Showing posts with label தோனி. Show all posts
Showing posts with label தோனி. Show all posts

July 11, 2010

தோனி,மதராசப்பட்டினம்,கால்பந்து இறுதிப்போட்டி இன்ன பிற

தோனி

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் தோனிக்கு கல்யாணம் ஆயிடிச்சா? என்னது காந்திய சுட்டுட்டாங்களா அப்பிடின்னு காமெடி பண்ற மாதிரி தான் இன்னைக்கு பலரும் கேள்வி கேக்கிறாங்க. அந்த அளவுக்கு 'தல'(அஜீத் ரசிகர்கள் மன்னிக்க... இவரு கிரிக்கெட்டுக்கு தல :)) சத்தமே இல்லாம கல்யாணத்த முடிச்சிருக்காரு. வாழ்த்துக்கள் மிஸ்டர் கூல் தோனி.

மதராசப்பட்டினம்

வெகு நாட்களுக்கு பின்னர் தமிழில் ஒரு சிறந்த திரைப்படத்தைப் பார்த்த நிறைவு திரையரங்கை விட்டு வெளியே வரும் போது இருந்ததை கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்.இந்த மாதிரியான ஒரு திரைப்படத்தை எடுக்க முனைந்ததற்கே திரைப்படக் குழுவினரைப் பாராட்டலாம்.திரையரங்கின் வெளியே இதே விஷயத்தைக் குறிப்பிட்டு பாராட்டிய குடும்பங்களை காணமுடிந்தது(குவைத்தில்). என்றாலும் ராவணனுக்கு வந்த கூட்டம் இங்கு மிஸ்ஸிங்.

அந்த காலத்து மதராஸை அருமையாக காட்டியிருக்கிறார்கள். கலையும் ஒளிப்பதிவும் வெகுவாக பாராட்டப்பட வேண்டியவை. பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷ் அசத்தியிருக்கிறார். என்றாலும் "வாம்மா துரையம்மா" என்ற பாடலுக்கு உதித் நாராயணனை பாட அழைத்து அந்த பாடல் வரிகளை ஏன் அசிங்கப்படுத்தினார்கள் என்பது தான் புரியவில்லை.

"ஆருயிரே" பாடலை படமாக்கிய இடமும், விதமும் வெகு அருமை. 'Amy Jackson' ன் மிக நேர்த்தியான நடிப்பு படத்திற்கு மேலும் சிறப்பு. அவரை இயக்குனர் பயன்படுத்தியிருக்கும் விதம் பாராட்டப்பட வேண்டியது. ராவணனில் அரைகுறை ஆடையுடன் ஐஸின் அங்கங்களை காண்பித்து முகம் சுளிக்க வைத்த ஆபாசம் துளியும் இங்கு இல்லை என்பது ஒரு பெரிய சமாதானம். ஏமி பல இடங்களில் நடிகை நிஷா அமோகாவை நினைவுபடுத்துகிறார்.


ஏமியின் இணையதளமான இந்த http://www.amylouisejackson.com/ தளத்தில் இருக்கும் புகைப்படங்களுக்கும் இந்த திரைப்படத்தில் அவர் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்திற்கும் இருக்கும் வித்தியாசமே இயக்குனரின் வெற்றி.

மறைந்த ஹனிஃபாவும் பிற துணை நடிகர்களும் சிரிக்க வைத்து வயிற்றை பின்னி எடுக்கிறார்கள். குறிப்பாக ஆங்கிலம் கற்கையில் தமிழில் 'அ' விற்கு அடுத்து 'ஆ' என்றால் ஆங்கில 'A' விற்கு பின்னர் 'ஏ' வும் 'B' விற்கு பின்னர் 'பீ' யும் அல்லவா வரவேண்டும் என்கின்ற போது திரையரங்கே சிரிப்பலையில் மிதக்கிறது. மதராசப்பட்டின திரைப்பட குழுவிற்கு வாழ்த்துக்கள்.

கால்பந்து-FIFA 2010 FINALS

ஜூன் 11 அன்று துவங்கிய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று ஜூலை 11 அன்று முடிவுறப்போகின்றன. இதுவரை உலகக்கோப்பையே வெல்லாத நெதர்லாந்து @ ஹாலந்தும் ஸ்பெயினும் இறுதிப்போட்டியில் ஆடவிருக்கின்றன. நெதர்லாந்து ஏற்கெனவே 1974 மற்றும் 1978 ல் இறுதிப்போட்டியில் ஆடியிருக்கிறது. ஸ்பெயினுக்கு இதுதான் முதல் இறுதிப்போட்டி.

ஜெர்மனியைச் சார்ந்த ஆக்டோபஸ் ஒன்று ஸ்பெயினுக்கு தான் வெற்றி என்று கணித்திருப்பதாக சொல்லுகிறார்கள். (இதுல கூடவா மூடநம்பிக்கை) இதற்கு வலுசேர்ப்பார் போல் இதுவரை (நேற்றைய ஜெர்மனி-உருகுவே ஆட்டம் உட்பட) ஆக்டோபஸ் கணித்தவை எல்லாம் பலித்திருக்கிறது.

ஸ்பெயினுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமிருப்பதாக உலகக்கோப்பை போட்டிகள் துவங்கும் முன்னரே எனது பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.எனது கணிப்பும்,ஆக்டோபஸின் கணிப்பும் நிஜமாகுமா என்பது இன்று இரவு தெரிந்து விடும்.

Google-Doodle I Love Soccer

இன்று Google @ கூகுள் இணையதளத்தின் முகப்பில் கால்பந்தினை குறிப்பிடும் விதம் சின்னம்(Logo) ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இன்று முழுவதும் அந்த சின்னம் இடம் பெறும் என கூகுள் அறிவித்திருக்கிறது.

கால்பந்தை கருவாக வைத்து கூகுளின் சின்னத்தை வரையும் 17 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான போட்டியில் தெரிந்தெடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது. அதனை வரைந்தவர் பதினான்கே வயதான பிரான்சை சார்ந்த Barbara Szpirglas. இவர் சர்வதேச அளவில் வெற்றி பெற்றவர்.

மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க பகுதிகளுக்கான வெற்றியாளர் துபாயில் வசிக்கும் பதினேழு வயதான அனிருத் S மேனன் என்பவர். அவர் ஒரு இந்தியர் என்பதில் நமக்கும் பெருமை தான். அவர் வரைந்த கூகுள் சின்னம் கீழே.

பங்களாதேஷ் முதன்முறையா இங்கிலாந்தை ஒருநாள் கிரிகெட்டில் தோற்கடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

May 10, 2010

பவுன்ஸரா அவ்வ்வ்



இது வேற யாருமில்ல; தோனியும் யூசுப் பத்தானும் தான்... . யாரும் இத சீரியஸா எல்லாம் எடுக்கப்பிடாது.

இந்தியால கிரிக்கெட் டீம் இருக்குதா!!!

பவுன்சருக்கு எகிறும் கவுதம் கம்பீர்

முரளி விஜய் என்னமா ஆடுறான்யா ; தோனி அடிக்கிறான் பார்ரா சிக்சர்; ஆஹா செமையா இருக்கில்ல ஆட்டம் ... கிங்கில்ல... சென்னை சூப்பர் கிங்கில்ல என ஆர்ப்பாட்டம் செய்து இரு வாரங்கள் நிறைவடையவில்லை அதற்குள்ளாக சொந்த செலவில் சூனியம் வைத்திருக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் அணியினர்.

ஐ.பி.எல் குறித்து ஆஹா! ஓஹோ! என வாயைப் பிளந்து கொண்டு இருந்தது தான் மிச்சம். இப்போ உலக அரங்கில இந்திய அணியோட முதுகை பிளந்துட்டாங்கல்ல... இதுக்கு என்ன சொல்லப் போற அப்பிடின்னு நண்பர்கள் ஏளனமாய் பார்க்க தொடங்கி விட்டார்கள்.

T20 உலகக்கோப்பை போட்டியில் பிற அணிகளின் அருமையான ஆட்டங்களுக்கும், வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான மேற்கு இந்தியத்தீவு மைதானங்களின் ஆடுகளங்களுக்கும் ஈடுகொடுக்கமுடியாமல் ஆட்டம் கண்டு இருக்கிறது இந்திய அணி.

பணம் கொழித்த ஐ.பி.எல் ல் திறம்பட ஆடிய பலர் சர்வதேச போட்டிகளில் சொதப்பியது நிச்சயம் நன்மைக்கே என்று கூட சொல்லலாம். ஐ.பி.எல் மூலம் (இந்திய) ஆட்டக்காரர்கள் அடைந்தது பணம் மட்டுமே தானே ஒழிய ஆட்டத்திறன்களை அல்ல என்ற உண்மையாவது வெளிவர காரணமாகியிருக்கிறது இந்த தோல்விகள்

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் தோனி அளித்த பேட்டியிலிருந்தே அவரும் அணியினரும் என்ன விதமான மனநிலையில் இருக்கிறார்கள் என புரிந்து கொள்ள முடிந்தது. தோல்விக்கு என்ன காரணம் சொல்லலாம் என தோனி தடுமாறியது வெகு நாட்களுக்கு பின்னர் தற்போது தான்.

எனினும் இந்தியாவில் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்காததும் ஒரு காரணம் என கூறி தப்பிக்க பார்ப்பது சற்றும் நியாயமல்லவே. ஒரு அணித்தலைவராக இருப்பவர், தென்னாப்பிரிக்காவில் முதல் T20 உலகக்கோப்பையை பெற்றுத்தந்தவர், அதன் பின்னர் தென்னாப்பிரிக்காவில் ஐ.பி.எல்-2 ன் போட்டிகளிலும் ஆடியவருக்கு இந்தியாவில் என்ன விதமான ஆடுகளங்களை அமைக்க வேண்டுமென்று தெரியாதா? இல்லையென்றால் மறைமுகமாக இந்திய கிரிக்கெட் ஆணையத்தை சாடுகிறாரா?

இது போதாதென்று சிம்பாப்வே, இலங்கை அணிகளுடனான முத்தரப்பு தொடருக்கு மூத்த ஆட்டக்காரர்கள் பலரும் விலக்கி வைக்கப்பட்டிருப்பது என்னத்திற்கு என்பதும் புரியவில்லை. இப்பவே இந்த ஆட்டம் ஆடுறவங்க இனி என்ன அழுகுணி ஆட்டம் ஆடுவாங்களோ தெரியல.அந்த அணியிலும் ராபின் உத்தப்பா சேர்க்கப்படாதது ஆச்சரியமே.

தேர்வுக்குழு வச்சிருக்காங்களா இல்ல சோர்வா இருக்கிறவங்கள கண்டுபிடிக்கிறதற்காக சோர்வுக்குழு ஏதும் ஸ்ரீகாந்த் தலைமையில வச்சிருக்காங்களான்னு தெரியல.

'இந்தியால கிரிக்கெட் டீம் இருக்குதாடா' அப்பிடின்னு கேக்குற ஒரு காலம் வந்தா இன்னும் நல்லா இருக்கும்னு நண்பன் சொல்றான். அதுக்கு அவன் சொல்லும் காரணம்... கிரிக்கெட்டில் அரசியல்வாதிகளின் குறுக்கீடு, வீரர்கள் தேர்வில் நடக்கும் அரசியல், சூதாட்டம், பணக்கொழுப்பு, அகங்காரம் மற்றும் கிரிக்கெட் அல்லாத விளையாட்டுகளுக்கு இந்தியாவில் கொடுக்கப்படும் மரியாதை. அவன் சொல்றதும் நியாயமாத் தான் இருக்குது... ம்ம்ம் பாக்கலாம்.

இப்பிடி குனிய வைச்சிட்டானுகளே

April 19, 2010

சென்னையின் சூப்பர் கிங் தோனி

ஒரு வழியாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அரையிறுதிக்கு ஏறக்குறைய தகுதி பெற்றுவிட்டது.கடந்த இரு சீசனிலும் சற்று எளிதாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற சென்னை இந்த வருடம் அரையிறுதிக்கு தகுதி பெற ரொம்பவே சிரமப்பட வேண்டியதாகிப் போனது.

ஹெய்டன், தோனி, பத்ரிநாத், ஹஸி என மட்டைவீச்சாளர்கள் பலரும் சரியாக ஆடாததே இதற்கு காரணம்.

சில ஆட்டங்களில் மட்டைவீச்சாளர்களின் சொதப்பலினால் தோல்வியடைந்த சென்னை மற்ற சில ஆட்டங்களில் பந்துவீச்சாளர்களால் தோல்வியடைந்தது.

கடைசி ஆட்டத்தில் சென்னை, பஞ்சாப்பிற்கு எதிராக போராடி வெற்றி பெற்றிருந்தாலும் இதற்கு முன்னர் அவர்களுடனான போட்டியொன்றில் அடைந்த தோல்வியை தவிர்த்திருந்தால் இத்தனை போராட வேண்டி வந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் பஞ்சாப்பிடம் முன்னர் அடைந்த தோல்விக்கும் பதிலடி கொடுத்ததாகி விட்டது. தமிழக அணித்தலைவர் பத்ரிநாத்தும், இந்திய அணித்தலைவர் தோனியும் ஐ.பி.எல் ஆட்டங்களில் அதிக ஓட்டங்கள் குவித்த ரெய்னாவின் அதிரடியுடன் சிறப்பான வெற்றியை சென்னைக்கு அளித்திருக்கிறார்கள்.

இதுவரை சென்னை ஆடிய 14 ஆட்டங்களில் காயம் காரணமாக தோனி மூன்று ஆட்டங்களில் ஆடாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் ஆடாமல் இருந்த மூன்று ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே சென்னை வென்றிருந்தது. மற்ற 11 ஆட்டங்களில் அவர் எடுத்த மொத்த ஓட்டங்கள் 235 மட்டுமே.

இதனையும், துவக்க ஆட்டக்காரராக ஹெய்டன் சரியாக ஆடாமல் இருந்ததையும் ஆட்டம் துவங்கும் முன் தெரிவித்து வருத்தப்பட்டவர் இறுதி ஓவரில் இரு சிக்சர்கள், ஒரு பவுண்டரி உட்பட 18 ஓட்டங்கள் எடுத்து வெற்றியடைந்த பின்னர் தனக்குள்ளேயே பேசிக்கொண்டதும், ஒரு குத்துச்சண்டை வீரரைப்போன்று விறைப்பாக நடந்து வந்ததும், அவரது தாடையில் அவராகவே ஓங்கி குத்தியதையும் என்னவென்று சொல்வதோ!!

அந்த தோனியை பாக்கணும்னா youtube ன் இந்த சுட்டிக்கு போங்க. ipl ன் காப்புரிமையால் காணொளியை இங்கு இணைக்கவியலவில்லை.

தோனி,சென்னை அணியின் மேல் அத்தனை காதல் கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.(வாங்குகிற பணத்திற்கு நாங்கள் அரையிறுதிக்குக் கூட தகுதி பெறவில்லையென்றால் அது சரியல்ல என தோனியே ஆட்டமுடிவில் சொல்லிருந்தாலும்)

மூன்று ஐ.பி.எல் சீசன்களிலுமாக மொத்தம் 1316 ஓட்டங்கள் குவித்து அதிக ஓட்டங்கள் குவித்தவர் என்ற புகழுக்கு சொந்தக்காரரான ரெய்னாவின் பங்களிப்பும், சென்னைக்கு சொந்தக்காரர் முரளி விஜயின் அதிரடி சதமும், அஷ்வின் மற்றும் பொலிஞ்சரின் பந்துவீச்சும் சென்னை அரையிறுதிக்கு தகுதி பெற மற்ற சில காரணங்கள் என்பதையும் மறுக்கவியலாது.

சென்னைக்கு விசில் போடு...தோனி பாணியில் இப்படித்தான் சொல்லத்தோன்றியது தோனியின் இறுதி சிக்சரைப் பார்த்த பின்.

நன்றி: cricinfo, ndtv

October 04, 2009

கிரிக்கெட் - புகைப்பட நையாண்டிகள்





"If I had to last 20 years, I would probably be batting in a wheelchair"

இது இருபது ஆண்டு காலமாக நல்ல உடல் திறனோடு கிரிக்கெட் ஆடி வரும் சச்சினைக் குறித்து அண்மையில் ஒருநாள் போட்டிகளில் 12,000 ஓட்டங்கள் குவித்த ஆஸ்திரேலியர் ரிக்கி பாண்டிங் சொன்னது.

June 14, 2009

தோனி,ரொனால்டோ,அயன்

சரியான இணைய இணைப்பு கிடைக்கப்பெறாமையால் அதிகம் எழுத இயலுவதில்லை. எனினும் கடந்த இரு வாரங்கள் நான் கவனித்ததும் எழுத நினைத்ததுமான சில விஷயங்கள் இவை.

தோனி

ஐ.பி.எல் 20-20 போட்டிகளின் தாக்கம் மாறும் முன்னரே ஐ.சி.சி 20-20 உலகக் கோப்பைப் போட்டிகள் துவங்கியது கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தாலும் பல வீரர்களுக்கு வில்லங்கமானதாகவே தெரிகிறது. குறிப்பாக இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தலைவரான தோனிக்கு இது போதாத காலம் போலும்.



தோனியின் புறத்தோற்றமே நம்பிக்கை அளிக்கும் படியாக இல்லை,மிகவும் சோர்வுற்றவராகவும் நம்பிக்கை இழந்தவராகவும் இருப்பதாகவே படுகிறது.பெங்களூர் அணிக்கு எதிரான ஐ.பி.எல் அரை இறுதி போட்டியில் தான் எதிர்கொண்ட பந்துகளுக்கு தக்கதாக ஓட்டங்கள் எடுக்கத் தவறியது தோல்விக்கு காரணமானது போன்றே மே.இ தீவிற்கு எதிரான முதல் சூப்பர் 8 ஆட்டத்திலும் சீரான ஓட்ட விகிதத்தில் ஓட்டம் எடுக்கத் தவறினார்;ஒரு ரன் அவுட்டையும் தவற விட்டார்;அணியும் தோல்வியைத் தழுவியது.

சரியான ஓய்வும் தன்னம்பிக்கையும் தோனியை மீண்டும் புத்துணர்ச்சி பெறச் செய்யலாம். இங்கிலாந்திற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் எப்படி பங்காற்றுகிறார் என பாப்போம்

ரொனால்டோ

இங்கிலாந்தின் மேன்செஸ்டர் யுனைட்டட் கால்பந்து கிளப்பிலிருந்து 80 மில்லியன் பவுண்ட் (சுமார் 800 மில்லியன் ரூபாய்) பணம் பரிமாற்றத்தில் ஸ்பெயினின் ரியல் மேட்ரிட் கிளப்பிற்காக வாங்கப்பட்டிருக்கிறார் போர்ச்சுக்கல்லைச் சார்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ.



கால்பந்து வீரர் ஒருவர் இத்தனை அதிகமான பணத்திற்கு விலை போவது சரித்திரத்திலேயே இது தான் முதல் முறை.கடந்த மாதம் பார்சிலோனாவிற்கு எதிராக நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியிலும்,கடந்த சீசனிலும் சரிவர ஆடாத பின்னரும் இத்தனை கோடி ரூபாய் ரொனால்டோவிற்காக செலவழிக்கப்பட்டிருப்பது முந்தைய ஆட்டங்களில் அவர் காண்பித்த தனித்திறமைக்கும், ஆட்டத்திறனுக்கும் அளிக்கப்பட்டிருக்கும் பெருந்தொகையாகவே தெரிகிறது.

பார்சிலோனவிடம் ஸ்பானிஷ் லீக் சாம்பியன் பட்டத்தைப் பறி கொடுத்த ரியல் மேட்ரிட் அணி ரொனால்டோவின் வருகையால் பட்டத்தை மீண்டும் கைப்பற்றுமா என பார்க்கலாம்,

அயன்

ஒளிப்பதிவாளர், கேமரா மேன் என பன்முகம் கொண்ட திரு. கே.வி.ஆனந்த் அவர்களின் இயக்குனர் என்ற மற்றொரு முகம் 'அயன்' திரைப்படம் மூலம் வெளிவந்திருக்கிறது. கடத்தல் மூலம் என்ன விதமான பாதிப்பு நாட்டிற்குள்ளும், ஒரு குடும்பத்திற்குள்ளும், கடத்தலில் ஈடுபடும் தனி ஒருவனின் வாழ்விலும் ஏற்படுகிறது என்ற அருமையான கதைக்கருவைக் கொண்டு திரைப்படத்தைத் தீட்டியிருக்கிறார் ஆனந்த் அவர்கள்.



கதைக்கரு பாராட்டும்படி இருந்தாலும் திரைக்கதையில் சீரான வேகம் இல்லாமையும் தொய்வான ஆரம்பமும் படத்தின் மேல் பிடிப்பை ஏற்படுத்தவில்லை. தேவையற்ற இடங்களில் வரும் பாடல்களும் கதையில் இருந்து நம்மை சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளச் செய்கின்றன.

ஆனாலும் பாடல்கள் எடுப்பதற்கு காண்பித்திருக்கும் சிரத்தையும்,ஒளிப்பதிவும்,கேமராவின் கண்ணியமும் கண்களுக்கும்,மனதிற்கும் விருந்தளிக்கின்றன. குறிப்பாக ஆப்பிரிக்க நாடு ஒன்றில் படமாக்கப்பட்ட வைரத்தைத் திருடியவர்களை சூர்யா துரத்துகின்ற காட்சியும்,இறுதி சண்டைக் காட்சியும் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக படமாக்கப்பட்டுள்ளது.

சூர்யாவும்,பிரபுவும் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கின்றனர்.தமன்னாவிற்கு சொல்லும்படியான காட்சிகள் அமையவில்லை.இரு பாடல்களைத் தவிர இசையும் சொல்லும் படியாக இல்லை.அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியான பாணியைக் கடைபிடிக்கும் ஹாரிஸ் அவர்கள் தனது பாணியை சற்றே மாற்றிக் கொண்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

November 20, 2008

தோனி செய்தது சரியா?

என்னய்யா இது டக்காம் லூசாம் ஆட்ட நடுவர்கள் ஊடால பேசிக்கிறாங்க, திடீர்னு பாத்தா வெளாடிகிட்டு நின்ன பசங்க எல்லாம் ரூமுக்குள்ள போய்ட்டானுக.அப்புறம் பாத்தா ஹர்பஜன் கிட்ட பேட்டி எடுக்குறாரு மூத்தவரு ரவி சாஸ்திரி.அப்புறம் தான் புரியுது இந்தியா ஜெயிச்சுபுட்டாங்கனு! இது என்ன கிரிக்கெட் தான இல்ல வேற என்னவுமா?

இங்கிலீஸ் அணிய விட நம்ம ரன் கொஞ்சமில்ல அடிச்சு இருக்கோம் அப்புறம் எப்படி இப்படி நம்ம ஜெயிச்சுட்டோம்னு நண்பர்கள் பல பேருக்கு புரியவேயில்லை.(இது தான் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய விளையாட்டோ?)

டக்வர்த்-லூயிஸ் முறையில் இந்திய அணி இன்று கான்பூரில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மைதானத்தில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்ட போது டக்வர்த்-லூயிஸ் வரையறையின் படி நிறைவுபெற்ற 40 ஆவது ஓவரில் இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 16 ஓட்டங்கள் அதிகம் பெற்றிருந்த படியால் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மைதானத்தில் ஒளிவிளக்கு இருந்தும் அதனை உபயோகிக்க இயலவில்லை இந்த இரு அணிகளுக்கும்.ஒவ்வொரு ஆட்டம் துவங்கும் முன்னர் செயற்கை ஒளியை ஆட்டத்தினிடையே தேவைப்பட்டால் உபயோகிப்பது குறித்து முடிவு செய்யும் உரிமை இரு அணி தலைவர்களுக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த முடிவு ஆட்டம் துவங்கும் முன்னர் எடுக்கப்பட வேண்டும்.ஆட்டத்தின் இடையே முடிவெடுக்கவியலாது.

கான்பூரில் இது போன்ற தட்பவெப்ப காலங்களில் பனிமூட்டம் சற்று அதிகமாகவே காணப்படும் என போட்டி அமைப்பாளர்கள், ஆட்ட நடுவர் இந்திய வீரர்கள் அனைவரும் அறிந்திருந்த ஒன்று தான்.இங்கிலாந்து அணியிலும் சிலர் அறிந்திருக்கலாம் அறியாமலுமிருந்திருக்கலாம்.

தோனி ஆட்டம் துவங்கும் முன் டாஸ்(பூவா தலையா) இடும் போதே ரவி சாஸ்திரிக்கு அளித்த பேட்டியில் பனிமூட்டம் குறித்தும் டக்வர்த்-லூயிஸ் முறை உபயோகப்படுத்தப்படலாம் என்பது குறித்தும் தெரிவித்திருக்கிறார்.(இத்தனைக்கும் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 50ஓவர்களிலிருந்து ஒரு ஓவரும் குறைக்கப்பட்டது)கான்பூரின் தட்பவெப்பநிலையைக் குறித்து நன்கு அறிந்திருந்த தோனி ஏன் செயற்கை ஒளிவிளக்கு பயன்படுத்துவது குறித்து இங்கிலாந்து அணி தலைவர் பீட்டர்சனுடன் விவாதிக்கவில்லை?இது தான் ஒரு வீரனுக்கு அழகா?பீட்டர்சன் இது குறித்து கேட்டாரா என தெரியவில்லை.

ஆனால் உணவு இடைவெளியின் போது நடுவர்களிடம் உணவு இடைவேளை நேரத்தை குறைக்கும்படி கேட்டிருக்கிறார்.அதற்கு ஆட்ட நடுவர்கள் அப்படி செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதிக்காது என்று தெரிவித்திருக்கிறார்கள்.(ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அப்படி கூறவில்லை என Cricinfo தெரிவிக்கிறது)

தட்பவெப்பநிலை குறித்து நன்கு அறிந்திருந்த நடுவர்கள் பூவா தலையா போடவே 15 நிமிடம் தாமதம் காட்டியிருக்கிறார்கள்.பூவா தலையாவிற்கு பின்னரும் ஆட்டம் துவங்க 20 நிமிட கால தாமதம்.உணவு இடைவேளை 30 நிமிடம் வேறு. இப்படி நேரத்தை வீணாக்கிவிட்டு இறுதியில் போதிய வெளிச்சம் இல்லையென்று குண்டைத் தூக்கிப்போட்டது ஏற்றுக் கொள்ளும் படியில்லை.

இதில் சந்தோசம் இந்திய அணி வீரர்களுக்கும்,போட்டியை போட்டியாக பார்க்காத சில ரசிகர்களுக்கு மட்டுமே.நிச்சயமாக இங்கிலாந்து அணி சந்தோஷப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆட்ட விமர்சகர்களான ரவி சாஸ்திரி,டேவிட் லாயிட் உள்ளிட்ட பலரும் அதிருப்தியே தெரிவித்திருக்கிறார்கள்.

செயற்கை ஒளிவிளக்கு உபயோகிப்பது பற்றிய முடிவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அணித்தலைவர்களிடம் அளிக்காமல் அதனைக் கட்டாயப்படுத்த வேண்டுமென கருத்து சொல்லியிருக்கிறார் ரவிசாஸ்திரி அவர்கள்.அவர் சொல்வதிலும் உண்மை இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

ரசிகர்கள் அவ்வளவு சிரமமெடுத்து ஆட்டத்தை ரசிக்க குழுமியிருந்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது என்றால் ஏமாந்து போயிருக்கமாட்டார்களா.இத்தனைக்கும் இன்று நடந்த போட்டியில் மைதானம் 30 ஆயிரத்திற்கும் மேல் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.

யாரை குற்றம் சொல்வது! செயற்கை ஒளிவிளக்கைக் குறித்து ஒரு தீர்க்கமான முடிவெடுக்காத சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலையா? இல்லை தெரிந்திருந்தும் பீட்டர்சனுடன் விவாதிக்காத தோனியையா? இல்லை கால தாமதம் செய்ய காரணமாயிருந்த ஆட்ட நடுவர் ரோஷன் மஹானமாவையா?(மைதான நடுவர் இல்லை)

November 10, 2008

தோனியின் பெருந்தன்மை

ஆஸ்திரேலியா அணியை மிக மிக அற்புதமான ஆட்டத்தால் இந்திய அணி வென்றிருக்கிறது.ஒரு மொத்த அணியாக அனைவரும் இணைந்து எந்த வித ஈகோவும் இல்லாமல் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஆடிய ஆட்டத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய விருதாகவே நான் பார்க்கிறேன்.

குறிப்பாக தோனியின் பெருந்தன்மை மிகவும் பாராட்டப் பட வேண்டிய ஒன்று.

காரணம் ஒன்று:தாதா கங்குலியை நான்காவது டெஸ்ட் ஆட்டத்தின் இறுதி நேரங்களில் அணித்தலைவராக இருக்கும் படி வேண்டிக் கொண்டது.

காரணம் இரண்டு:கும்ப்ளேவை பார்டர்-கவாஸ்கர் கோப்பையை பெறும்படியாக அழைத்தது.

இந்த தொடரில் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் பங்களித்திருப்பது தான் யாரும் ஏன் ஆஸ்திரேலியர்கள் கூட எதிர்பாராத ஒன்று.

முதல் போட்டியில் ஹர்பஜன்-சகீர் கான் சேர்ந்து எட்டாவது விக்கெட்டிற்கு எடுத்த 80 ஓட்டங்கள் இந்த தொடரையே இந்திய அணிக்கு தாரை வார்த்திருக்கிறது.

இந்த தொடர் முழுவதும் பல மறக்கவியலாத சாதனைகளும்,சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன.சகீர்-ஷர்மா இணையின் அபார பந்து வீச்சு,லாரா சாதனை சச்சினால் முறியடிப்பு,நாற்பதாவது சதம் மற்றும் நூறாவது கேட்ச்.கங்குலியின் சதம்,7000 ரன்கள் மற்றும் ஓய்வு.இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்திருக்கும் கும்ப்ளேயின் ஓய்வு.ஆடிய முதல் ஆட்டத்திலேயே அமித் மிஷ்ராவின் ஐந்து விக்கெட்,சேவாக்கின் அற்புத அரை சதங்கள் மற்றும் அனைத்து ஆட்டங்களிலும் அருமையான தொடக்கம்.ஹர்பஜனின் 300-ஆவது விக்கெட்.

தோனியின் முக்கியத்துவம் வாய்ந்த அரை சதங்கள் குறிப்பாக இந்தியா வெற்றி பெற்ற 2(மொஹாலி மற்றும் நாக்பூர்) போட்டிகளிலும் அவர் எடுத்த மூன்று அரை சதங்கள்.கம்பீரின் மொஹாலி சதம், டெல்லி இரட்டை சதம், வாட்சனுடனான மோதல். லக்ஸ்மனின் இரட்டை சதம்.ஹர்பஜன் நாக்பூரில் எடுத்த ஹெய்டன் விக்கெட்,மற்றும் அதிரடி அரைசதம்(இம் முக்கியத்துவம் வாய்ந்த அரை சதம் இல்லையென்றால் இந்தியா இந்த தொடரை வென்றிருக்கவியலாது ), தமிழர் விஜயின் அறிமுகம்,இவர் ரன் அவுட் முறையில் எடுத்த ஹெய்டன் மற்றும் ஹசியின் விக்கெட்கள்.திராவிட் மட்டும் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக ஆடவில்லை, ஒரே ஒரு அரைசதம் தான் இந்த தொடரில்.


அதே சமயத்தில் முதல் டெஸ்ட் போட்டியின் நடுவே வேகப்பந்து வீச்சாளர் சகீர் கான் (சொல்லும் படியான மட்டையாளராகவும் மாறியிருக்கிறார்) கூறியபடி இத்தனை மெதுவான, ஆக்ரோஷமில்லாத ஆட்டம் ஆடும் ஒரு ஆஸ்திரேலிய அணியை இதுவரை நானும் பார்த்ததில்லை.

குறிப்பாக நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் ஆட்டத்தின் நான்காவது நாளில் இந்தியா 166 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் நன்றாக பந்து வீசிக்கொண்டிருந்த வாட்சனை பந்து வீச அழைக்காமல் பகுதி நேர பந்து வீச்சாளர் ஹசியையும், ஒய்ட்டையும் பந்து வீசச் செய்தது ஒரு தவறான அணுகுமுறை என இயன் சாப்பல் உள்ளிட்ட முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.அதன் பின்னர் தான் தோனியும் ஹர்பஜனும் இணைந்து 108 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்கள்.

முதன்முறையாக ஒரு வெற்றி கூட ஈட்டவியலாமல்(பயிற்சி ஆட்டங்களில் கூட வெற்றியில்லை) தாயகம் திரும்பவிருக்கிறது ஆஸ்திரேலிய அணி.

இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட்தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.

Related Posts with Thumbnails