Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

August 03, 2010

லேட்டஸ்ட் ஆத்திச்சூடி

ஔவையார்னா யாருன்னு கேக்கிற அளவிற்கு தான் இன்னைக்கு நிலைமை பரவலா இருக்குது.பள்ளிப்பருவத்தை திரும்பிப் பார்த்ததில் ஔவையார் மீண்டும் நினைவிற்கு வந்தார்.

இன்னைக்கு இருக்கிற காலகட்டத்தில் ஔவையார் இருந்திருந்தால் இப்படியெல்லாம் யோசித்திருப்பாரோ என நான் யோசித்தது தான் இந்த லேட்டஸ்ட் ஆத்திச்சூடி.

கொஞ்சம் மொக்கை தான்... பொறுத்தருள்க. ஔவையாரின் ஒரிஜினல் ஆத்திச்சூடியையும் கீழே இணைத்திருக்கிறேன்.

ரட்டை செய விரும்பு

ர்குட் இல்லன்னா சினம்

யல்வது கற-இதத்தான நம்ம கறைவேட்டிகள் நேர்மை தவறாம பண்ணிக்கிட்டு இருக்காக

வது நமக்கேன்

ண்மை விளம்பேல்(உண்மையை சொல்லாதே)

ன் உறக்கம் கைவிடேல்

ன் எழுத்து இகழேல்(என் பதிவை மொக்கையா இருந்தா கூட படிக்காமல் இருக்காதே)

ற்பது... (கையூட்டு) ஏற்பது புகழ்ச்சி

யா வருமுன் உண்(அப்பா வந்தா அடி தான விழும்)

டன் பிறப்போடு ஒழுகு(ஐயா கட்சியும், அம்மா கட்சியும் இதத்தான பண்றாக)

டி ஒளியேல்(இப்ப உதவின்னு கேட்டா பல பேர் என்னமா ஓடுறாங்க)

வையார் பேசேல் (இன்னைக்கு ஔவையார்னா வட சுட்ட பாட்டியான்னு கேக்கிற அளவுக்கு இருக்குது!!)

அஃக்கப்போர் சுருக்கேல்

கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ :))

---

உயிர் வருக்கம்

1. அறம் செய விரும்பு

நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.

2. ஆறுவது சினம்

கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

3. இயல்வது கரவேல்

உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.

4. ஈவது விலக்கேல்

ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே

5.உடையது விளம்பேல்

உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

6. ஊக்கமது கைவிடேல்

எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்

கணித, இலக்கண நூல்களைத் தவிற்காமல் நன்கு கற்க வேண்டும்.

8. ஏற்பது இகழ்ச்சி

இரந்து வாழ்வது இழிவானது.அதனால் யாசிக்கக் கூடாது.

9. ஐயம் இட்டு உண்

யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுக

உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடுபொருந்துமாறு நடந்துகொள்.

11. ஓதுவது ஒழியேல்

நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல்

ருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13. அஃகஞ் சுருக்கேல்

அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.


நன்றி: தமிழ் விக்கி

June 23, 2010

தமிழ்ச் செம்மொழி மாநாடு அவசியம் தான்


உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு நிச்சயம் அவசியம் தான் தமிழகத்துக்கு.

வறுமைக் கோட்டிற்கு கீழ்(அது என்ன கோடுன்னு எல்லாம் கேக்கப்பிடாது; ஒருநாளைக்கு ஐம்பது ரூபாய்க்கும் குறைவான வருமானம் பெறுபவர்கள் என்கிறது விக்கி) இன்னும் தமிழக மக்கள் இருக்கின்ற நிலையில் இந்த மாநாடு நிச்சயம் தேவை தான்.

ஒரு வேளை சோற்றுக்கு சிரமப்படும் தமிழன் இன்னும் தமிழகத்தில் இருக்கையில் 350-380 கோடிக்கு ஒரு மாநாடு மிக அவசியமான ஒன்றே.

அரசு தமிழ் பள்ளிகள் பலவற்றில் நூறு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கின்ற நிலை இன்னும் தொடர்கையில் தமிழ் மாநாடு கண்டிப்பாக தேவை தான்.

ஒருபுறம் இலவசங்களை வாரியிறைத்து உழைப்பவர்களையும் சோம்பேறி ஆக்கியதை மறைக்க "உரைத்து வாழ்ந்தோம் உழைத்து வாழ்வோம்" என பாடல் எழுதி ஊரை ஏமாற்ற நிச்சயம் மாநாடு தேவை தான்.

ஈழத்தில் இனப்படுகொலையின் போது 39+1 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா நாடகம் நடத்தியதற்கு மாற்றாக இனியவை 40 என நாடகம் ஆட அவசியம் இந்த மாநா(டு)டகம் தேவை தான்.

கிராமங்கள் பலவற்றில் அரசுப் பள்ளிகள் இல்லாத நிலையில், அப்படியே இருந்தாலும் சரியான வசதிகள் இல்லாத நிலையில் இத்தனை கோடிக்கு தமிழ் மாநாடு தேவை தான்.

மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும், சூரியன் பண்பலையும் சொல்லாத தமிழின் சிறப்பை இந்த மாநாடு சொல்லும் என்பதால் கூட இந்த மாநாடு நிச்சயம் தேவையான ஒன்று தான்.

பள்ளிக்கு சென்று களைப்பாக இருக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க காரணம் வேண்டுமென்பதால் நிச்சயம் மாநாடு தேவை தான்.

மாநாட்டு சுவாரஸ்யங்கள் சில

மாநாட்டின் தொலைக்காட்சி ஒளிபரப்பில் பேசிக் கொண்டிருந்தவர் ஒருவர், ஹலோ மைக் டெஸ்ட் ஒன்,டூ, த்ரீ டெஸ்ட் என்றார். இதில் எங்காவது தமிழ் இருக்கிறதா!! முதல்ல மைக்குக்கு என்ன தமிழ்னு சொல்லுங்க.

மாநாட்டின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தினை இருட்டடிப்பு செய்து தேசிய கீதத்தை பாடவிட்டு இந்திய இறையாண்மையையும் காட்டிவிட்டார்கள் இந்திய தமிழ் விசுவாசிகள். பிரதீபா பாட்டில் அம்மா கோவிச்சிக்கும்னு தமிழ்த்தாய் வாழ்த்தை பாட விடலயோ என்னமோ!! அடச்சீ...

மாநாடு அவசியம் தான். நான் கேட்பதெல்லாம் அதற்கு எதற்கு பள்ளிகளுக்கு விடுமுறை? ஏன் இத்தனை கோடி பண விரயம்?

இன்னொரு டவுட்டு... திரைப்படங்களுக்கும், கடைகளுக்கும் தமிழ்ப் பெயரைத் தான் வைக்க வேண்டும் என்பவர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின் என்பது தமிழ் பெயரா?!!

June 14, 2010

Waka வக்கா Vs செம்மொழிப்பாடல்

Waka வக்கா அப்படின்னா எதும் கெட்ட வார்த்தை இல்லீங்க... உ.கோ.கால்பந்திற்கான தீம் சாங்காம்

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் வந்ததும் வந்தது. ஆட்டம் பாட்டம், கொண்டாட்டத்திற்கு குறைவேயில்லை. போட்டிகள் ஆரம்பிக்கும் பல மாதங்கள் முன்னமே அதற்கான ஆர்ப்பாட்டங்கள் துவங்கியிருந்தன.

அதற்கென்றே பிரத்தியேகமாக இசையமைக்கப்பட்ட பாடல்களும் உண்டும். குறிப்பாக கொலம்பியப் பாடகி ஷகிராவின் Waka Waka பாடலும் கெனான் k'naan @ Keinan Abdi Warsame என்ற சோமாலிய-கனடா பாடகரின் Wave your Flag என்ற பாடலும் தான் பிரபலம்.


இதிலும் நம்மூரைப் போன்று அரசியல் செய்கிறார்கள் ஆப்பிரிக்கர்கள். ஆப்பிரிக்காவில் நடக்கும் ஒரு போட்டிக்கு ஏன் கொலம்பியாவைச் சார்ந்த ஒருவர் பாடல் பாட வேண்டும் என பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்.

உலகம் முழுவதும் இருந்து சிறந்த 32 அணிகள் பங்கு கொள்ளும் ஒரு கூடுகைக்கு கொலம்பியர் பாடினால் என்ன அரபிக்காரர் பாடினால் என்ன? எல்லா இடத்திலயும் அரசியல் ஒண்ணு தான் போலிருக்கு :(
ரஹ்மான் இசையமைத்து, கௌதம் இயக்கிய செம்மொழி மாநாட்டு மையக்கருத்துப் பாடலுக்கும்(தீம் சாங் அப்படின்றதுக்கு இது தானங்க சரியான தமிழ்!!) இதே போன்று பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்.

ஏன் மலையாளி ஒருவர் இயக்க வேண்டும்,பிற மாநிலத்தவர் ஏன் பாட வேண்டும். அப்படியே எவரும் பாடலாமெனில் ஏன் பாடும் நிலா பாலு பாடவில்லை, மெட்டு சரியில்லை, பழைய மெட்டு என பலருக்கு பல வித கேள்விகள் கருத்துக்கள்.

அமெரிக்க ராப் பாடகர் ப்ளாசே ஏன் பாடுகிறார் என வேறு சந்தேகம் பலருக்கு. ப்ளாசே என்பது அவரது தற்போதைய பெயர் தான். "லக்ஷ்மி நரசிம்ம விஜய ராஜகோபால சேஷாத்ரி ஷர்மா ராஜேஷ் ராமன்" என்பது தான் அவரது ஆரம்பப்பெயர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ராப் பாணியில் ரஹ்மான் இசையமைத்து ப்ளாசே பாடியிருந்தாலும் அதனை எழுதியதும் அனுமதித்ததும் முத்தமிழ் அறிஞர் என புகழப்படுபவர் தானே.

அதனால் எல்லாப் புகழும், இகழ்ச்சியும் கூட அவருக்கே. அவருக்கு மட்டுமே.

ஆனால் மாநாட்டிற்கு எதற்கு தீம் சாங் என்பது தான் எனக்கு புரியவில்லை.

நன்றி: விக்கி

April 13, 2010

என்னைக்கு தான் தமிழ் புத்தாண்டு?


ஏப்ரல் 14 @ சித்திரை ஒன்றில் தமிழ் புத்தாண்டு அப்படின்னு தான் சொல்லிட்டு இருந்தாங்க; ஆனா இப்போ இரண்டு வருஷமா அரசு உத்தரவால் தை ஒன்றிற்கு புத்தாண்டு மாற்றப்பட்டிருக்கிறது.

இந்த கத இன்னைக்கும் பல பேருக்கு தெரியாம இருக்கிறது இன்னமும் சுவாரஸ்யமான விஷயம்.

ஏற்கெனவே ஆங்கிலத்தில சோலார் காலண்டர் அப்படின்றாங்க, லூனாருன்றாங்க, கிரிகோரியன்றாங்க, மாயன் காலண்டரைக் காட்டி 2012 ல உலகம் அழியும்னு சினிமா வேற எடுத்து பீதிய கிளப்புறாய்ங்க.

பத்து மாசத்தோட ஜீலியஸ் சீசருக்கும், அகஸ்டஸ் சீசருக்கும் சேத்து 12 மாசமாக்கினதாகவும் வரலாறு சொல்லுது அப்படின்றாங்க.

ஆங்கிலத்தில் அப்படின்னா தமிழில் திருவள்ளுவர் ஆண்டு என்று வேறு குறிப்பிட்டு 31 ஆண்டுகளைக் கூட்டிச் சொல்கிறார்கள்.

நாட்காட்டி என்பது பலரது விருப்பு வெறுப்புக்கேற்ப மாற்றப்பட்டு வந்ததாகவே தெரிகிறது. நாட்காட்டிகளை மாற்றியதோடு தற்போது கொண்டாட்டங்களையும் மாற்றி வருகிறார்கள்.

எத்தனை நாட்கள் மாற்றப்பட்டாலும், எத்தனை ஆண்டுகள் மாறினாலும், மனிதன் மனிதத்திலிருந்து மாறாமலிருந்தால் எல்லா நாளும் இனிய நாளாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மலரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

புகைப்படம் நன்றி விக்கி

March 03, 2010

விக்கிபீடியாவும் நானும்

வழக்கமாக கட்டுரைகள் எழுதும் முன்னர் அதற்கு ஆதாரமான தகவல்களைத் திரட்டுவது எனது வழக்கம்.

ஆங்கில கட்டுரைகளைத் தான் பெரும்பாலும் மொழிபெயர்த்திருக்கிறேன். அந்த வகையில் கிரிக்கெட் குறித்த எனது அனைத்து கட்டுரைகளுமே cricinfo அல்லது wikipedia தளத்தின் மேற்கோள்களோடு தான் இருக்கும்.

2008 ல் சச்சின் தனது 19 ஆண்டு கிரிக்கெட் வாழ்வை நிறைவு செய்த போது எனது அனுபவங்களையும் ஆங்கில wikipedia மற்றும் cricinfo வின் தகவல்களையும் ஆதாரமாகக் கொண்டு சச்சின் டெண்டுல்கரின் 19ஆண்டு கால கிரிக்கெட் பயணம் என்ற கட்டுரையை எழுதியிருந்தேன்.

சமீபத்தில் அந்த கட்டுரையின் பெரும்பகுதிகள் தமிழ் விக்கிபீடியாவில் சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கை என்ற தலையங்கத்தின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது.

அதோடு மேற்கோள்களில்  rediff, cricinfo என்ற வரிசையில் மூன்றாவதாக எனது வலைப்பூவின் சுட்டியையும் அளித்திருக்கிறார்கள்.

வழக்கமாக விக்கிபீடியாவில் எவர் வேண்டுமானாலும் தகவல்களைத் தொகுக்க முடியும். அந்த விதத்தில் எந்த புண்ணியவாளனோ எனது மொழிபெயர்ப்பை இணைத்திருக்கிறார் எனவும் இதற்கு பொருள் கொள்ளவியலும்; அல்லது விக்கிபீடியாவினரே கூட தொகுத்திருக்கும் வாய்ப்பும் உள்ளது.

விக்கிபீடியாவிலிருந்து எனது வலைப்பூவிற்கு சிலரின் வருகை இருக்கவே என்னவென்று அலசியதில் சிக்கிய விஷயம் இது.

ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து மொழிபெயர்த்த ஒரு கட்டுரையை தமிழ் விக்கி இணைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான்.

விக்கிபீடியாவிற்கும், எனது மொழிபெயர்ப்பை இணைத்தவருக்கும் நன்றிகள்.
----

பி.கு:

விக்கிபீடியா நடுநிலையின்றி செயல்படுகிறது என்றும் தகவல்களை சரிவர ஆராயாமல் இணைக்கிறது என்றும் பல கருத்துகள் நிலவி வருகின்றன. அது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.

அது ஒருபுறம் இருந்தாலும், ஆங்கிலத்தை ஒப்பிடுகையில், இணையத்தில் கல்வி சம்பந்தமான தமிழ் கட்டுரைகள் வெகு சிலவே என வலைப்பதிவரும், எழுத்தாளருமான பத்ரி அவர்கள் கடந்த வருடம்  http://thoughtsintamil.blogspot.com/2009/06/blog-post_5808.html என்ற பதிவில் ஆதங்கப்பட்டிருந்தார். தமிழ் விக்கிபீடியாவை வளர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அத்தகைய குறையை போக்க வலைப்பதிவர்களும், எழுத்தாளர்களும் முன்வந்தால் இன்னும் சிறப்பான கட்டுரைகள் இணையத்தில் கிடைக்க வாய்ப்பாக அமையும்.

November 29, 2009

தங்லீஷ் பாடல்களும்-பிறைசூடன்,எஸ்.பி.பி யின் கருத்துக்களும்

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "வானம் பாடி" என்னும் நிகழ்ச்சியில் இந்த வாரம் கந்தசாமி திரைப்படத்திலிருந்து அலேக்ரா என்ற பாடலை ஒரு பெண் போட்டியாளர் பாடியிருந்தார்.

பாடலை அறிவிக்கையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடல்: அலேக்ரா, படம்:கந்தசாமி, எழுதியவர்:கவிஞ்ர்.விவேகா என அருமையாகத் தான் ஆரம்பித்தார்; ஆனால் பாடல் பாடப்படுகையில் பாடலின் மீது அத்தனை ஈடுபாடு காண்பிக்கவில்லை.

அது, பாடல் சுருதியில்லாமல் பாடப்பட்டதாலா இல்லை பாடல் வரிகள் பாடும் நிலா பாலுவிற்கு பிடிக்காததாலா என தெரியவில்லை.

எனினும் போட்டியாளர் பாடிய விதத்தை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவே பாடலைக்குறித்தும் சில வரிகள் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் பாலுவிற்கு.... என்னவெல்லாமோ பாடல் எழுதுகிறார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை என நிறுத்திக் கொண்டார்.

கவிஞர். பிறைசூடன் விமர்சிக்கையில் இந்திய பொண்ணுக்கு இத்தாலிய கண் ஒத்து வருமா என்றார். இணையத்தில் இருந்து என்னவெல்லாமோ வார்த்தைகளைக் கோர்த்து தங்கிலீஸ் பாடல்களை எழுதுகிறார்கள். வெகு நாட்கள் இவை நிலைக்காது என்றார்.

இது மாதிரியான தமிழையே வருங்கால சந்ததிக்கு நாம் விட்டுப் போனால் அது தவறு என்றார். மேலும், இறைவனுக்கும், நான் நேசிக்கும் தமிழுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இவற்றைச் சொல்கிறேனேயன்றி பாடல் எழுதிய கவிஞரைக் குறை கூறுவதற்காக அல்ல எனவும் கூறினார்.

முன்னொரு வார வானம் பாடி நிகழ்ச்சியில் வில்லு திரைப்படத்தின் பாடல் குறித்து... 'டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாருமில்லை' என்றெல்லாம் பாடல் எழுதிகிறார்கள் இவற்றையும் இன்றைய சின்னஞ்சிறுசுகள் (புரியாமலேயே) முணங்கிக் கொண்டிருக்கின்றன, இவை எங்கே போய் முடியுமோ என அங்கலாய்த்தார்.

இவை... நிச்சயமாகவே வருங்கால சந்ததிக்கு நாம் விட்டுப் போகிற நல்ல சங்கதிகள் இல்லை தான்.


வானம்பாடி நிகழ்ச்சியின் காணொளி கீழே... சுட்டியை அளித்த பதிவர் சாஷீக்கு நன்றி


@ Yahoo! Video

November 14, 2008

மனிதர்களா விலங்குகளா? தியாகராஜ பாகவதர் பாடல்

மனித குலம் இன்று இத்தனை நாகரீக வளர்ச்சி அடைந்து என்ன பயன்? எங்கு திரும்பினும் கொலைகள்,கொள்ளைகள், பெண்ணினத்திற்கு எதிரான கொடூரங்கள், இன்றும் மாக்களைப் போன்றே திரிகின்றனர் மக்கள்.

இரு நாட்களுக்கு முன்னர் கூட தமிழகத்தின் எதிர்கால தூண்களான மாணவர்களின் கொடூரம் நெஞ்சை உறைய வைக்கின்றது.
இந்த கலி கால கொடுமைகளைக் காணவொண்ணாமல் நாற்பதுகளிலேயே திரு.தியாகராஜ பாகவதர் இப்படிப் பாடிச் சென்றிருக்கிறார்.அப்படியென்றால் அன்றும் இன்றைய நிலைமை தான் போலிருக்கிறது.
ஆறு மாதங்களுக்கு முன்னர் நண்பர்கள் வாயிலாக நானறிந்த தியாகராஜ பாகவதரின் "பூமியில் மானிட ஜென்மம்" என்ற பாடல் இங்கே youtube வீடியோவில்




பாடல் வரிகள் இங்கே

பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காலமும் செல்ல மடிந்திடவோ

உத்தம மானிடராய்
பெரும்புண்ணிய நல்வினையால்
உலகில் பிறந்தோம்
சத்திய ஞானதயாநிதியாகிய
புத்தரைப் போற்றுதல்
நம் கடனே

உண்மையும் ஆருயிர்
அன்பும் அகிம்சையும் இல்லையெனில்
நர ஜென்மமிதே
மண்மீதிலோர் சுமையே
பொதி தாங்கிய
பாழ்மரமே வெறும் பாமரமே

November 13, 2008

சென்னைச் செந்தமிழ் மறந்தேன்!அப்போ நீங்க?

தமிழ் படும் பாடு.

சில வாரங்களுக்கு முன்னர் கூட நண்பரொருவர் தமிழைக் குறித்த ஒரு பதிவு இட்டிருந்தார்.

இருந்தாலும் பல வருடங்களாக நானும் கவனித்து வரும் விஷயங்களை எனக்கு தெரிந்த விதத்தில் எழுத விளைகிறேன்.

இந்த கால இளசுகளுக்கு இந்த நுனி நாக்கு ஆங்கிலம் எங்கிருந்து தான் வருகிறது எனத் தெரியவில்லை.

ஊட்டி விட்டால் - மம்மி

கூட்டிப் போனால்-டாடி

பல்லை இளித்தால்-லவ்வு

சாப்பிடுவது-பிளேட்டில்

நடப்பது-ரோட்டில்

ஓட்டுவது-காரை/பைக்கை

எழுதுவது-பென்னால் (நன்றி : குமுதம் 16.01.2008 இதழ்)

திரைப்படங்களிலும் திரைப்பட பாடல்களிலும் கூட ஆங்கில மோகம் தான் கொடிக் கட்டிப் பறக்கின்றது.இன்று தமிழ் சினிமா உலகம் டப்பிங்கையே நம்பியிருக்கிறது.தமிழ் நடிக நடிகைகள் தமிழைப் பேச தயங்குகையிலே பிற மாநில நடிக நடிகைகள் குறிப்பாக கேரளத்தவர்கள் தமிழ் திரைப்படங்களில்(ஜெயராம், கலாபவன் மணி, மனோஜ் k ஜெயின், மீரா ஜாஸ்மின்) அவர்கள் சொந்த குரலிலேயே பேசுகிறார்கள்.

Take it easy ஊர்வசி,வருகிறான் Remo, எனக்கொரு Girl friend, Dating, suppose உன்னை, Telephone மணிபோல், உனக்கும் எனக்கும் something something, Shivaji the boss,ஒரு கூடை sunlight என பாடல்கள் வேறு ஆங்கில சொற்களையே பெரும்பாலும் கொண்டிருக்கின்றன.
சென்னை செந்தமிழ் மறந்தேன் என பாடல் வேறு வருகிறது. கேவலம் ஒரு பெண்ணுக்காக தமிழையே மறக்க தோன்றுகிறதா இவர்களுக்கு!!! (நாங்க காதலிக்கும் போது மட்டும் தான் இப்படியெல்லாம்னு சொல்லுவார்களோ...அப்படின்னா சரிதானுங்கோ :))

நம்மவர்கள் ஐரோப்பா நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பணி மற்றும் கல்வி விஷயமாக செல்ல வேண்டுமானால் ஆங்கில தேர்வு எழுத வேண்டிய அவசியமிருக்கிறது(IELTS, TOEFL என) ஆனால் அங்கிருந்து வரும் எவர்க்கும் நாம் தமிழ் தேர்வோ அல்லது இந்திய மொழியான இந்தித் தேர்வோ வைப்பதில்லை.ஏனென்றால் ஆங்கிலம் போதுமென்று நாம் நினைப்பதால் தான்.MNC(Multi National Company) களினாலும் ஆங்கில ஆதிக்கம் இன்னும் தொடரத் தான் செய்கிறது.

இதே ஜப்பான், சீனா, ரஷ்யா, போன்ற நாடுகளைப் பார்ப்போமானால் அவர்கள் தாய் மொழிக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.இருந்தும் அவர்கள் அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் அச்சுறத்தலாக இருக்கிறார்கள்.அவர்கள் யாரையும் சார்ந்திருப்பதாக தெரியவில்லை.நாம் தான் ஆங்கில அடிமைத்தனத்திலிருந்து இன்னும் விடுபடுவதாக இல்லை.இன்னமும் கூட திருந்துவதாக இல்லை.

புதிய அமெரிக்க அதிபர் இன்னும் பொறுப்பேற்கவே இல்லை அதற்குள்ளாக அவர் இந்தியாவைக் கண்டுகொள்ளவில்லை பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் அழைக்கவில்லை என கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். மக்கள் தான் இப்படி என்றால் பத்திரிக்கைகளும்,தொலைக்காட்சிகளும் அதைத் தான் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்கின்றன.

அவர் பேச முயற்சித்தார் ஆனால் எனக்கு தான் நேரமில்லை என பிரதமரின் பேட்டி வேறு இதற்கு.நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க இதைப்பற்றிக் கவலைப்பட்டு எதற்கோ தெரியவில்லை!!! (வெளிநாட்டு உறவு தேவை தான்...அதற்கென்று பொறுப்பே ஏற்காத ஒருவர் நம்மை அழைக்கவில்லை என்று கவலைப்பட்டு எதற்கு?) இது ஒன்று போதாதா நமது ஆங்கில,அமெரிக்க அடிமைத்தனத்தைப் பறைசாற்ற.

இப்படியே போனால் ஆங்கில பற்று வராமல் வேறு என்ன வரும்? ஆங்கிலம் வளராமல் தாய்மொழியோ இல்லை இந்திய மொழி "இந்தி"யா வளரும்? நமது தலைமுறையிலேயே இப்படியென்றால் இனி வரும் தலைமுறைகள் தமிழை எப்படிக் காப்பாற்ற போகின்றனவோ தெரியவில்லை.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்..ஆமாம்;இல்லையென்று சொல்லவில்லை அதோடு வந்த மொழியையும் வாழ வைக்கும் எங்கள் தமிழகம்...இது எப்படி இருக்கு?

தமிழர்களுக்குள் எப்போதாவது ஆங்கிலம் பேசுவது தப்பென்று நான் நினைக்கவில்லை ஆனால் எப்போதாவது தமிழில் பேசுவது சரியல்லவே!

வாழ்க தமிழ்!வளர்க ஆங்கிலம்!...ஆம் அப்படித்தான் இருக்கிறது இன்றைய தமிழின் நிலை.
Related Posts with Thumbnails