January 28, 2012
ஆஸ்திரேலியா: கவிழ்த்த கிரிக்கெட்டும்; கவர்ந்த லியாண்டர் பயசும்
August 23, 2011
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீழ்ச்சி!!
October 04, 2009
கிரிக்கெட் - புகைப்பட நையாண்டிகள்
August 18, 2009
திராவிட்,பேட்மிண்டன்,சீன வீரர்கள்
2011-உலகக் கோப்பை போட்டிகளுக்கென இளம் அணியை உருவாக்கப் போகிறோம் என்று காரணம் காட்டி 2007 ல் மூத்த வீரர்களை நீக்கியது என்னத்திற்கோ தெரியவில்லை. கேட்டால்... அது போன தேர்வுக்குழு என வடிவேல் பாணியில் ஏதும் காரணம் வைத்திருப்பார்களோ என்னமோ!
ஒருவேளை ஷேவாக் குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்புவாரெனில் திராவிட்டிற்கு அணியில் பங்கு என்னவாக இருக்கும்?
ஐ.பி.எல் போட்டிகளில் அருமையாக பந்து வீசிய 'ஓஜா'வையும் அணியிலிருந்து நீக்கியதற்கு என்ன காரணமோ?
--------------------------------------------
தடகள போட்டிகளானாலும்,பிற விளையாட்டுகளானாலும் சீன வீர வீராங்கனைகள் காட்டும் உற்சாகமும், அர்ப்பணிப்பும், விவேகமும், வேகமும் ஆச்சரியப்பட வைக்கின்றன. ஹைதராபாத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த சர்வதேச இறகுப்பந்து(பேட்மிண்டன்) போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர், பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் தங்கம் வென்றது சீன சிங்கங்களே.
2008 ஆம் ஆண்டு நடந்து முடிந்த பெய்ஜிங்க் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 100 பதக்கங்கள் குவித்து தங்க பதக்கம் பெற்ற முறையில் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்ததும் சீனா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெய்வால் காலிறுதி சுற்றிலேயே வெளியேறினாலும் சர்வதேச போட்டிகளில் காலிறுதி வரை முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெயர் கிடைத்தது.
March 19, 2009
(டிராவிட்)ராகுல்,ரஃபேல்,ரேஸ்(F1)
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ராகுல் டிராவிட், ஹாமில்டனில் நடைபெற்று வரும் நியூசிலாந்திற்கு எதிரான முதல் ஆட்டத்தின் முதல் விக்கெட்டின் கேட்ச் எடுத்த போது டெஸ்ட் போட்டிகளில் மிக அதிக கேட்ச் (181) எடுத்தவர் என்ற சாதனையை சமன் செய்துள்ளார்.
இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் மார்க் வாவ் இந்த சாதனையை செய்திருக்கிறார்.

--------------------------------
உலகின் முதல் தர டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் கலிஃபோர்னியா, இண்டியன் வெல்சில் நடைபெற்று வரும் ஏ.டி.பி மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஆட்டங்களின் காலிறுதிக்கு முந்தைய போட்டி ஒன்றில் அர்ஜென்டினாவின் டேவிட் நல்பான்டியனை எதிர்த்து இன்று ஆடினார். தோல்வியின் விளிம்பில் இருந்த நடால் எவருமே எதிர்பாராத விதம் வெற்றி பெற்றார்.
6-3,5-3, 40-15 என்ற புள்ளியுடன் மேலும் ஒரு புள்ளி எடுத்தால் டேவிட்டிற்கு வெற்றி என்ற நிலை இருந்தது. இரண்டு Match points இருந்தது அவருக்கு. அவற்றில் ஒன்று எடுத்தாலே வெற்றி.
ஆனால்....அடிபட்ட புலியாக நடால் மீண்டு வந்து இரண்டு Match point யையும் முறியடித்து 5-4 என்று ஒன்பதாவது கேமை தனதாக்கினார்.
என்றாலும் டேவிட் 6-6 என்ற கேம் கணக்கில் இரண்டாவது செட்டை டை-பிரேக்கருக்கு கொண்டு சென்றார்.டை-பிரேக்கரில் வெற்றி பெற்றால் ஆட்டம் டேவிட்டுக்கு.
விட்டரா நடால்... இல்லை, வீறு கொண்டு டை பிரேக்கரில் 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் இரண்டாவது செட்டை தனக்கு சொந்தமாக்கி ஆட்டத்தை மூன்றாவது செட்டிற்கு இட்டுச் சென்றார்.
மூன்றாவது செட்டில் டேவிட் நல்பான்டியனை ஓட ஓட விரட்டினார் ரஃபேல் நடால். இறுதியில் 6-0 என்ற கேம்களில் மூன்றாவது செட்டை எடுத்து 2-1 என்ற செட் கணக்கில் டேவிட்டை வீழ்த்தி காலிறுதிக்கும் தகுதி பெற்று,தான் உலகின் முதல் தர வீரன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
இது தான் "முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்" என்பதோ
-----------------------
..jpg)
ஃபார்முலா ஒன் ரேஸ்
மார்ச் 29 அன்று துவங்கவிருக்கும் 2009 ன் ஃபார்முலா ஒன் சீசனில் அதிக ரேஸ்களில் வெற்றி பெறுபவர் சாம்பியனாக அறிவிக்கப்படுவார் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடங்களில் அதிக புள்ளிகள் எடுத்தவரே சாம்பியனாக அறிவிக்கப்பட்டு வந்தார்.2008 ல் அதிக ரேஸ்களில் வெற்றி பெற்றிருந்த போதும், புள்ளிகளின் குறைவால் பிரிட்டனின் லூயிஸ் ஹாமில்டனிடம்,பிரேசிலைச் சார்ந்த ஃபெராரியின் பிலிப்பே மாசா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.





