Showing posts with label தியாகராஜ பாகவதர். Show all posts
Showing posts with label தியாகராஜ பாகவதர். Show all posts

November 14, 2008

மனிதர்களா விலங்குகளா? தியாகராஜ பாகவதர் பாடல்

மனித குலம் இன்று இத்தனை நாகரீக வளர்ச்சி அடைந்து என்ன பயன்? எங்கு திரும்பினும் கொலைகள்,கொள்ளைகள், பெண்ணினத்திற்கு எதிரான கொடூரங்கள், இன்றும் மாக்களைப் போன்றே திரிகின்றனர் மக்கள்.

இரு நாட்களுக்கு முன்னர் கூட தமிழகத்தின் எதிர்கால தூண்களான மாணவர்களின் கொடூரம் நெஞ்சை உறைய வைக்கின்றது.
இந்த கலி கால கொடுமைகளைக் காணவொண்ணாமல் நாற்பதுகளிலேயே திரு.தியாகராஜ பாகவதர் இப்படிப் பாடிச் சென்றிருக்கிறார்.அப்படியென்றால் அன்றும் இன்றைய நிலைமை தான் போலிருக்கிறது.
ஆறு மாதங்களுக்கு முன்னர் நண்பர்கள் வாயிலாக நானறிந்த தியாகராஜ பாகவதரின் "பூமியில் மானிட ஜென்மம்" என்ற பாடல் இங்கே youtube வீடியோவில்




பாடல் வரிகள் இங்கே

பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காலமும் செல்ல மடிந்திடவோ

உத்தம மானிடராய்
பெரும்புண்ணிய நல்வினையால்
உலகில் பிறந்தோம்
சத்திய ஞானதயாநிதியாகிய
புத்தரைப் போற்றுதல்
நம் கடனே

உண்மையும் ஆருயிர்
அன்பும் அகிம்சையும் இல்லையெனில்
நர ஜென்மமிதே
மண்மீதிலோர் சுமையே
பொதி தாங்கிய
பாழ்மரமே வெறும் பாமரமே
Related Posts with Thumbnails