Showing posts with label கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label கிறுக்கல்கள். Show all posts

October 13, 2013

அகங்காரம் அநாகரீகம்

அமெரிக்கால செத்தாலும்
ஆப்பிரிக்கால செத்தாலும்

அண்டார்டிக்கால செத்தாலும்
ஆய்(ஐ)ரோப்பால செத்தாலும்

பாலைவனத்திலயே செத்தா கூட
பொணம் பொணம் தான

அமெரிக்கால செத்தாலும் பொணம் தான
அமிஞ்சக்கரைல செத்தாலும் பொணம் தான
அமெரிக்கா பொணம்னு சொல்லுவாங்களா - இல்ல
அமிஞ்சக்கரை பொணம்னு தான் சொல்லுவாங்களா

அப்புறமென்ன - நான்
அமெரிக்கால இருக்கேன் - நான்
ஆய்(ஐ)ரோப்பால இருக்கேன்னு
அசிங்கம் பிடிச்ச போல பேச்சு;
அவசியமா இதெல்லாம்!

அகங்காரத்த நான் எனும்
அகங்காரத்த என்னைக்கு
அழிக்கிறியோ அன்னைக்கு தான்
அகம் மகிழும்
அண்டமும் மகிழும்
ஆண்டவனும் மகிழுவான்

September 21, 2013

காகித கிடக்கைகள்

உணரப்படாத விசும்பல்கள்
கண்கள் காணாத கிறுக்கல்கள்
காற்றில் அலைக்கழிக்கப்படுகின்றன
கடற்கரையில் சுண்டலுக்குப் பின்னர்
எவரோ எவருக்கோ எழுதிய கடிதம்

September 10, 2013

பெண்ணியம்? ஒரு கேள்விக்குறி

மின்னும் வளையலும்
ஜொலிக்கும் சங்கிலியும்
முகவுரை முடியுமுன்
முடிவுரை ஆகிப் போகின்றன
கடன் கொடுத்தவள் வரவே
முகூர்த்த வீட்டில்;

தாலியேறியதும் மூளியாகிறாள்
தான் பெற்ற இரவலுக்காக!
திருமணத்திற்கு வந்தவள்!!

July 05, 2012

காலம் - காற்று - கல்லறை


நேற்று போனது
நாளை அறிவாரேது
இருக்கின்ற இன்றேனும்
இயல்பாய் இருப்பவரேது

கண் விழித்தால்
கண் அடைக்குமுன்
கண்ணுக்குள் நின்றவரில்லை
காலமாகி போவதும்
காலம் ஆகிப் போவதும்
காற்றோடு போகிறது

காற்றைப் பிடிக்கக் கூடுமோ - உயிர்
காற்றைப் பிடிக்கக் கூடுமோ
சுவாசம் நின்று போனால்
சுகவாசம் மாறிப் போகுமே

கல்லறையின் வாசல்
கண் முன்னில் இருக்க
கடின வார்த்தைகள் ஏன்
கனத்த இருதயம் ஏன்

மாற்றம் மட்டுமே மாறாதது
எனும் போது - நம்மை
மாற்றா விட்டால்
மனிதராய் இருப்பதெதற்கு

எவருக்காகவோ
ஏதுமில்லா விஷயத்தில்
வீண் தர்க்கமேன்
விட்டுக்கொடுத்தலும்
ஏற்றுக்கொள்ளலும்
ஏற்றம் பெறச் செய்யுமே
எவ்வாழ்க்கையையும்

நேற்று போனது
நாளை அறிவாரேது
இருக்கின்ற இன்றேனும்
இயல்பாய் இருப்பவரேது

நேற்று போனது
நாளை அறிவாரேது
இருக்கின்ற இன்றோ
இயல்பாய் இருப்பவரது

May 04, 2012

விடை தெரியா விசித்திர உலகம்

வரம் வேண்டும் என்றவனுக்கு
வனம் கிடைக்க
வனம் வேண்டும் என்றவனுக்கு
வரம் கிடைக்க

செவியற்றவன்
செவியுடைவனை நோக்கி ஏங்க
செவியுடையவனோ - (சிரமங்களால்) ஏனடா
செவி என அங்கலாய்க்க

பொருள் தேடி அலைபவனுக்கு
இருள் கிடைக்க
பொருள் பெற்றவன்
இன்னல்களால் தவிக்க

எப்போது விடியும்
என சிலர் தவிக்க
எப்போது அடையும்
என பலர் இருக்க

பிள்ளைகள் பிறக்க
ஏங்குபவர்கள் இருக்க
பிள்ளைகள் தொல்லைகள்
என்பவர்களும் இருக்க

படைத்தவனை ஒருபுறம்
பகைப்பவர்கள் இருக்க
படைத்தவனை மறுபுறம்
புகழ்பவர்களும் இருக்க

இப்படியாக
இன்னும் தொடர்கிறது
இவ்வுலகமும்
இந்நிமிடமும்

April 29, 2012

வருவாய் என்று


கண் இமைக்குள்
உன் நினைவே
கண் மூடினால்
உன் கனவே

என் கண்ணில் வழிந்தோடும்
உன் பிரிவின் பாரம் தான்
என் நெஞ்சில் கரைந்தோடும்
உன் பிரிவின் பாரம் தான்
உன் கண்ணை
நான் மீண்டும் காணும் வரை

என் கண்கள் தேடுதே
தினம் வருவாய் என்று தான்
என் நெஞ்சம் ஏங்குதே
உன் வரவை பார்க்கத்தான்
மனம் ஏனோ
ஏதேதோ செய்கிறதே

March 26, 2012

உலகம் எத்தனை விந்தையானது!!!


உலகம் தான் எத்தனை விந்தையானது!!!

உலகம் நாடக மேடையாம்
நாடகமே உலகமாயிருப்பதாக படுகிறது இன்று

உள்ளத்தின் ஆழத்திலிருந்து
உரைப்பவர் அரிதே இன்று

உன்னதமான அன்பை
உதறித் தள்ளும் உலகம் இன்று

உயிரின் விலை அறியாதார்
உடலின் விலை பேசி திரிகிறார் இன்று

உறவுகளை மதியாதார்
உரிமைகளை குறித்து வினவுகிறார் இன்று

உலகம், சுற்றுவதாலோ என்னமோ - மனிதர்
உள்ளொன்று வைத்து புறமொன்று உரைக்கின்றனர் இன்று

உள்ளதைச் சொன்னால் - இல்லை
உன் வாதம் பொய் என்கின்றனர் இன்று

உணர்ச்சிகளுக்கு விலையில்லை
விலைக்கு தான் உணர்ச்சிகள் இன்று

உருவம் பெரிதாகிப் போக
உண்மை சிறிதாகிப் போனது இன்று

உள்ளார்ந்த நேசம் வலிதல்ல
உலகார்ந்த வேஷம் வலிது இன்று

உலகம் தான் எத்தனை விந்தையானது - ஒருபுறம்
உயிர்கள் ஜெனிக்க - மறுபுறம்
உயிர்கள் மரிக்க - உயிரிருந்தும்
உடலளவில்  மனிதர்  மரிக்க

உலகம் தான் எத்தனை விந்தையானது!!!

March 10, 2012

ஏதோ ஒரு வெற்றிடம்


என் வேதனையும் சஞ்சலமும்
என்னோடு மரிக்கட்டும்

என் பெலன் என்னை விட்டுப் போனது
என் ஜீவன் அங்கலாய்க்கிறது

என் எலும்புகள் 
என்னை உருக்குகிறது

என் சரீரம் மரிக்காமலே
சவமாய் போனது

என் நீதி நியாயங்கள் 
என்னையே பரிகசிக்கின்றன.

என் மனசாட்சி
என்னை ஏளனமாய் பார்க்கிறது

ஏதோ ஒரு வெற்றிடம்
என்னுள்ளில் 

என்று மாறுமோ இந்த
எளியவனின் பாடுகள் 

என்று கேட்கப்படுமோ
என் கதறல்கள் 

என் சரீரம் மரிக்காமலே
சவமாய் போனது

February 29, 2012

உன் நினைவில் வாழ்கின்றேன்

என் உள்ளத்தின் ஏக்கங்கள்
உன்னைச் சேருமா
என் உள்ளத்தின் உணர்வுகள்
உன்னை மாற்றுமா

உன் நினைவில் வாழ்கின்றேனே
உன் நினைவில் வீழ்கின்றேனே

ஏனோ என் உள்ளம் உனைத் தேடுதே
ஏனோ என் உள்ளம் நீயின்றி வாடுதே

உன் நினைவில் வாழ்கின்றேனே
உன் நினைவில் வீழ்கின்றேனே

உயிர் இருக்கும் வரையில்
உன் நினைவுகள் என்னுள்
உடல் இருக்கும் வரையில்
உன் முகம் என்னுள்

உன் நினைவில் வாழ்கின்றேனே
உன் நினைவில் வீழ்கின்றேனே 

October 03, 2011

என்ன கேட்பாய்! என்னவென கேட்பாய்!!

எப்படி இருக்கிறாய் என
என்னிடம் வினவினாலும்

என்ன செய்கிறேன் என
என் நண்பனிடம் கேட்டாலும்

என்ன நிகழ்ந்தது என
என் உறவுகளிடம் அங்கலாய்த்தாலும்

என் மனதை நீ அறிவாய்
என நீ கருதினாலும்

என் தலையணையை
என் கண்ணீர் ஈரமாக்கிய
என் தலையணையை - நீ வினவாத வரை

என் கவலையை - நீ
என்றும் விளங்கிக் கொள்ளவியலாது

September 30, 2011

வலைப்பூ - காத்திருப்பு

எண்ணம் எனும் தோட்டத்தில்
எழுத்து எனும் பூ பூக்கும் - தருணம்
ஏனோ இன்னும் வாய்க்கவில்லை

உள்ளுவதையெல்லாம் உடனே
வலையேற்ற வரமுமில்லை

எண்ணம் எனும் தோட்டம்
ஏனோ வாடி நிற்கிறது

எழுதுகோல் எனும்
ஏரைப் பிடித்து
எழுதும் காலம்
எப்போதோ!

பூக்கள் பூப்பது எப்போதோ!!

August 17, 2011

உறங்கும் உணர்வுகள்




உணர்வுகளை எவர் தான் அறிவார் - ஒருவர்
உணர்வுகளை மற்றவர் புரிந்து கொண்டால்
உவகை கொள்ளுமே உலகம்

உணர்வுகள் ஏற்றுக்கொள்ளப் படுமோ - இல்லை
உதைத்துத் தள்ளப்படுமோ என்ற
உள்ளார்ந்த பீதி ஒருபுறம்!

உணர்வுகள் ஏற்றுக்கொள்ளப்படுதலால்
உயரவிருக்கும் - மன
உளைச்சல்கள் மறுபுறம் - என்பவற்றால்
உள்ளுக்குள் உறங்கும் உணர்வுகள் ஏராளம்!!

உணர்வுகளை உள்ளுக்குள் புதைத்து - உயிரிருந்தும்
உயிரற்ற சடலமாய் நீங்குகிறது மனித வாழ்க்கை.  
உள்ளக்கிடக்கைகளை  எவர் அறிவாரோ! 


July 21, 2011

வெற்று வேர்கள்: புதைத்தவர் எவரோ!!



உறவாடிய பொழுதுகளும்
உணர்வாடிய நிமிடங்களும்
உள்ளிருக்க

வெறுமையாய் பரந்து
விரிந்திருக்கின்றன
வெற்று வேர்கள்

தொலைந்து போன தூக்கங்களும்
தொலைதூரமாய் அகன்ற நேசங்களும்
தொலையாமல் இன்னும் உள்ளிருக்க

வெறுமையாய்
விரிந்திருக்கின்றன
வெற்று வேர்கள்

மீள வழியறியாமல்
மேலெழவும் அறியாமல்
மௌனங்கள் மட்டுமே உள்ளிருக்க

வெறுமையாய் பரந்து
விரிந்திருக்கின்றன
வெற்று வேர்கள்

புதைக்கப்பட்டிருக்கும் வேர்களின் 
வலியை உணர்ந்தவர் எவரோ!
புதைத்தவர் எவரோ!!

வேர்கள் நிச்சயம்
வெற்று அல்ல - அவை ஒரு விருட்சத்தின்
வெற்றி
------------

புகைப்படம் நன்றி: அலெக்ஸ்


January 15, 2011

டிஜிட்டல் க(கா)லிகாலம்

ஹாய் என்பதில் துவங்கி பாயில்(Bye) முடியும்
ஹார்ட்வேர் காலம்;
ஹாப்பி நியூ இயர்,
ஹாப்பி போங்கள்(பொங்கல்) என
ஹாஸ்யமாய் மேலும் தொடர்கிறது  

ட்டிலில் கிடந்தவாறே - சோம்பலாய்
நெட்டில் துவங்குகிற தினத்திற்கு

ஆர்க்குட்டின் ஆர்ப்பாட்டமும் - ஐஃபோன்
கேட்ஜட்டின் அதிரடியும் - மொபைல் ஃபோன்

விட்ஜெட்டின் அமர்க்களமும்
வேகம் சேர்க்கின்றன - இவை

ஒருவரின் பட்ஜெட்டை
பதம் பார்க்கும் விஷயங்கள் என்பது
பாதி தூரம் பயணித்த பின்னரே
பலருக்கும் புரிகிறது

இவை போதாதென்று
இன்றைய இளைய தலைமுறையால் ஏற்றப்படும்
குறுந்தகவல்களுக்கும் - குழப்படிகளுக்கும்

மச்சான்களை மட்டையாக்கும்
மல்டி மீடியா மெசேஜ்களுக்கும்

பல்லை விளக்க மறந்தாலும்
நீலப்பல் என்ற ப்ளூடூத்தை மறக்காத
"நீல வானம் நீயும் நானும்" என
நிலவு பாடல் பாடும்
நிலவுப் பிரியர்களுக்கும் குறைவில்லை.


கர்த்தரை மறந்து
கர்சரையும்

கடவுளை மறந்து
கடவுச் சொல்லையும்

ரிசனையை மறந்து
ணினியையும்

நம்பும் காலமிது

இவற்றிற்கு பின்னணியாக
இருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம்
இருக்கும் வரை
இவர்களின் இம்சையும்
இருக்கத்தான் செய்யும் போல

January 07, 2011

எழுதுகிறேன் ஏனோ எழுதுகிறேன்


எழுதுகிறேன்
ஏனோ எழுதுகிறேன்
எவர்க்கோ எழுதுகிறேன்

எல்லைகள் கடந்து
எவர் கண்ணிலேனும் படும்
என்ற கனவில்
எழுதுகிறேன்

எதேச்சையாக
எவர் பார்த்தாலும் - கருத்து
எதுவும் உரைக்காமல்
எகிறிச் செல்கின்றனர்

எடுப்பான புகைப்படங்களுக்கும்
எவரோ எழுதியதை
எடுத்து வெட்டி ஒட்டுதலுக்கும் - முகநூலில்
எழுதப்படாத கருத்துக்கள் இல்லை

எதுவுமில்லா வேடிக்கைகளுக்கு - ஆர்குட்டில்
எழும் ஆரவாரங்களுக்கு குறைவில்லை

எதார்த்தத்திற்கு விலையில்லை - நல்
எண்ணங்களுக்கு மதிப்பில்லை

எனினும் எழுதுகிறேன்
ஏனோ எழுதுகிறேன்

எவர்க்கேனும் உதவியாய் இருக்கும்
என்ற நம்பிக்கையில் - நாளும்
எட்வின் எழுதுகிறேன்
ஏனோ எழுதுகிறேன். 

December 27, 2010

மாற்றம் 'ஏ 'மாற்றம்.


ஏன் இவைகள்?
என்னையும் அறியாமல்
என் நினைவையும் அறியாமல்
என் முடிவுகள் சரிதானா!!

என் வார்த்தைகள் சரிதானா!
என்னை நானே புரிந்து கொள்ள இயலவில்லை.

காயப்படுகிறேனா - இல்லை
காயப்படுத்துகிறேனா - தெரியவில்லை
காரணங்கள் புரியவில்லை

ஏன் இந்த மாற்றம் - சரிதானா

உள்ளதை நான் சொல்கிறேனென்றால்
உலகம் இல்லாததைச் சொல்கிறதா? 

என்னை உலகம் சீரழிக்கிறதா - இல்லை
என்னை நானே சீரழிக்கிறேனா

அழிகிறேனா - இல்லை
அழிக்கப்படுகிறேனா

ஏமாற்றங்கள்... 
மாற்றத்தான் செய்கின்றன
மனித வாழ்க்கையின் போக்கினை

எதிர்பார்ப்புகள் இருக்கும் வரை
ஏமாற்றங்களுக்கு குறைவில்லை

ஏதாயினும், 
இருக்கின்றதை வைத்து நிறைவடைவதே
எனக்கும் எவர்க்கும் அழகு! 

December 19, 2010

வானவில் இல்லா வானம்


   வானூர்தி பயணம்;
   வாயைப் பிளக்க வைக்கும்
   வானுயர்ந்த கோபுரத்தில் வாசம்;
   வா... என்றழைத்தால்
   வாசல் தேடி வரும் சேவைகள்;
   வாராவாரம் ஆரவாரம் - இருந்தும்
   வாடுகையில் - மனம் - வாடுகையில்
   வாழ்க்கையை வர்ணமாக்கும்
   வாசமிகு பந்தங்கள் - எனும்
   வானவில் இன்றி தொடர்கிறது - என்
   வானம் எனும் வாழ்க்கை

September 05, 2010

உன்னருகே நான்


உன்னருகே நான்
என்னை பார்த்தேனே-என்
உள்ளமெல்லாம் மகிழ்ந்தேனே
என்னை நான் மறந்தேனே
மறவாமலே உன்னை நினைத்தேனே

உன்னைத் தேடினேன்
உயிர் வாடினேன்
என்னை நீ பிரிந்ததேன்
என் உள்ளம் விட்டகன்றதேன்.

உயிரெல்லாம் நீ
உணர்வெல்லாம் நீ
உன்னிடமெனை தொலைத்தேனே
இனி என்னை எங்கே தேடுவேன்

.......

கனவில் வந்த யாரோ அவளுக்காக கிறுக்கியது.
....

என்னால் முடிந்த குரலில் Guitar பின்னணியில் பாடவும் செய்திருக்கிறேன் Guitar இசைத்ததும் எட்வினே. இந்த கொடுமைய எல்லாம் கேக்கணும் அப்படின்றது உங்க தலையெழுத்து. ம்ம்ம்

September 04, 2010

எல்லாம் மாயை...


June 27, 2010

ஓர் புது உறவு


உன் வரவால் - இன்று

உள்ளம் வர்ணங்களால் நிறைந்திருக்கிறது

உறவாய் வந்த நீ - எம்

உள்ளம் மகிழச் செய்தாய்


உடலால் விலகியிருந்தாலும்

உள்ளத்தால் உன்னருகிலிருக்கிறேன்

உன் வரவால் உவகை கொள்கிறேன்.


வேற்றுமை நிறைந்த உலகில்

வெறுப்பை விதைக்கும் உலகில்

வேஷமாகிப் போன பாசங்களினிடையில் - நல்மனிதனாய்

வெற்றி சிறக்க என் பிரார்த்தனைகள்

-------

அப்பா அப்படின்ற பதவி உயர்வு அளித்த என் மகனுக்காக...
Related Posts with Thumbnails