுத்திருப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்திருக்கின்றனர்.

தீவிரவாதிகளின் தாக்குதலை முழுமையாக முறியடிக்கும் முன்னரே இவர்களின் அரசியல் ஆதாய நாடகங்கள் தொடங்கியிருந்தன.பிரதமரும் எதிர்கட்சி தலைவர் அத்வானி அவர்களும் ஒன்றாக மும்பைக்கு வருகிறார்கள் என்றனர்;அது நடந்ததா என்றால் இல்லையென்றே தோன்றியது.குஜராத்தின் முதல்வர் வேறொரு மாநிலத்திற்கு வருகை தர என்ன அவசியமுள்ளது? (கோத்ரா சம்பவத்தின் போது இவர் எப்போது அங்கு சென்றார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்) வந்ததோடு மட்டும் நிற்காமல் பண உதவி அளிக்கப்படும் என பிச்சை போடாத குறையாக சொல்லி விட்டுப் போனார்.இவரது பணத்திலா இன்று காவல் துறை அதிகாரிகளின் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றது? மறைந்த திரு.ஹேமந்த் அவர்களின் திருமதி பணத்தை பெற்றுக்கொள்ளமாட்டேன் என தெரிவித்தது அரசியல் ஆதாய அகங்காரிகளுக்கு முகத்தில் அறைந்தது போன்றிருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.

இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அத்வானி அய்யாவும்,கட்சித் தலைவர் ராஜ்நாத்தும் வரமாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.காரணம் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கிறார்களாம்.இத்தனை அசம்பாவிதத்திற்கு பின்னரும் இவர்கள் ஓரணியில் நில்லாமல் வருகின்ற தேர்தல்களை முன்வைத்தே ஓரோ அடியும் எடுத்து வைக்கிறார்கள்.தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பணம் அளிப்பு விவகாரம் முதல், அனைத்துக் கட்சி கூட்டப் புறக்கணிப்பு வரை எல்லாம் தேர்தலை பின்னோக்கமாகக் கொண்டவையே.தேர்தலில் தீவிரவாதத்தை தடுக்கத் தவறிய காங்கிரஸ் அரசை முன் வைத்து ஓட்டு சேகரிப்பதே இவர்களின் நோக்கம்.

மகாராஷ்டிராவின் காங்கிரசோ அக்கறையே இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறது.இத்தனைக்கும் உளவுத்துறையால் முதலிலேயே எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள் என இன்றைய செய்தி தெரிவிக்கின்றது.அம்மாநிலத்தின் துணை முதல்வர் பாட்டிலோ இத்தனை பெரிய மாநிலத்தில் ஒன்றிரண்டு இப்படி நிகழ்வது சகஜம் தான் என சப்பை கட்டு கட்டுகிறார். (என்னய்யா செய்ய இவங்கள?)

இனி அரசியல்வாதிகளால் இந்தியருக்கு ஏன் மீள்வு இல்லை? என்ற தலையங்கத்திற்கு வருகிறேன்.இந்த நெருக்கடி சமயங்களில் கூட ஒன்று சேர்ந்து ஒரு முடிவிற்கு வராமல் ஓட்டிற்காக மட்டுமே அரசியல் நடத்தும் இவர்களால் எப்படி இனி இந்தியருக்கு மீட்பு கிடைக்கப்போகிறது?தனிமனித பாதுகாப்பிற்கு என்ன ஆதாரமிருக்கிறது?

இன்றைய நிலையைக் குறித்துக் கவலை கொள்ளாமல், இனி எப்போதோ வருகின்ற தேர்தலுக்காக நேரம் செலவிடும் இவர்களா இந்தியாவிற்கு பாதுகாப்பு அளிக்கவிருக்கிறார்கள்.இவர்களுக்கு வருகின்ற தேர்தல்களில் தக்க பதிலடி கொடுக்கப்பட வேண்டும்.இந்தியன் என்ற உணர்ச்சியுள்ள ஒவ்வொரு இந்தியனும் சிந்திக்கவில்லையென்றால் இந்தியா நாளைய தினம் தீவிரவாதத்திற்கு மடிவது நிச்சயம்.

இந்தியன் என்ற நிலையில் மிகுந்த வேதனையிலும், மன உளைச்சலிலும் இதனை எழுதுகிறேன்.இந்தியாவின் பாதுகாப்பிற்காக பிரார்த்திக்கிறேன்.

November 28, 2008

ராஜ் தாக்கரே எங்கே போனார் இன்று?


மும்பையில் 50 மணி நேரமாகியும் மோதல் இன்னும் முழுமையாக நிறைவு பெறாத நிலையில் பொது மக்களும்,அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் தொலைக்காட்சி வழியும் இணையத்தின் வழியாகவும் தங்கள் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் மும்பையின் ராஜாவான ராஜ்தாக்கரே இன்னும் மௌனம் சாதிப்பது ஏனோ தெரியவில்லை.பிற மாநிலத்தவனை குறிப்பாக வட மாநிலத்தவர்களை வசைபாடும் இவருக்கு இன்னும் கருத்து கூற சமயம் வரவில்லை போலும்.

மகாராஷ்டிராவில் பிற மாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பை மறுக்கும் (குறிப்பாக இரயில்வேதுறையிலும் புதிய தொழில்துறைகளிலும்) இவர் நிச்சயமாக இன்று பிற மாநிலங்களைச் சார்ந்த கமாண்டோக்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருப்பதைத் தொலைக்காட்சிகளில் கண்டிருக்கலாம்.பிற மாநிலத்தவர் ஆனபடியால் அந்த கமாண்டோக்களை வேண்டாமென்றிருக்கலாமே இன்று.ஏன் கூறவில்லை? இவரைப்போன்ற கீழ்த்தரமான அரசியல்வாதிகளுக்கு ஆதரவளிக்கும் மக்களைத் தான் குறை கூற வேண்டியுள்ளது.

தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் கேரள மாநிலத்தைச் சார்ந்த மேஜர்.உன்னிகிருஷ்ணன் அவர்கள் தன் இன்னுயிரை ஈந்திருக்கிறார்.வேறு சில கமாண்டோக்களும் காயமடைந்திருக்கிறார்கள்.இவர்கள் தான் நம் நாட்டைக் காக்கின்ற உன்னதர்களேயன்றி நாற்காலி அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளில்லை என ஒவ்வொரு இந்தியனும் குறிப்பாக மராத்தியர்களும் புரிந்து கொள்ள வேண்டுதல் மிக அவசியம்.

வேதனையிலிருக்கும் குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறேன்.
வாழ்க பாரதம்.

November 27, 2008

இந்தியர் ஒன்றுபட வேண்டிய தருணம்

தீவிரவாதிகளின் அடக்குமுறைக்கு ஆளாகியிருப்பது மும்பைவாசிகளுக்கு இது ஒன்றும் புதிதல்ல என்றபோதிலும் முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு திகிலும் நடுக்கமும் வேதனையும் கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.மும்பையிலிருந்து நண்பர்கள் இதனையே தெரிவிக்கிறார்கள்.
மும்பைவாசிகள் மட்டுமின்றி பிற மாநிலத்தவரும்,வெளிநாட்டவரும் திகிலால் நிறைந்திருக்கிறார்கள்(இங்கிலாந்து கிரிக்கெட் அணி போட்டிகளை ரத்து செய்து விட்டு தாயகமும் திரும்பவிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்).தொலைக்காட்சி வாயிலாகவும் வானொலி வாயிலாகவும் மற்றும் பத்திரிக்கை வாயிலாகவும் அறிந்து கொண்டிருக்கிற நமக்கே சொல்லவொண்ணா பயத்தை அளிக்கையில் அங்கிருப்பவர்கள் என்ன மனநிலையிலிருப்பார்கள் என்பது மிகவும் வேதனையளிக்கும் விஷயம்.

இந்த வருடத்தில் மட்டும் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல்கள் வேறு எந்த வருடமுமில்லாத அளவிற்கு எல்லை மீறிப் போய்கொண்டிருக்கிறது.ஒவ்வொரு தாக்குதலின் போதும் பிரதமரும் பிற அமைச்சர்களும் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளிக்கிறார்கள்.அவை வெறும் வாக்குறுதியே ஒழிய செயல்களால் மாற்றப்படாதது தான் இத்தகைய தாக்குதல்கள் மீண்டும் மீண்டும் நிகழக் காரணம் என கருதுகிறேன்.

இந்தியாவின் வாணிப மையத்தையே குறி வைத்து அதில் வெற்றியும் கண்டிருக்கும் இக் கயவர்களின் எண்ணம் வருங்காலங்களில் இன்னும் மேலோங்கியே சென்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.அதனை ஒடுக்க வேண்டுமென்றால் அரசு,காவல்,நீதி,கட்சிகள்,மாநிலங்கள் உள்ளிட்ட அனைத்து இந்திய அமைப்புகளும்,இந்தியர் ஒவ்வொருவரும் ஒன்றுபட வேண்டியது மிக அவசியம்.

அமெரிக்காவும் இங்கிலாந்தும் 9/11, 7/7 என்ற தியதிகளில் இதைப்போன்றே;இதனை விட அதிகமாகவே தாக்குதலுக்குள்ளான போதும் அதன் பின்னர் அத்தகைய தாக்குதல் அங்கு நிகழவில்லையே ஏன்? 9/11,7/7ன் பின்னர் அந்நாட்டு அரசும் மக்களும் ஓரணியில் நின்றார்கள்;தாக்குதல்களை தடுத்தார்கள்.இங்கோ திரும்பிய பக்கமெல்லாம் தீவிரவாதிகளின் சதி.காரணம் செயலிழந்த நமது உளவுத்துறையும்;காவல்துறைகளுமே.

மேலும் பிரச்சினை என்று வரும் போது ஒரு கட்சி மற்றொரு கட்சியை குறைகூருவதும்,சாதிச்சண்டையால் தன் சக மனிதனை அடித்துக் கொள்(ல்)வதும்.அண்டை மாநிலத்தவனை அடித்து விரட்டுவதும்,அயலானுக்கு நீர் வழங்க மறுப்பதுமான விஷயங்களில் வீரர்களாகிக் கொண்டிருக்கிறோம்.

விஷமிகளாய் இனியும் இந்தியர் ஒருவருக்கொருவர் வீம்பு காட்டிக்கொள்வார்களென்றால்;ஒற்றுமையாய்,சகோதரர்களாய் விட்டுக்கொடுத்து வாழ பழகவில்லையென்றால் இந்தியன் ஒவ்வொருவனும் தன் உயிரை தீவிரவாதி என்னும் அரக்கனிடம் அர்ப்பணிக்கும் நாள் வெகு தூரத்திலில்லை.

நாம் பிளவுபட்டு நின்றதாலேயே சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயர்கள் அடிமைத்தனத்திற்கு கீழ்ப்பட்டோம்.இனியும் பிளவுபட்டு நிற்போமேயென்றால் தீவிரவாத அரக்கர்களின் அடிமைத்தனத்திற்கு அடிபணியத்தான் போகிறோம் என்பதில் ஐயமில்லை.

November 26, 2008

சில காதல் கிறுக்கல்கள்

காதலில் விழுந்தேன்-ஆம்
அன்று வீழ்ந்தவன் தான்
இன்றும் கூட எழாமலிருக்கிறேன்.

என்னை காதலிக்கிறாய் என்றதால் உன்னை மணப்பேன் என்றேன்
என்னை மணப்பேனென்றால் நான் என்னவென்பேன்?

காதல் சுகமானது என்றாய்
உன் பிரிவிலல்லவா புரிந்தேன் அது எத்தனை சோகமானது என்று.

காதல் சுகமானது தான்;
கல்யாண கால்கட்டிற்கு பின்னல்லவா தெரிகிறது

காதல் (குடும்ப) சுமையென்று!

November 23, 2008

இங்கிலாந்திற்கு எமனான டக்வர்த்-லூயிஸ்!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் ஒருநாள் போட்டித் தொடரில் இன்று இங்கிலாந்து மீண்டும் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது(இதனை ஒரு வெற்றி என என்னால் கருத இயலவில்லை)இதன் மூலம் இந்திய அணி 4-0 என இந்த தொடரையும் கைப்பற்றியுள்ளது.அதோடு அணித்தலைவராக கெவின் பீட்டர்சனின் தெற்கு ஆசிய நாடுகளின் முதல் சுற்றுப்பயணமே தோல்வியில் ஆரம்பித்துள்ளது.

இன்று மழையினால் பலமுறை தடைபட்டு 28 ஓவர்கள் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் இந்தியா 166 ஓட்டங்கள் எடுத்தது பதிலுக்கு இங்கிலாந்து 178 ஓட்டங்கள் எடுத்தது.இந்தியாவை விட இங்கிலாந்து 12 ஓட்டங்கள் அதிகமே எடுத்திருந்தது. அப்புறம் எப்படி இந்தியா வெற்றியடைந்தது என்பதை சர்வதேச கவுன்சிலடமும்,டக்வர்த்-லூயிசினிடமும் தான் கேட்க வேண்டும்.

இந்த தொடரின் மூன்றாவது ஆட்டத்திலும் இந்திய அணியை விட இங்கிலாந்து அணி(மொத்த ஓட்டங்களைப் பார்க்கையில்)அதிக ஓட்டங்களையே பெற்றிருந்தது.என்றாலும் அந்த போட்டியிலும் தோல்வியடைந்ததாகவே அறிவிக்கப்பட்டது.

டக்வர்த்-லூயிஸ் கணக்கு வழக்கு கிரிக்கெட் விமர்சகர்களிடேயே பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.அஜய் ஜடேஜா உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலரும் ஏமாற்றம் தெரிவித்திருக்கிறார்கள்.

டக்வர்த்-லூயிஸ் முறை கிரிக்கெட்டின் சுவாரஸ்யத்தை மேலும் குறைப்பதாகவே கருதப்படுகிறது.

டக்வர்த்-லூயிஸ் முறை குறித்து விரிவாக இங்கே தெரிந்துகொள்ளலாம்.

November 21, 2008

பாப் பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்!!!

ஆங்கில பாப் உலகின் ராஜா என அழைக்கப்படும் உலகப் பிரசித்தி பெற்ற பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் மிக்கயீல் (Mikaeel) என தனது பெயரை மாற்றியிருக்கிறார் அதோடு இன்று லாஸ் ஏஞ்சல்ஸில் இஸ்லாம் மதத்தை தழுவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதியதாக அவர் வெளியிடவிருக்கும் ஒரு இசை ஆல்பத்தின் தயாரிப்பாளர் மூலம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

அதோடு நிற்காமல் யூதர்களை இரத்தம் குடிக்கும் காட்டேறிகள் எனவும் கூறியிருக்கிறார்.உலகை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் எனவும் சாடியிருக்கிறார்

வளைகுடா நாடான பஹ்ரைனின் செயற்கை தீவு ஒன்றில் நிலங்களை வாங்கியிருப்பதாகவும் விரைவில் அங்கு குடியேறவிருக்கிறார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும் அவரது ரெக்கார்டிங் ஸ்டுடியோவையும் பஹ்ரைனிற்கே மாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.பிறப்பால் அமெரிக்கராவார் மிக்கயீல் என்ற மைக்கேல் ஜாக்ஸன்

November 20, 2008

தோனி செய்தது சரியா?

என்னய்யா இது டக்காம் லூசாம் ஆட்ட நடுவர்கள் ஊடால பேசிக்கிறாங்க, திடீர்னு பாத்தா வெளாடிகிட்டு நின்ன பசங்க எல்லாம் ரூமுக்குள்ள போய்ட்டானுக.அப்புறம் பாத்தா ஹர்பஜன் கிட்ட பேட்டி எடுக்குறாரு மூத்தவரு ரவி சாஸ்திரி.அப்புறம் தான் புரியுது இந்தியா ஜெயிச்சுபுட்டாங்கனு! இது என்ன கிரிக்கெட் தான இல்ல வேற என்னவுமா?

இங்கிலீஸ் அணிய விட நம்ம ரன் கொஞ்சமில்ல அடிச்சு இருக்கோம் அப்புறம் எப்படி இப்படி நம்ம ஜெயிச்சுட்டோம்னு நண்பர்கள் பல பேருக்கு புரியவேயில்லை.(இது தான் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய விளையாட்டோ?)

டக்வர்த்-லூயிஸ் முறையில் இந்திய அணி இன்று கான்பூரில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மைதானத்தில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்ட போது டக்வர்த்-லூயிஸ் வரையறையின் படி நிறைவுபெற்ற 40 ஆவது ஓவரில் இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 16 ஓட்டங்கள் அதிகம் பெற்றிருந்த படியால் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மைதானத்தில் ஒளிவிளக்கு இருந்தும் அதனை உபயோகிக்க இயலவில்லை இந்த இரு அணிகளுக்கும்.ஒவ்வொரு ஆட்டம் துவங்கும் முன்னர் செயற்கை ஒளியை ஆட்டத்தினிடையே தேவைப்பட்டால் உபயோகிப்பது குறித்து முடிவு செய்யும் உரிமை இரு அணி தலைவர்களுக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த முடிவு ஆட்டம் துவங்கும் முன்னர் எடுக்கப்பட வேண்டும்.ஆட்டத்தின் இடையே முடிவெடுக்கவியலாது.

கான்பூரில் இது போன்ற தட்பவெப்ப காலங்களில் பனிமூட்டம் சற்று அதிகமாகவே காணப்படும் என போட்டி அமைப்பாளர்கள், ஆட்ட நடுவர் இந்திய வீரர்கள் அனைவரும் அறிந்திருந்த ஒன்று தான்.இங்கிலாந்து அணியிலும் சிலர் அறிந்திருக்கலாம் அறியாமலுமிருந்திருக்கலாம்.

தோனி ஆட்டம் துவங்கும் முன் டாஸ்(பூவா தலையா) இடும் போதே ரவி சாஸ்திரிக்கு அளித்த பேட்டியில் பனிமூட்டம் குறித்தும் டக்வர்த்-லூயிஸ் முறை உபயோகப்படுத்தப்படலாம் என்பது குறித்தும் தெரிவித்திருக்கிறார்.(இத்தனைக்கும் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 50ஓவர்களிலிருந்து ஒரு ஓவரும் குறைக்கப்பட்டது)கான்பூரின் தட்பவெப்பநிலையைக் குறித்து நன்கு அறிந்திருந்த தோனி ஏன் செயற்கை ஒளிவிளக்கு பயன்படுத்துவது குறித்து இங்கிலாந்து அணி தலைவர் பீட்டர்சனுடன் விவாதிக்கவில்லை?இது தான் ஒரு வீரனுக்கு அழகா?பீட்டர்சன் இது குறித்து கேட்டாரா என தெரியவில்லை.

ஆனால் உணவு இடைவெளியின் போது நடுவர்களிடம் உணவு இடைவேளை நேரத்தை குறைக்கும்படி கேட்டிருக்கிறார்.அதற்கு ஆட்ட நடுவர்கள் அப்படி செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதிக்காது என்று தெரிவித்திருக்கிறார்கள்.(ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அப்படி கூறவில்லை என Cricinfo தெரிவிக்கிறது)

தட்பவெப்பநிலை குறித்து நன்கு அறிந்திருந்த நடுவர்கள் பூவா தலையா போடவே 15 நிமிடம் தாமதம் காட்டியிருக்கிறார்கள்.பூவா தலையாவிற்கு பின்னரும் ஆட்டம் துவங்க 20 நிமிட கால தாமதம்.உணவு இடைவேளை 30 நிமிடம் வேறு. இப்படி நேரத்தை வீணாக்கிவிட்டு இறுதியில் போதிய வெளிச்சம் இல்லையென்று குண்டைத் தூக்கிப்போட்டது ஏற்றுக் கொள்ளும் படியில்லை.

இதில் சந்தோசம் இந்திய அணி வீரர்களுக்கும்,போட்டியை போட்டியாக பார்க்காத சில ரசிகர்களுக்கு மட்டுமே.நிச்சயமாக இங்கிலாந்து அணி சந்தோஷப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆட்ட விமர்சகர்களான ரவி சாஸ்திரி,டேவிட் லாயிட் உள்ளிட்ட பலரும் அதிருப்தியே தெரிவித்திருக்கிறார்கள்.

செயற்கை ஒளிவிளக்கு உபயோகிப்பது பற்றிய முடிவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அணித்தலைவர்களிடம் அளிக்காமல் அதனைக் கட்டாயப்படுத்த வேண்டுமென கருத்து சொல்லியிருக்கிறார் ரவிசாஸ்திரி அவர்கள்.அவர் சொல்வதிலும் உண்மை இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

ரசிகர்கள் அவ்வளவு சிரமமெடுத்து ஆட்டத்தை ரசிக்க குழுமியிருந்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது என்றால் ஏமாந்து போயிருக்கமாட்டார்களா.இத்தனைக்கும் இன்று நடந்த போட்டியில் மைதானம் 30 ஆயிரத்திற்கும் மேல் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.

யாரை குற்றம் சொல்வது! செயற்கை ஒளிவிளக்கைக் குறித்து ஒரு தீர்க்கமான முடிவெடுக்காத சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலையா? இல்லை தெரிந்திருந்தும் பீட்டர்சனுடன் விவாதிக்காத தோனியையா? இல்லை கால தாமதம் செய்ய காரணமாயிருந்த ஆட்ட நடுவர் ரோஷன் மஹானமாவையா?(மைதான நடுவர் இல்லை)

November 19, 2008

ஹரிஹரனின் காதல் வேதம் பாடல்கள்

பிற மொழி இசை ஆல்பங்களுடன் ஒப்பிடுகையில் தமிழில் இசை ஆல்பங்கள் வெளிவருவது மிகக் குறைவு. எனினும் நல்ல இசை ஆல்பப் பாடல்களுக்கு இன்றும் கூட வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.அந்த முறையில் 1998ல் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வைர வரிகளுக்கு திரு.உத்பால் பிஸ்வாஸ் இசையமைத்து ஹரிஹரனும் சுஜாதாவும் பாடி வெளியான காதல் வேதம் இசை ஆல்ப பாடல்கள் என் மனதை விட்டு இன்றும் கூட நீங்காமலிருக்கின்றன.

அவற்றில் சிலவற்றை youtube வீடியோவாக மாற்றியுள்ளேன். இதமான இசையை ரசிப்பவர்கள் இது போன்ற பாடல்களுக்கு மனதை பறிகொடுப்பது நிச்சயம்.


கண்ணில் என்னென்ன மயக்கம்


நீ என்பதில் நானும் அடங்கும்


நட்சத்திர பூங்காவில் நீ மட்டுமே வெண்ணிலா


மலையும் நதியும் நிலமும் ஒருநாள் மறையும் காலம் வந்தாலும்


இரு கண்ணும் தூங்காமலே


அழகான காதல் நிலா


என் நெஞ்சில் தூங்கவா நிலாவே

கருப்புச் சாதனையாளர்கள்

கருப்பர்கள் என்றால் கேவலமா?

தொன்று தொட்டே கருப்பர்கள்/கருப்பினத்தவர் என்றாலே அடிமை என்றோ அல்லது மிகவும் கீழ்த்தரமாகவோத் தான் கருதப்பட்டு வருகிறார்கள். ஆப்பிரிக்காவில் தொடங்கி அமெரிக்கா வரை இந்த பாகுபாடு இருந்தே வருகிறது.அவர்களுக்கு பிற மக்களோடு சகஜமாக பழகவியலுவதில்லை.கருத்துக்களைப் பரிமாறி கொள்ள இயலுவதில்லை.

இந்த பிரிவினையை மாற்றப் போராடிய ஆபிராஹாம் லிங்கன்,நெல்சன் மண்டேலா,மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் போன்றோரை உலகம் அத்தனை எழுதில் மறக்கவியலாது.

அவ்விதம் தங்கள் வாழ்க்கையில் தங்கள் திறமையால் பல வெற்றிகளை ஈட்டிய/ஈட்டிக் கொண்டிருக்கும் உலக புகழ் பெற்ற சில கருப்பு முகங்கள் இங்கே.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கூறியது போன்று மக்கள் அவர்களது நிறத்தினால் மதிப்பிடப்படக்கூடாது அவர்களின் செயல்களால் மட்டுமே மதிப்பிடப் பட வேண்டும் என்பது மிகச் சரி;அதற்கு இங்கே தொகுக்கப்பட்டுள்ள கருப்பினத்து/கருப்பு உலக நாயகர்களே சாட்சி.
ஆனாலும் இன்றும் கருப்பு- வெள்ளை என்ற பாகுபாடு இருக்கத்தான் செய்கிறது.
Nelson Mandela, The Great President of South Africa and Nobel Laureate

Martin Luther King Jr
APJ.Abdul Kalam, Former India President and Scientist
Abrahah Lincoln, Former US President
Barak Hussein Obma-US President Elect 2008
Isaignani Maestro Ilayaraja, King of Music
Kofi Annan, Former UN Sec.General
Mr.K.R.Narayanan, Former Indian President
Prof.Solomon Paappaya
கருப்பு தங்கம் Kavipaerarasu Vairamuthu, Lyricist and Poet
ARR
Condoleeza Rice, US Secretary of State
Michael Johnson, USA, 4 time Olympic Gold Medallilst

Carl Lewis, USA, 9 time Olympic Gold Medalist
Jesse Owens, USA needs no introduction
Mohd Ali, Boxer
Makelele, French Footballer and Chelsea
Michael Jordan the best basket ball player ever
Mahesh Bhupathi, Indian Tennis Player
Shaun Wright Philips of England
Brian Lara of the West Indies
Nicolas Anelka, French footballer and Chelsea
Michael Jackson, king of POP music
Pele the Great football legend, Brazil
Holyfield, Boxer
Leander Paes, Olympic Bronze Medallist, Indian Tennis
Heskey with David Beckham, English Footballer
Yuvan Shankar Raja, Musician and Vocalist
Ashley Cole of the England Football and Chelsea
Samuel Eto of the Cameroon Football and Barcelona
Tyson, The Boxer
Clive Lloyd, West Indies Cricket Legend

Tiger Woods of the USA Golf
Oprah Winfrey, TV Show Host
Ronaldinho Of the Brazil Football
Richie Richardson of West Indies Cricket
Sol Campbell of the England Football
Lewis Hamilton Formula One Racer,UK
Serena Williams of the USA Tennis
Courtney Walsh Of West Indian Cricket
Laila Ali, Boxer D/O Mohd Ali, Boxer
Jimmy Adams of West Indies Cricket
Venus Williams of the USA Tennis

Thiery Henry of the France Football and Barcelona
Janet Jackson, Vocalist and Musician. Sister of Michael Jackson

Didier Drogba of the Ivory Coast Football and Chelsea

Curtly Ambrose of the West Indies Cricket

James Blake of the USA

Rio Ferdinand of England Football and Manchester United

Vivian Richards of West Indies Cricket

Naomi Campell, Model

Related Posts with Thumbnails