கிறிஸ்தவம், கிறிஸ்தவர்கள் என்கிற பெயர்களில் இன்றைய தேதியில், இந்த மணிப்பொழுதில் நடந்து வருகின்றவையும், அதன்
ஆளுமைகளும், அதிகாரங்களும், மனித
நேயத்தின் மீதும், மக்களின் மீதும், நீதி நியாயங்களின் மீதும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை நாம்
உணர்தல் அவசியம்.
ஆராதனை
என்கிற பெயர்களில் போடுகிற சத்தமும், கூச்சலும் எம்மனிதரையும் முகம் சுளிக்க வைக்கிற ஒன்று. 2015 டிசம்பர் காலங்களில் இதே போன்றதொரு சந்தர்ப்பத்தில் தொலைக்காட்சி
ஊடகத்தில் பணிபுரிந்து வரும் நண்பர் ஒருவர் பகிர்ந்த சில கருத்துகளை குறிப்பிட்டாக வேண்டும்.
“பஜனை என்கிற பெயர்களிலும், கேரல் என்கிற
பெயர்களிலும், பிரார்த்தனை என்கிற பெயர்களிலும்
ஒலிபெருக்கிகளை வைத்துக் கொண்டு ஆன்மீக வாதிகள் என்றழைக்கப்படும் சில கோமாளிகளால்
பாதிக்கப்படுவது முதியவர்களும், குழந்தைகளும், படிப்பில் ஆழ்ந்திருக்கும் மாணவ மாணவிகளும், வியாதியில், மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் தான்” என்று கருத்துப்
பரிமாறியிருந்தார் அவர்.
மத் 6:5 அன்றியும் நீ ஜெபம் பண்ணும் போது மாயக்காரரைப் போலிருக்க வேண்டாம், மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும், வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்.
ஒபாமா
அவர்களின் ஓய்விற்கு முந்தைய உரையை சமீபத்தில் கேட்டுக் கொண்டிருந்தேன். அதில்
அவர் முன்னிறுத்திப் பேசியதும், அதைத்தான்; மனித மனங்கள் மாறாமல், மனிதருடைய இருதயங்கல்
மாறாமல், சட்டங்கள் மாறுவதினாலோ, அமைப்புகள் மாறுவதினாலோ சமுதாயத்தில் அமைதியையும், ஒழுக்கத்தையும் கொண்டு வருதல் இயலாது என்றார்.
மத் 5:8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள்
தேவனைத் தரிசிப்பார்கள்.
Salvation
Army தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஆன்ட்ரே காக்ஸ் The
Whole World Mobilising என்கிற நோக்கத்தில் அதைத்தான்
குறிப்பிட்டு பேசியிருந்தார்.
By
being clean in our heart and to reach out people and to stand for what is right.
மத் 6:7 அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும் போது அஞ்ஞானிகளைப் போல வீண்வார்த்தைகளை
அலப்பாதேயுங்கள், அவர்கள் அதிக வசனிப்பினாலே தங்கள்
ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்
வேதாகம
வசனங்களை படிக்கும் போது அது எதற்கு சொல்லப்பட்டது, யாருக்கு சொல்லப்பட்டது, ஏன் சொல்லப்பட்டது
என்பது குறித்த தெளிவு மிக அவசியம். The 7 Ws are very important Why?
When? What? Where? Who? Which? HoW?
இதுவறியாமல்
வேதாகமத்தை வாசிப்பது குழப்பத்தையே உருவாக்கும். ஒருமுறை ஷார்ஜா AG சபையில் ஆராதனைக்காய்
சென்றிருந்த போது, சங்கீதங்களில் இருந்து ஒரு பகுதியை
வாசித்த பல பட்டங்களைப் பெற்ற ஒருவர் “சேலா” என்பதையும் சேர்த்தே வாசித்தார்.
சேலா
என்பது என்னவென்ற புரிதல் இல்லாமல் வாசித்தவர் போலத்தான் இன்று நம் நிலைமையும். `சேலா` என்பது இசையில் வரும் Interlude.
சங் 3:
2, 4, 8
யாத் 20:8 ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக
ஓய்வு
நாளை ஓய்ந்திருந்து ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டும், இல்லையென்றால் தேவ கோபாக்கினை வரும் என்று அதன் சாராம்சம் புரியாமல், வெறுமனே குற்றம் சாட்டுவதில் இங்கு எதும் மாறி விடப் போவதில்லை.
அப்படியென்றால்
ஓய்வு நாட்களில், Emergency Room களிலும், Critical
Care களிலும், மருத்துவமனைகளிலும், முதியோர் இல்லங்களிலும் பணிவிடை செய்பவர்கள் எல்லாரும் சாபத்தையே
பெறுவார்களா?!!
மத் 12:5 அன்றியும் ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாயலத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள்
என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?
மத் 12:11 உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து அது ஓய்வு நாளில்
குழியிலே விழுந்தால், அதைப் பிடித்து தூக்கிவிடமாட்டானோ?
மத் 12:12 ஓய்வு நாளில் நன்மை செய்வது நியாயந்தான் எனறு சொன்னார்.
இவ்விதம்
நியாயத்தைப் பேசினவருக்கும், பேசுபவர்களுக்கும்
பொதுவாக என்ன சம்பவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே...
மத் 12:14 அவரைக் கொலைசெய்யும் படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைப் பண்ணினார்கள்.
இன்று
வேதாகமம் வாசிக்கப்படுகிறது, காலை 5 மணிக்கு ஜெபம்; மீண்டும் 7 மணிக்கும் 8 மணிக்குமாக பணியிடங்களிலும், ஆலயத்திலும் ஜெபம்; ஆலயத்தை கடந்து
போகையிலெல்லாம் உள்ளே சென்று ஜெபித்து கடந்து செல்வது... என ஜெபமும், வேதாகம வாசிப்பும் முற்றிப் போனதின் விளைவு என்ன?
கீழ்ப்படியாமையும்,நேரந்தவறுதலும், உண்மைக்குப் புறம்பானவைகளைப்
பேசுவதும், தொடர்கிறதென்றால், நாம் ஆலயத்திற்கு செல்வதும், ஒரு நாளைக்கு 5 முறை ஜெபம் பண்ணுவதாலும் என்ன ஆகி விடப் போகிறது.
நீதி 19:1 மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப் பார்க்கிலும், உத்தமனாய்
நடக்கிற தரித்திரனே வாசி.
எனவே
இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு என்பதை
மனதில் கொண்டு, எண்ணங்களில் ஆகாயத்தில் பறக்க ஆசைப்படாமல், நம் சுய கால்களில் நிற்க பழகுதல் அவசியம்.
I கொரி 7:31 இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள்
அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள் போலவும் இருக்க வேண்டும். இவ்வுலகத்தின் வேஷம்
கடந்து போகிறதே.
I யோவான் 3:18 என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும்
உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்
யாக் 2:24-26
‘ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலே
மாத்திரமல்ல, கிரியைகளினாலேயும்
நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே’ ‘அந்தப்படி
ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக் கொண்டு வேறு வழியாய் அனுப்பி விட்ட போது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?’
“அப்படியே, ஆவியில்லாத சரீரம்
செத்ததாயிருக்கிறது போல, கிரியைகளிலில்லாத விசுவாசமும்
செத்ததாயிருக்கிறது.
தேவையிலிருப்போருக்கு உதவுவோம், நம் செயல்களினால் மனிதம் போற்றுவோம்.